tag:blogger.com,1999:blog-43246619396985475502024-03-04T20:48:11.646-08:00தூதுத்துவம்ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-1475398009658460752010-09-18T06:12:00.000-07:002010-09-18T06:12:12.107-07:00சாட் ரூம் (chat room) வழியாக ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!<div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVJsHxbAhEyqBIJQ3ggAaw8gBbHDHYYh5hEfvKnXRvU0mcwW7qBYSpIkZ0DJ8ysiVayePPb7-aNd2Z5wQXLSzE1o4bQLF_xADzLw99S2aCDXYryIVIDW2yxYCBKqTcrj7qJfZ_rPgzmNtU/s1600/index1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVJsHxbAhEyqBIJQ3ggAaw8gBbHDHYYh5hEfvKnXRvU0mcwW7qBYSpIkZ0DJ8ysiVayePPb7-aNd2Z5wQXLSzE1o4bQLF_xADzLw99S2aCDXYryIVIDW2yxYCBKqTcrj7qJfZ_rPgzmNtU/s320/index1.jpeg" /></a>நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட <span id="more-266"></span>வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் சிறுமியாக இருந்தபோது <strong style="color: blue;">“இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”</strong><span style="color: blue;">.</span> பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்மிக்கையை அவர்களுக்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன். உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் <strong style="color: blue;">“இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்”</strong> என்றும் <strong style="color: blue;">“அது பெண்களை துச்சமாக மதிக்கிறது”</strong> என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே <strong style="color: blue;">“இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது”</strong> என்று பயிற்றுவிக்ககப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலும் <strong style="color: blue;">“இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்”</strong><span style="color: blue;"> என்றும்,</span><strong style="color: blue;"> “முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்குகிறார்கள்”</strong> என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை, மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா? என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன். <strong style="color: blue;">ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது. அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன்.</strong> ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது? என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன். <strong> </strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="color: blue; text-align: justify;"><strong>இஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.</strong></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="color: blue; text-align: justify;"><strong>இரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது என் வாழ்க்கையை மாற்றியது. இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் “வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்” என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றி:www.suvanathendral.com/<strong> </strong></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-17566747953066212312010-09-18T06:04:00.000-07:002010-09-18T06:04:49.991-07:00நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? – ஜெர்மன் விஞ்ஞானி!- Video<div style="text-align: justify;">ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் <span id="more-106"></span>நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார். ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் “நான் ஒரு சிறுவன் என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118). எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><a href="http://suvanathendral.com/portal/?p=106">வீடியோ இணைப்பு</a><br />
</div><a href="http://www.suvanathendral.com/avpage/christianity/trinity3_drzakirV.html"><span style="color: #ff6600;"></span></a><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> நன்றி:www.suvanathendral.com/ </div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-33240394778387742332010-09-18T05:55:00.000-07:002010-09-18T05:55:43.901-07:00நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – பிரிட்டனின் முன்னாள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு!<div style="text-align: justify;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfL1B8-7VxSZIpxyZi3Z4hSeLYt1dywHYeczFIlO9vqWQNWd_HjzjklhGIe2sGj5s_e9O6yMx92O9AI5LCJH7PI9UXnHvrxOSU_PP5ndbpRM9k_8A-8wWYVjHXRRYsJJPc6Y1mO7VVi8M8/s1600/index.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfL1B8-7VxSZIpxyZi3Z4hSeLYt1dywHYeczFIlO9vqWQNWd_HjzjklhGIe2sGj5s_e9O6yMx92O9AI5LCJH7PI9UXnHvrxOSU_PP5ndbpRM9k_8A-8wWYVjHXRRYsJJPc6Y1mO7VVi8M8/s200/index.jpeg" width="163" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> ஒரு முன்னால் பிரிட்டன் கத்தோலிக்க மதகுரு, குர்ஆனை படித்து விட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார்!</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><span id="more-251"></span></div><div> </div><div style="text-align: justify;">“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:82-83)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிரிட்டனின் முன்னால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு தன்னுடைய மாணவர்களுக்கு புனித குர்ஆனின் மேற்கூறிய வசனத்தை ஓதிக்காட்டியபோது நடந்ததும் இது தான். மேலும் இதுதான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் தன்னுடைய பயணத்தின் முக்கியமான படிகல்லாகவும் அமைந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவர் கெய்ரோவில் உள்ள பிரிட்ஷ் கவுன்சிலில் சமீபத்தில் உரையாற்றிய போது, தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் வாடிகனில் பணியாற்றிய 5 வருட காலத்தின் போது கிறிஸ்தவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்ததைப் பற்றித் தாம் கலைப்படவில்லை என்றார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">கிறிஸ்தவ மதகுருவாக இருந்து ஒருசில வருடங்கள் மக்களுக்கு சேவை செய்ததை நான் மகிழ்ந்தேன். இருந்த போதிலும் உள் மனதில் சந்தோஷமில்லாமலும் ஏதோ சரியாக இல்லாததையும் உணர்ந்தேன். இறைவனின் அருளால், அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் மற்றும் தற்செயலாக நடந்த சில செயல்களால் நான் இஸ்லாத்துக்கு வர நேர்ந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தவ்ஃபீக்கின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு தற்செயலான நிகழ்ச்சி என்னவெனில் எகிப்துக்குச் சென்று வந்த பிறகு வாடிகனில் தன்னுடைய வேலையை இராஜினாமா செய்ய அவர் எடுத்த முடிவாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">எகிப்து என்றாலே பிரமிட், ஒட்டகங்ள், மணல் வெளிகள் மற்றும் பனை மரங்கள் தான் என் நினைவுக்கு வந்தது. ஆகையால் விமானத்தில் Hurghada என்ற ஊருக்குப் பறந்தேன். ஆனால் அது ஐரோப்பாவின் கடற்கரையைப் போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முதல் பேருந்தைப் பிடித்து கெய்ரோவிக்குச் சென்று, என் வாழ்க்கையின் உன்னதமான ஒரு வாரத்தை செலவு செய்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இதுதான் என்னுடைய முதல் இஸ்லாம் மற்றும் முஸ்லிமைப் பற்றிய அறிமுகமாக இருந்தது . எகிப்தியர் மிகவும் மென்மையான, இனிமையான அதே சயத்தில் மிகவும் வலிமையான மனிதர்களாக இருந்ததை கனித்தேன்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பது போலவும் அதை நம்பிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நினைப்பது போலவும் ்முஸ்லிம்கள்் என்றாலே அவர்கள் தற்கொலை படையினராகவும், போராளிகளாகவும் தான் இருப்பார்கள் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் எகிப்துக்கு சென்ற பிறகு இஸ்லாம் எவ்வளவு அழகான மார்க்கம் என்று கண்டு கொண்டேன். வீதியிலே பொருளை விற்பவர்கள், தொழுகைக்காக அழைப்பைக் கேட்டவுடன், தன்னுடைய வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்கு விரைந்து செல்வதை பார்க்க முடிகிறது. இறைவன் இருக்கிறான் என்பதையும் அவன் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள் .</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அவர்கள் தொழுது, நேன்பு வைத்து, மறுமையில் சொர்க்கத்தில் வாழ்வதற்காக தன் வாழ்நாளில் மக்காவுக்கு ஒரு முறைசெல்வதற்கு கணவு காண்கிறார்கள் என்றும் விவரித்தார். நான் எகிப்தில் இருந்து திரும்பியதும், மதங்களைக் கற்பிக்கும் என் வேலையை தொடர்ந்தேன். பிரிட்டனின் கல்வித் திட்டத்தில் மார்க்கம் சம்பந்தமான படிப்பு ஒன்று தான் கட்டாய பாடமாக இருக்கிறது. நான் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் புத்த மதங்களைப் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு நாளும் மதங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக இந்த மதங்களைப் பற்றிப் படிக்க வேண்டியதாக இருந்தது. மாணவர்களில் பெரும்பாலோர் அரேபிய முஸ்லிம் அகதிகளாக இருந்தனர். சரியாக சொல்ல வேண்டும் எனில் இஸ்லாத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பது எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது .</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடிய மற்ற பருவ வயதினரைப் போல் அல்லாமல், ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த மாணவர்கள் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தார்கள். அவர்கள் அன்பாகவும் அமைதியாகவும் இருந்தார்கள். எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வளர்ந்த போது, நோன்பு வைக்கக் கூடிய ரமலான் மாதத்தில், அந்த மாணவர்கள் என்னுடைய வகுப்பறையில் தொழுது கொள்ளலாமா என்று என்று என்னிடம் கேட்டார்கள்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வகுப்பறை ஒன்றுதான் தரை விரிப்புடன் கூடியதாக இருந்தது. ஆகையால் அவர்கள் தொழும்போது நான் பின்னால் இருந்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். நான் ஒரு முஸ்லிமாக இல்லாதபோதும், அவர்களுடன் நானும் நோன்பு வைத்து அவர்களை ரமலான் மாதத்தில் நோன்பு வைக்குமாறு ஆர்வ முரட்டினேன்.<br />
<br />
ஒரு முறை வகுப்பறையில் திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்த போது இந்த வசனத்தை அடைந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">“இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:83)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் ஆச்சரியப்படும் அளவிற்கு என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை மாணவர்களிடமிருந்து மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>மிகப் பெரும் நிகழ்ச்சி: -</strong></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">செப்டம்பர் 11- 2001 அன்று நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப் பிறகு தான் என் வாழ்க்கையின் திருப்பு முனை அமைந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அடுத்த நாள், பாதுகாப்பாக நான் கீழ்தளத்தில் இருந்தேன். மேலும் மக்கள் எவ்வளவு பயந்தவர்களாக உள்ளனர் என்பதையும் கனித்தேன். இது போன்ற ஒரு நிகழ்வு பிரிட்டனிலும் நடக்கலாம் என்று நானும் பயந்தேன். அந்த சமயத்தில், மேற்கத்தியர்கள் தங்களால் பயங்கரவாத மார்க்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற இஸ்லாத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இருந்த போதிலும், முஸ்லிம்களிடத்தில் எனக்குள்ள முந்தய அனுபவம் என்னை வேறெரு கோணத்தில் அனுகச் செய்தது. கிறிஸ்தவர்கள் இது போன்ற செயலை செய்கின்ற போது, பயங்கரவாத கிறிஸ்தவ மதம் என்று குற்றம் சுமத்தாதவர்கள், முஸ்லிம்களாக இருக்கின்ற ஒரு சிலர் செய்கின்ற தீவிரவாத செயல்களின் போது மட்டும் ஏன் தீவிரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு சேர்த்து இஸ்லாத்தை குற்றம் சுமத்துகிறார்கள்? ஏன் இஸ்லாம் (மட்டும் குறி வைக்கப்படுகின்றது)? என்று ஆச்சரியப்படத் துவங்கினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஒரு நாள் இஸ்லாம் மதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக, லண்டனில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலை நேக்கிச் சென்றேன். அங்கே முன்னால் பாப் பாடகர் யூசுப் இஸ்லாம் வட்டமாக உட்கார்ந்து கொண்டு சிலரிடையே இஸ்லாத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு அவரிடம், நீங்கள் முஸ்லீமாக மாறுவதற்கு என்ன செய்தீர்கள்? என்று வினவினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">“ஒரு முஸ்லீம் ஒரே இறைவனை வணங்கவேண்டும், 5 நேரம் தொழ வேண்டும், ரமலான் மாதத்தில் நேன்பு வைக்க வேண்டும்” என்று பதிலளித்தார். நான் அவரை இடைமறித்து, நான் எல்லாவற்றையும் நம்பினேன், ரமலான் மாதத்தில் நேன்பும் வைத்தேன் என்றேன். பிறகு எதற்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? என்று அவர் என்னிடம் கேட்டார். நான் மதம் மாறுவதற்கு நினைக்கவில்லை என்றேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அந்த சமயத்தில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தயாராகி தொழுவதற்காக வரிசையில் நின்றனர். நான் பின்னால் அமர்ந்தேன். நான் கதறி அழுது, யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்த பிறகு, யூசுப் இஸ்லாமிடம் சென்று நான் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என்ன சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கச் சொன்னேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஆங்கிலத்தில் அதற்குரிய விளக்கத்தை விளக்கிய பிறகு, நான் அரபியில், வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார் என்றும் ஓதினேன்” என்று கண்ணீரைத் துடைத்தபடி நினைவு கூர்ந்தார். தவ்பீக் அவர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="color: blue; text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>இஸ்லாத்தின் தோட்டங்கள்: -</strong></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவ்வாறு இவருடைய வாழ்க்கை ஒரு மாறுபட்ட கோணத்தை அடைந்து எகிப்திலே வாழ்ந்து கொண்டு இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய புத்தகத்தை எழுதினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தன்னுடைய புத்தகத்துக்கு ஏன் “சந்தோஷத்தின் தோட்டங்கள்” என்று பெயரிட்டார் என்று விளக்கும்போது “இது இஸ்லாத்தைப் பற்றிய ஒரு எளிமையான சுய விமர்சனம். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம் அல்ல என்றும் மேலும் அது வெறுப்பை உண்டு பண்ணக் கூடிய மதமாக இல்லை என்றும் ஒவ்வொருவரும் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன? என்று யாரும் விளக்குவதற்கு முயற்சி செய்யவில்லை”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஆகையால், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்குவதற்காக இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முடிவு எடுத்தேன். இஸ்லாம் ஒரு அழகான மார்க்கம் என்றும், அது எண்ணிலடங்கா பொக்கிஷங்களை கொண்டுள்ளது என்றும், முஸ்லிமாக இருந்து ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவது என்றும் சொல்வதற்கு முயற்சி செய்தேன்.</div><div style="text-align: justify;"><br />
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “உன் சகோதரனை பார்த்து புன்முறுவல் செய்வதும் தர்மம்” எனக் கூறினார்கள் என்று தஃபீக் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் தவ்ஃபீக் அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள். அந்த புத்தகம், இதுவரை வெளிவந்த புத்தகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்றார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இஸ்லாத்தின் உண்மையான தோற்றத்தை, இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்ட வேகமான மற்றும் மிகச் சிறந்த வழி இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து காட்டுவது தான் என்று தவ்ஃபீக் நினைக்கிறார் .</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றி: www.suvanathendral.com <span></span> </div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-71455134225950628832010-09-18T05:45:00.000-07:002010-09-18T05:45:15.357-07:00நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBsYCOLkIKeFITN9G3pXEKGGYgKrl9EIXO8B4oyPIn3792xJ3C0E2txJSuyut39BcGHJFlqQPcS4dJIXkwlxvx6Ny9Xg3A9TYUYi6cYfysm0AEb_0bnuxlXbO86YEA6-Y2v75SGasiIquC/s1600/bible.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBsYCOLkIKeFITN9G3pXEKGGYgKrl9EIXO8B4oyPIn3792xJ3C0E2txJSuyut39BcGHJFlqQPcS4dJIXkwlxvx6Ny9Xg3A9TYUYi6cYfysm0AEb_0bnuxlXbO86YEA6-Y2v75SGasiIquC/s320/bible.jpg" width="320" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: – இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span id="more-284"></span></div><div> </div><div style="text-align: justify;">வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong><span style="text-decoration: underline;">நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono</span></strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இந்தோனேசியாவில்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">உதாரணமாக,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் – இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் – Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் கேட்டேன், ஏன்?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஏன்? – பாதிரியார் கேட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நீ என்ன சொல்ல வருகிறாய்? – பாதிரியார் கேட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நீ என்ன சொல்ல வருகியாய்? – பாதிரியார்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span><a href="http://www.suvanathendral.com/avpage/christianity/nun1V.html">வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono.</a></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றி: www.suvanathendral.com <span><br />
</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-85915046162347829922010-09-18T01:57:00.000-07:002010-09-18T01:57:43.484-07:00நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-G-5TPBKJGIBKNxZ_9rH_Yz0uVdV6KAP2FAIwubc6r8X_RqfeLoF3x6g8pL8FfY1nXcNR4J4y2giIAQUG_GSGu9xZMxCY7RqA0e8gXmxXrK76d0K234hvZEf_GlMUuvwpcnj1xGdSdD6X/s1600/The_Ideal_Personality_of_a_Muslim_001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-G-5TPBKJGIBKNxZ_9rH_Yz0uVdV6KAP2FAIwubc6r8X_RqfeLoF3x6g8pL8FfY1nXcNR4J4y2giIAQUG_GSGu9xZMxCY7RqA0e8gXmxXrK76d0K234hvZEf_GlMUuvwpcnj1xGdSdD6X/s320/The_Ideal_Personality_of_a_Muslim_001.jpg" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong> <span style="color: blue;">முன்னுரை: -</span></strong></div><div> </div><div style="text-align: justify;">ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என் மீது கடமையாக இருக்கிறது. நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சத்திய இஸ்லாத்தின் ஒளியை அனுபவிப்பதற்கு பாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய அத்தியாவசிய தேவையிருப்பதை உணர்ந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span id="more-502"></span></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் நேர்வழி பெற்ற அவருடைய வழிவந்தவர்களான சத்திய சஹாபாக்கள் போதித்தவாறும் அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் என் மீது கருனை புரிந்த வல்ல இறைவனுக்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நாம் உண்மையான நேர்வழியை அடைவதும், இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் அந்த நேர்வழியைப் பின்பற்றுவதற்குரிய ஆற்றலை அடைவதும் இறைவனின் கருனையினாலேயன்றி வேறில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் இஸ்லாத்தை தழுவும் போது அஷ்செய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் என் மீது அன்புகாட்டியதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கும் போது நான் அவரிடமிருந்து கற்ற கல்வியை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் ஆசைப்படுகிறேன். இவர் தவிர இன்னும் அநேகர் எனக்கு ஆர்வமுட்டி மார்க்க அறிவைப் பெறுவதில் உதவினார்கள். அவர்களின் பெயர்களில் யாரையேனும் நான் விட்டுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களின் பெயரை நான் பட்டியலிடவில்லை. எனவே நான் ஒரு உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் எனக்கு எல்லாவகையிலும் உதவி செய்ய வைத்த அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்தினால் போதும் என எண்ணுகிறேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இந்த சிறிய முயற்சி அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கிறிஸ்தவ உலகில் பெருவாரியாகக் காணப்படும் மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கைக்கு ஒருவிடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிறிஸ்தவர்களிடம் கிடையாது. ஏனென்றால் அந்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக விளங்குவதே அவர்கள் தான். மாறாக, கிறிஸ்தவ உலகை செல்லரித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் மற்றும் உலகில் காணப்படும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு இஸ்லாம் தான். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எற்ற சிறந்த நற்கூலியை வழங்குவானாகவும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அப்துல்லாஹ் முஹம்மது அல்-ஃபாரூக்கீ அத்தாயிஃப், சவுதி அரேபியா.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>அறிமுகம்!</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சிறு வயது முதலே கடவுள் பக்தி உள்ளவனாக வளர்கப்பட்டேன். என்னுடைய பாதி வாழ்க்கையை தீவிர பெந்தகோஸ்தே கிறிஸ்தவதத்தைப் பின்பற்றுகின்ற என் பாட்டியிடம் நான் வளர்ந்ததால் சிறுவயது முதலே கிறிஸ்தவ தேவாலயம் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி விட்டது. நான் ஆறு வயதை அடைந்தபோது, “ஒரு நல்ல சிறுவனாக இருப்பதற்காக பரலோகத்தில் எனக்காக நல்ல வெகுமதிகள் காத்திருக்கின்றது; அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களுக்காக தண்டனைகள் காத்திருக்கிறது” எனவும் நம்பினேன். “பொய்யர்கள் அனைவரும் இழிவுபடுத்தப்பட்டு நரகத்திற்கு செல்வார்கள்; அங்கே அவர்கள் நிரந்தரமாக உரிக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள்” என்றும் எனது பாட்டி எனக்கு போதித்து வந்தார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">என்னுடைய தாயார் இரண்டு முழு நேரப் பணிகள் செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய தாயார் (எனது பாட்டி) எனக்கு போதித்தவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். என்னுடைய பாட்டியின் பரலோகத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பற்றி நான் சிரத்தை எடுத்துக் கொண்டது போல என்னுடைய இளைய சகோதரரும் மூத்த சகோதரியும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் முழு நிலவை செந்நிறத்தில் காணும் போது நான் அழ ஆரம்பித்து விடுவேன். காரணம் என்னவெனில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று தான் நிலவு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறமாகிவிடுவது என்று போதிக்கப்பட்டிருந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">எனக்கு எட்டு வயதாகும் போது இவ்வுலகிலும் ஆகாயத்திலும் காணப்படும் உலக அழிவு நாளுக்கான அடையாளங்களாக நான் நினைத்தவற்றின் காரணமாக எனக்குள் பயம் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக நியாயத் தீர்ப்பு நாள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கணவுகள் தோன்றியது. என்னுடைய வீடு இரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. அந்த தண்டவாளத்தின் வழியே அடிக்கடி இரயில் சென்று கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரயில் எஞ்சினின் ஊதல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து, ‘நான் இறந்து விட்டேன்; இப்போது சூர் ஊதல் மூலமாக மீண்டும் உயிர்பிக்கப்படுகின்றோம்’ என்று எண்ணிக் கொள்வேன். சிறுவர் சிறுமியர்களுக்கான பைபிளின் கதைகள் மற்றும் வாய்மொழி போதனைகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் என் பிஞ்சு மனதிலே ஆழமாக பதிந்திருந்தன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களுக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா தான் எங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். நாங்கள் காலை பதினோரு மணிக்கு தேவாலயத்திற்குச் சென்றால் மதியம் மூன்று மணி வரை அங்கேயே இருப்போம். பல நேரங்களில் என் பாட்டியின் காலில் படுத்து உறங்கிய நினைவிருக்கிறது. சில நேரங்களில் நானும் என்னுடைய சகோதரரும் ஞாயிறு வகுப்பு மற்றும் காலை நேர பிரார்த்தனைக்கு இடைப்பட்ட வேளையில் தேவாலயத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுண்டு. அப்பொழுது எங்கள் தாத்தாவுடன் இரயிலடியில் அமர்ந்துக் கொண்டு போகின்ற வருகின்ற இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. என் தாத்தா தேவாலயத்திற்குச் செல்வதில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு என் தாத்தா வாத நோயால் பாதிக்கப்பட்டு பகுதியாக செயலிழந்தார். அதன் காரணமாக நாங்கள் தொடர்ந்தார் போல் தேவாலயத்திற்கு செல்ல இயலாமல் போனது. இந்தக் காலக் கட்டம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமானதாக இருந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தேவாலயத்திற்கு செல்ல இயலாததால் நிம்மதியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது நானாகவே செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்தேன். எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது என்னுடைய நன்பரின் தந்தை பாதிரியாராக இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அது மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அதில் என்னுடைய நன்பரின் குடும்பத்தினர், நான் மற்றும் என்னுடைய மற்றொரு பள்ளி நன்பன் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தோம். இது அந்த தேவாலயம் மூடப்படும் வரை பல மாதங்கள் நீடித்தது. பிறகு நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது நான் என்னுடைய மார்க்கத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மீண்டும் உணர ஆரம்பித்தேன். ஆகவே பெந்தகோஸ்தே போதனைகளின் பால் நான் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன். எனக்கு “ஞானஸ்நானம்” செய்விக்கப்பட்டு “பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக” கூறப்பட்டேன். ஒரு கல்லூரி மானவன் என்ற முறையில் தேவாலயத்தைக் கொண்டு பெருமிதம் அடைந்தேன். ஒவ்வொருவரிடமும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே நான் “பாவமீட்சிக்கான பாதையில்” இருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் அதன் கதவுகள் எனக்காகத் திறக்கப்பட்டது. நான் நாள் கணக்காக, வாரக்கணக்காக பைபிளை இடைவிடாது படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கிறிஸ்தவ அறிஞர்களின் பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய 20 வயதில் மினிஸ்ட்ரியோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் மார்க்க பிரசங்கம் செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மக்களிடைய நன்றாக அறிமுகம் ஆனேன். நான் இருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரும் பாவமீட்சி அடையமுடியாது என்று நான் உறுதியாக நம்பினேன். நான் கடவுளை எப்படி நம்பினேனோ அவ்வாறு கடவுளை நம்பாதவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் <strong style="color: blue;">‘இயேசு நாதரும் இறைவனும் ஒன்று தான்’</strong><span style="color: blue;"> என்று நினைத்திருந்தேன். </span><strong style="color: blue;">நம்முடைய தேவாலயம் திரித்துவத்தில் நம்பிக்கையில்லாதது என்றும், ஆனால் இயேசு நாதரே (அலை) பிதாவும், மகனும் பரிசுத்த ஆவியுமாவார் என்றும் நான் பயிற்றுவிக்கப்பட்டேன்.</strong> நான் எனக்குள் அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் உண்மையைக் கூற வேண்டும், என்னால் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அதன் சித்தாந்தம் எனக்கு அறிவுப்பூர்வமாகப்பட்டது. பெண்களின் புனித ஆடைகளுக்கும் ஆண்களின் இறை பக்திக்கும் நான் மரியாதை அளித்தேன். தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, முகங்களில் மேக்அப் சாதனங்களை போடாமல், தங்களை இயேசு கிறிஸ்துவின் தூதர்களாக கருதுகின்ற பெண்களையுடைய கிறிஸ்த சித்தாந்தத்தை நான் போதிக்கிறேன் என்று எனக்குள் மகிழ்ந்து பெருமிதம் அடைந்தேன். பரலோக வெற்றிக்கான உண்மையான வழியை நான் கண்டு கொண்டாதாக சிறிது கூட சந்தேக நிழலில்லாமல் என்னில் நானே திருப்தியடைந்துக் கொண்டேன். மற்ற தேவாலயங்களில் இருப்பவர்களுடனும் மற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுடனும் எனக்கிருக்கும் பைபிளின் அறிவைக் கொண்டு விவாதம் செய்து அவர்களை மௌனமாக்குவேன். நூற்றுக் கணக்கான பைபிளின் வசனங்களை மனனம் செய்திருந்தேன். இதுவே என்னுடைய மத போதனைகளுக்கு ஒரு முக்கிய விளம்பரமாக இருந்தது. ஆயினும், <strong style="color: blue;">நான் சரியான பாதையில் இருப்பதாக எனக்குள் உணர்ந்தாலும் என்னுடைய மற்றொரு பகுதி உண்மையைத் தேடிக் கொண்டிருந்தது. இதைத் தவிர உயர்வான உண்மை வேறெங்காவது இருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்</strong><span style="color: blue;">.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="color: blue; text-align: justify;"> </div><div style="text-align: justify;"><strong style="color: blue;">நான் தனிமையில் இருக்கும் போது தியானத்தில் ஈடுபட்டு, ‘நான் தவறான செயல்களைச் செய்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து எனக்கு சரியான பாதையைக் காட்டுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பேன்</strong><span style="color: blue;">.</span> அந்த சமயங்களில் நான் ஒரு முஸ்லிமைக் கூட சந்தித்ததில்லை. நான் அறிந்தவரையில், எலிஜா முஹம்மது என்பவரைப் பின்பற்றுபவர்கள் தான் “நாங்கள் இஸ்லாமியர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் “கறுப்பு முஸ்லிம்கள்” என்றும் அழைக்கப்படுவதுண்டு. எழுபதுகளின் பிற்பகுதியில் அமைச்சர் லூயிஸ் ஃபராக்கான் ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வேளை அது! ஒருமுறை நான் என்னுடைய சக ஊழியரின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஃபராக்கானின் பேச்சைக் கேட்பதற்காக சென்றேன். அந்தப் பேச்சு என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு அனுபவமாக உணர்ந்தேன். இதற்கு முன்பு வேறு எந்த கறுப்பு இன மனிதரும் இவர் பேசியது போன்று பேசி நான் கேட்டதில்லை. உடனே அவருடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவரை என்னுடைய மத நம்பிக்கைக்கு மாற்றலாம் என விரும்பினேன். வழிதவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளை போதித்து மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">கல்லூரி படிப்பை முடித்த பிறகு நான் முழு நேரப் பணியில் ஈடுபட்டேன். நான் மினிஸ்ட்ரிக்கு தகுதியான பொழுது எலிஜா முஹம்மதுவை பின்பற்றுபவர்களின் தொடர்பு எனக்கு அதிகமானது. கறுப்பு இனத்தவர்களின் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடும் அவர்களுடைய முயற்சியை நான் பாராட்டினேன். அவர்களுடைய ஆக்கங்களை நான் வாங்குவது அவர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். அவர்கள் எதைத் தான் நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் கல்வி கற்கும் இடங்களுக்கே சென்று பயில ஆரம்பித்தேன். அவர்களுடைய சில கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக பைபிளின் ஆதாரங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பைபிளைப் பற்றி நன்றாக அறிந்திருந்ததால் அவர்கள் பைபிளை தவறாக புரிந்து அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது. மேலும் நான் அங்கேயுள்ள பைபிளின் போதனை வகுப்புகளுக்குச் சென்று பைபிளின் பாடம் பயின்று பைபிளின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து நான் டெக்ஸாஸ் என்ற பகுதிக்குச் சென்று அங்கேயுள்ள இரண்டு தேவாலயங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலாவது தேவாலயத்தின் மிக இளமையான தலைவர் பைபிளின் கல்வியறிவிலும் அனுபத்திலும் குறைவானவராக இருந்தார். இந்த நேரத்தில் என்னுடைய பைபிளின் அறிவு சராசரியை விட அதிகமாக இருந்தது. பைபிளைப் போதிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. நான் வேதாகமங்களை மிக ஆழமாக உற்று நோக்கினேன். அதன் காரணமாக தற்போதைய தேவாலயத்தின் தற்போதைய தலைவரை விட நான் அதிகமாக அறிந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் மரியாதையின் நிமித்தமாக நான் அந்த தேவாலயத்திலிருந்து விடுபட்டு மற்றொரு நகரத்திலுள்ள தேவாலயத்தில் சேர்ந்தேன். அங்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எனக்குத் தோன்றியது. அந்த தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் நன்கு கற்றறிந்த அறிஞராக இருந்தார். அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவருடைய சில எண்ணங்கள், செயல்பாடுகள் தேவாலயத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமானதாக இருந்தது. அவர் சற்று சுதந்திரமான கருத்துக்களையுடையவராக இருந்தார். இருப்பினும் அவருடைய போதனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. <strong style="color: blue;">அப்போது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்கும் வாய்ப்புக் கிட்டியது. அதாவது ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பாடமாகும். வெளிப்பார்வைக்கு வேறு விதமாகத் தோன்றினாலும் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேவாலயத்தினுள் நிறைய தீமைகள் நடந்தது. தேவாலயத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருந்த இத்தகைய தீமைகள் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் மிகத் தீவிரமாக போதித்து வந்த கொள்கைகளைப் பற்றி எனக்குள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்</strong><span style="color: blue;">.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">கிறிஸ்த மினிஸ்ட்டிரியின் உயர் மட்டத்தல் மிகுந்த போட்டியும் பொறாமையும் நிலவுவதை நான் குறுகிய காலத்தில் உணர்ந்தேன். எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்த பழக்க வழக்கங்களில் இருந்து நிறைய மாற்றங்கள் தென்பட்டது. நான் அநாகரிகமானது என்று கருதியிருந்த ஆடைகளை பெண்கள் அணிந்தார்கள். அநேக மக்கள் எதிர்பாலரைக் கவரக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்தார்கள். மேலும் பேராசையும் பணமும் தேவலாயத்தின் நிர்வாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கண்டு கொண்டேன். சிறிய அளவிலான தேவாலயங்கள் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் போதனைக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் அந்த தேவாலயங்களுக்கு வருமானம் தேடித்தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய தேவாலயங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவானதாக இருப்பின் என்னுடைய நேரத்தை அவர்களுக்கு போதனை செய்வதில் வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன். ஏனென்றால், அந்த தேவாலயங்களின் மூலம் எனக்கு அதிகமாக வருமானம் கிடைக்காது என்பதாகும். அப்போது நான் அவர்களிடம், நான் பொருளாதாரத்தைப் பெருக்குவதின் பின்னால் இல்லை என்றும் அந்த சிறிய தேவாலயங்கள் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாக இருப்பினும் அங்கே சென்று போதனை செய்வேன் என்றும் மேலும் அதை நான் இலவசமாகவும் செய்வேன் என்றும் கூறினேன். இது அங்கே மிகுந்த சஞ்சலப்பை ஏற்படுத்தியது. யாரை நான் சிறந்த அறிஞர் என்று கருதியிருந்தேனோ அவர்களிடமே “அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக” கேள்விகள் கேட்கத் துவங்கினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>பைபிளைப் பற்றிய உண்மைகளைப் பற்றி போதிப்பதை விட பணம், பதவி, அதிகாரம் இவற்றுக்குத் தான் மிக முக்கியத்துவம் அங்கு இருப்பதை அறிந்துக் கொண்டேன்</strong>. <strong>பைபிளைப் படிப்பவன் என்ற முறையில் அதில் நிறைய தவறுகளும், முரண்பாடுகளும், பொய்யான கற்பனை ஊடுருவல்களும் இருப்பதை நான் அறிவேன். பைபிளைப் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால் பைபிளின் உண்மைகளை மக்களின் வெளிச்சத்திற்கு எடுத்துச் செல்வதை சாத்தானின் செயலாகக் கருதினர். ஆனால், நான் பைபிளின் போதனை வகுப்புகளின் போது வெளிப்படையாகவே போதகர்களிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினேன். ஆனால் ஒருவரால் கூட பதில் அளிக்க இயலவில்லை.’இயேசு நாதர் என்பர் எப்படி கடவுளாகவும் அதே நேரத்தில் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒருவராகவும் இருக்கிறார்? ஆனால் எப்படி அவர் திரித்துவக் கொள்கைக்கு மாற்றமாகவும் இருக்கிறார்?’ என்ற என்னுடைய கேள்விக்கு ஒருவர் கூட பதில் அளிக்க முடியவில்லை. பல மதபோதகர்கள் “இவை பற்றி எங்களுக்குப் புரியவில்லை! ஆனால் நாங்கள் இவைகளை நம்புகிறோம்! அவ்வளவுதான்” என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!</strong></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="color: blue; text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பதும், விபச்சாரமும் தண்டணைகளுக்குரிய குற்றமாக கருதப்படவில்லை! சில மத போதகர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டதோடல்லாமல் தங்களின்<br />
குடும்பங்களையும் சீரழித்தார்கள். சில தேவாலயங்களின் தலைவர்கள் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். மேலும் சில பேராயர்கள் மற்ற தேவலாயத்தின் உறுப்பினர்களுடைய மகள்களுடன் விபச்சாரம் செய்த குற்றமுடையவர்களாக இருந்தார்கள். இவைகள் அனைத்தும் மற்றும் நான் நியாயமான கேள்விகள் என்று கருதி கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காதமையும் என்னை வேறு ஒரு மாற்றத்தை தேட வைத்தது. நான் சவூதி அரேபியாவில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்ட போது அந்த மாற்றம் வந்தது</strong>.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: red; text-align: justify;"><strong>புதிய ஆரம்பம்!</strong></div><div style="color: red; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் சவூதி அரேபியா வந்தவுடனே முஸ்லிம்களின் ஒரு வித்தியாசமான புதிய வாழ்க்கை முறையை பார்த்தேன். சவூதி ஆரெபியாவில் உள்ளவர்கள், நான் பார்த்திருந்த எலிஜா முஹம்மது மற்றும் லூயிஸ் ஃபராக்கான் ஆகியோர்களைப் பின்பற்றுபவர்களை விட வித்தியாசமானவர்களாக இருந்ததார்கள். <strong style="color: blue;">இங்கு, அனைத்து நாடுகள், நிறங்கள் மற்றும் மொழிகளையுடையவர்களும் இருந்தார்கள்.</strong><span style="color: blue;"> </span> உடனே இந்த வித்தியாசமான புதிய மதத்தைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் தோன்றியது. தீர்க்கதரிசி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அதனால் நான் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமானேன். இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் சகோதரரிடமிருந்து நான் சில புத்தகங்களைக் கேட்டேன். அவர் எனக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொண்டு வந்துக் கொடுத்தார். அவைகள் ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாகப் படித்தேன். அதன் பிறகு எனக்கு புனித குர்ஆன் கொடுக்கப்பட்டது. அதை நான் நான்கு மாதங்களுக்குள் பலமுறை படித்துவிட்டேன். நான் கேள்வி மேல் கேள்விகளாக அவர்களிடம் கேட்டேன். <strong style="color: blue;">நான் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் பதில்களும் கிடைத்தது</strong><span style="color: blue;">.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அந்த முஸ்லிம் சகோதரர்கள் என்னை சமாதான படுத்துவதற்காக தங்களுக்குத் தெரிந்த அறிவை வைத்து முயற்சிக்காதது என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. <strong style="color: blue;">ஒரு சகோதரருக்கு நான் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால் அவர்கள் ‘எனக்கு அதற்கான விடை தெரியவில்லை என்றும் தெரிந்தவரிடம் கேட்க வேண்டும்’ என்று கூறிவிடுவார். மறுநாள், நான் கேட்ட கேள்விக்கான விடையோடு அவர் வருவார். மத்திய கிழக்கில் வாழும் இந்த அற்புதமான மனிதர்களின் பணிவை நான் உணர்ந்து வியந்தேன்</strong><span style="color: blue;">.</span></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="color: blue; text-align: justify;"> </div><div style="color: blue; text-align: justify;"><strong>பெண்கள் முகம் முதல் கால் வரை முழுவதுமாக மறைத்திருப்பது கண்டு மிகவும் வியந்துப் போனேன். மத தலைவர் என்று குறிப்பிட்ட எவரும் காணப்படவில்லை. மத தலைமைப் பதவியை அடைவதற்காக எவரும் போட்டி போடுவதில்லை</strong>!</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவைகள் அனைத்தும் மிக அற்புதமானவைகளாக எனக்குத் தென்பட்டது. ஆனால் நான் சிறு வயது முதல் பின்பற்றி வந்த போதனைகளை கைவிடுவது பற்றிய சிந்தனைகளை நான் எப்படி என்னுள் அனுமதிக்க முடியும்? பைபிளின் போதனைகளை கைவிடுவதா? பைபிள் எண்ணற்ற முறைகள் மாற்றத்திற்கு உள்ளாகி புதுப்பிக்கப்பட்டிருப்பினும் அதில் சில உண்மைகள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அப்போது எனக்கு <span span="class4"><a href="http://www.suvanathendral.com/avpage/debates/deedat_vs_jimmyV.html">அஷ்ஷெயக் அஹமது தீதாத் மற்றும் ரெவரென்ட் ஜிம்மி ஸ்வா(g)க்கத் ஆகியோர்களுக்கிடையே நடைபெற்ற ஒரு விவாத வீடியோ கேசட் </a></span>ஒன்று வழங்கப்பட்டது. அந்த விவாதத்தைப் பார்த்த உடஃனேயே நான் முஸ்லிமாகி விட்டேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் முறையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு செய்வதற்காக ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே நான் இனிவரும் காலங்களில் கடந்து செல்ல வேண்டிய பாதைகளைப் பற்றியும் அதற்காக நான் என்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டேன். நிச்சயமாக இது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த ஒரு பிறப்பாகும்.அப்போது நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து என்னுடைய தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்துக் கொண்டால் அவர்கள் என்ன பற்றி நினைப்பார்கள் என்று சிந்திக்கலானேன். அதற்கு நீண்ட காலம் படிக்கவில்லை. விடுமுறையில் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன், ‘நான் நம்பிக்கையில் குறைவனானவன்’ என்று மகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். துரோகி, முட்டாள் போன்ற பல பெயர்கள் எனக்குச் சூட்டப்பட்டது. தேவாலயங்களின் தலைவர்கள் என்று கூறப்படக் கூடியவர்கள் மக்களிடம் ‘அவர்களின் பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூறவேண்டாம்’ என்று கூறினார்கள். ஆனால் விந்தையானது என்னவென்றால் நான் அவைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியதற்காக நான் மிகுந்த சந்தோசமாக இருந்தேன். அதனால் அவர்களின் இந்த செயல்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">முன்பு நான் கிறிஸ்தவனாக இருந்தபோது எந்த அளவிற்கு ஒரு பற்றுள்ள கிறிஸ்தவனாக இருந்தேனோ அதே மாதிரி இப்போது ஒரு மிகப் பற்றுள்ள முஸ்லிமாக இருக்க விரும்பினேன். நிச்சயமாக இதற்கு நிறைய படிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். <strong style="color: blue;">இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் அறிவை வளர்த்துக் கொண்டே போகலாம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இஸ்லாத்தில் கல்வி கற்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமானது அன்று! யார் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு கல்வியை கற்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது</strong><span style="color: blue;">.</span> என்னுடைய குர்ஆன் போதகர் ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீது கிரந்தம்) தொகுப்பு ஒன்றை எனக்கு பரிசாக வழங்கினார். அப்போது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அவர்களின் சொல், செயல்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். நான் ஆங்கிலத்தில் இருக்கும் பெருவாரியான ஹதீது நூல்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கும் போது என்னுடைய பைபிள் ஞானம் கிறிஸ்தவ பின்னணியில் உள்ள நிகழ்வுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது. <strong style="color: blue;">இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு எனக்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு முற்றிலும் புதிய வாழ்க்கையாக மாறியது. குறிப்பிடத்தக்க ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், மறுவுலக வாழ்க்கைக்கு தேவையானவற்றை தயார் செய்வதிலேயே தான் நாம் இந்த உலக வாழ்க்கையை செலவிட வேண்டும் என்பதை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறலாம்</strong><span style="color: blue;">.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் <strong><span style="color: blue;">இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் நம்முடைய நல்ல எண்ணங்களுக்குக் கூட நற்கூலி வழங்கப்படுவோம்</span> </strong>என்பதை அறியும் போது புதிய அனுபவமாக இருந்தது. நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்ய விரும்பினாலேயே அதற்கும் நற்கூலி கிடைக்கும். இது தேவாலயங்களின் போதனைகளுக்கு சற்று வித்தியாசமானது. அதாவது ‘நல்ல எண்ணங்கள் நரகத்திற்கான பாதையை வழிவகுக்கிறது’ என்பதாகும். வெற்றி பெறுவதற்கு வழியே இல்லை. நீங்கள் விபச்சாரம் போன்ற பெரிய தவறிழைத்திருந்தால் பாதியாருக்கு முன்னிலையில் பாவ மன்னிப்பு கோரவேண்டும். உங்கள் செயல்களைப் போறுத்தே நீங்கள் நீதி வழங்கப்படுவீர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="color: red; text-align: justify;"><strong>தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள்!</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அல்-மதீனா பத்திரிக்கையின் நேர் முக காணலுக்குப் பிறகு என்னுடைய தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. என்னுடைய தற்போதைய குறிக்கோள் என்னவெனில் அரபியைக் கற்றுணர்ந்து இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் படித்து இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் தற்போது நான் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கிறிஸ்தவ பின்னணியில் இருந்து வருவபவர்களிடம் உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்படுகின்றேன். இறைவன் எனக்கு ஆயுளை நீட்டித்தால் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்களை எழுத வேண்டும் என விரும்புகிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பைபிளை நீண்ட நாட்களாக போதித்து வந்த ஆசான் என்ற முறையில் பல மில்லியன் மக்களால் நம்பப்படுகின்ற பைபிளில் காணப்படும் தவறுகளையும், முரண்பாடுகளையும் கற்பனையில் புனையப்பட்டு அதில் புகுத்தப்பட்டவைகளையும் எடுத்துக் கூறி அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்பது என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்கிறேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சந்தோசமான விசயம் என்னவென்றால் கிறிஸ்தவர்களிடையே நான் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் நான், அவர்கள் பயன்படுத்துகின்ற வாக்குவாத் திறமையை போதித்த ஆசானாவேன். மேலும் நான் எப்படி பைபிளைக் கொண்டு திறமையாக வாதிட்டு கிறிஸ்தவத்தைப் பாதுகாப்பது என்று கற்றறிந்திருந்தேன். மேலும் அதே நேரத்தல் மினிஸ்டர்களாகிய எங்களுக்கு தேவலாயத்தின் தலைவர்களால் வெளிப்படையாக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ தடைவிதிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வாதத்திற்கும் உரிய எதிர்வாதங்களைப் பற்றியும் நான் அறிந்து வைத்திருந்தேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இறைவன் நம் அனைவருடைய அறியாமையை மன்னித்து சுவர்கத்திற்கு இட்டுச் செல்கின்ற நேரான வழியைக் காட்டுமாறு நான் பிரார்த்திக்கின்றேன். அனைத்துப் புகழும் இறைவனுக்கே உரித்தானது. இறைவன் அவனது இறுதித் துதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அவருடைய குடும்பத்தார்கள், அவரைப் பின்பற்றிய தோழர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களுக்கு அருள் புரிவானாகவும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றி: www.suvanathendral.com </div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-37817712314398333422010-09-18T01:29:00.000-07:002010-09-18T01:31:07.996-07:00நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – Sue Watson, முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி.<div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsGLGexXjtVqI8IrIn5xNhqxEq2mOlbIYe3YUYTcFjb9FzAuZOxXoM1iE9K_Ry6XAv1FKDec0sJP4yWnXb7zh6yPk2BU5qycpkXIMaChGlaGcDDeIFpVEy5NUXg8d04fp-mMnxFIH6VoYh/s1600/main-upper_01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsGLGexXjtVqI8IrIn5xNhqxEq2mOlbIYe3YUYTcFjb9FzAuZOxXoM1iE9K_Ry6XAv1FKDec0sJP4yWnXb7zh6yPk2BU5qycpkXIMaChGlaGcDDeIFpVEy5NUXg8d04fp-mMnxFIH6VoYh/s320/main-upper_01.jpg" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், <b style="color: blue;">மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்</b><span style="color: blue;">.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div></div><div style="text-align: justify;">நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் <b style="color: blue;">இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக்</b><span style="color: blue;"> </span>கேட்டேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">அவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை! ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் <b style="color: blue;">இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது</b><span style="color: blue;">.</span> நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எவ்வித</div><div style="text-align: justify;"></div><div style="color: blue; text-align: justify;"><b>பயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை! </b></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">“நீங்கள் பைபிளைப் படிப்பது போல ‘உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்!”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">என்னால் நம்பவே முடியவில்லை! அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும். இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம். மறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்களைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரியதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன். ஏன்? ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை! இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரக மீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குருதியும் இருக்கின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. <b style="color: blue;">முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? “இது வேறோரு கடவுள்”, “பொய்யான கடவுள்” என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். </b><b style="color: blue;">மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது. கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார்</b><span style="color: blue;">.</span> விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பில் அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப் பற்றி விளக்குவோம். முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். <b style="color: blue;">திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை! மேலும் மூல பாசைகளான ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில்லை.</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">என்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியதாகும். முஹம்மது என்பவர் யார்? <b style="color: blue;">கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை! மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன்</b><span style="color: blue;">.</span> முஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். <b style="color: blue;">அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள்</b>. உண்மையில் 1418 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை! இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">இஸ்ரவேலர்களே! கேளுங்கள்! – இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும். ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். <b style="color: blue;">கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம். முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம்</b><span style="color: blue;">.</span> எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையயின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுக கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்ப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு ஒண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக்கொண்டும், பிரார்த்தனைகள் செய்துக் கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன். <b style="color: blue;">நான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன்.</b> உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டிருந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="color: blue; text-align: justify;"><b>நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள்! ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள்.</b></div><div style="color: blue; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன்முறையாக இறைவனின் பெயரை கொண்டு <b style="color: blue;">‘இறைவா! நீ ஒருவனே! நீயே உண்மையான இறைவன்’</b><span style="color: blue;"> </span>என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">இதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை! நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளிலிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்கா விட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">“நீர் கூறும்: ‘மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ‘அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)” (அல்-குர்ஆன் 6:162-163)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">சகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரிகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றி: www.suvanathendral.com </div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-77977044099170551672010-09-18T01:19:00.000-07:002010-09-18T01:19:52.538-07:00திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்<div style="text-align: justify;">இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.<br />
<br />
<strong style="color: blue;">சகோதரியின் கேள்வி: -</strong><br />
<strong></strong><br />
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?<br />
<br />
<strong><span style="color: blue;">டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -</span></strong><br />
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.<br />
<br />
அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.<br />
<br />
லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:<br />
<br />
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? <strong style="color: blue;">நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.</strong> ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).<br />
<br />
இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.<br />
<br />
மேலும் <strong style="color: blue;">திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை</strong><span style="color: blue;">.</span> ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.<br />
<br />
திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -<br />
<br />
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; <strong style="color: blue;">இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;</strong> அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)<br />
<br />
மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -<br />
<br />
திடமாக <strong style="color: blue;">எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்</strong><span style="color: blue;">;</span> வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)<br />
<br />
<strong style="color: blue;">'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை</strong><span style="color: blue;">.</span> பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,<br />
<br />
பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7<br />
<br />
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;<br />
<br />
ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், <span style="color: blue;">'</span><strong><span style="color: blue;">பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.</span></strong><br />
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.<br />
<br />
ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)<br />
<br />
யோவான், 14 அதிகாரம், வசனம் 28<br />
<br />
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், <strong><span style="color: blue;">ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.</span></strong><br />
யோவான், 10 அதிகாரம், வசனம் 29<br />
<br />
அவைகளை எனக்குத் தந்த <strong style="color: blue;">என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்</strong><span style="color: blue;">;</span> அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.<br />
<br />
மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28<br />
<br />
<strong style="color: blue;">நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்,</strong> தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.<br />
<br />
லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20<br />
<br />
<strong style="color: blue;">நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்</strong><span style="color: blue;">, </span>தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.<br />
<br />
யோவான், 5 அதிகாரம், வசனம் 30<br />
<br style="color: blue;" /><strong style="color: blue;">நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.</strong><br style="color: blue;" /><strong style="color: blue;">நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!</strong><br />
<br />
(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)<br />
<br />
யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.<br />
<br />
இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:<br />
</div><ul style="text-align: justify;"><li>ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்</li>
<li>பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம் </li>
<li>பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்</li>
<li>குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்</li>
</ul><div style="text-align: justify;">எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.<br />
<br />
திருக்குர்ஆன் கூறுகிறது.<br />
<br />
அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><a href="http://www.suvanathendral.com/avpage/christianity/trinity3_drzakirV.html"><span style="color: #ff6600;">வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-1</span></a> English<br />
<br />
<a href="http://www.suvanathendral.com/avpage/christianity/trinity2_drzakirV.html"><span style="color: red;">வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-2</span></a> English</div><div style="text-align: justify;"> <br />
நன்றி:www.suvanathendral.com/</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-83244474370852983852010-09-07T00:30:00.000-07:002010-09-07T00:30:40.628-07:00பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?<div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு... </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.. </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">பரிணாமவியலை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? </div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;">a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? </span></div></div></div></blockquote><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;">b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா? </span></div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவர் முன்வைத்த கோட்பாடும் தான் பொறுப்பு. </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்று கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="color: blue; margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><b>ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கோட்பாடு இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. </b></div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">குரங்கினத்திற்கும் (APE) ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும் (நீக்ரோ), ஆஸ்திரேலியர்களையும் வைத்த அவரது செயல், </div></div></div><ul style="text-align: justify;"><li>ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர், </li>
<li>பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள், </li>
<li>அதனால் அவர்களே மேம்பட்டவர்கள் </li>
</ul><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;"><b>டார்வின் இன வெறியரா ?</b></span></div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">உதாரணத்துக்கு, 1830 களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இது குறித்து அவர் எழுதும் போது:</div></div></div><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! <span class="Apple-style-span" style="background-color: cyan;">It makes one’s blood boil</span>, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" </span>--- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.</div></div></div></blockquote><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;"><b>அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா? </b></span></div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஆம். உண்மைதான். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">முதலில் மற்ற இனத்தவரை எப்படி அணுகினார் என்று பார்ப்போம். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.</div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"<span class="Apple-style-span" style="background-color: cyan;">At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world</span>. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, <span class="Apple-style-span" style="background-color: cyan;">and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla</span>"</span> --- Charles Darwin in his book "The Descent of Man", p-201 </div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,</div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: #0b5394;"><span class="Apple-style-span" style="color: red;">"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்"</span> </span>என்று கூறுகிறார். </div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div class="separator" style="clear: both; margin: 0px; text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIQiXNU7gquJNDkV3QDRfMBgEmzsOcRc4uFrfTx8MoM3RvtEU4zWJkDR8H4Ii_akGR-lZO5lfHplPyGvqT3oaWm7lCjHZDMXnbJy4x3hCg9GhUrpBLdeAqthWIa04Eh6Nxwd1xkOgXWF0/s1600/250px-Darwin_-_Descent_of_Man_(1871).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIQiXNU7gquJNDkV3QDRfMBgEmzsOcRc4uFrfTx8MoM3RvtEU4zWJkDR8H4Ii_akGR-lZO5lfHplPyGvqT3oaWm7lCjHZDMXnbJy4x3hCg9GhUrpBLdeAqthWIa04Eh6Nxwd1xkOgXWF0/s400/250px-Darwin_-_Descent_of_Man_(1871).jpg" width="251" /></a></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">அதே பத்தியின் கடைசியில், அவர், <span class="Apple-style-span" style="color: red;">கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலியர்களையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார்.</span> அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க <a href="http://ethirkkural.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3F"><span class="Apple-style-span" style="color: red;">நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?</span></a>) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கூறினார்.</div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"Their mental characteristics are likewise <span class="Apple-style-span" style="background-color: cyan;">very distinct;</span> chiefly as it would appear in their emotional, but partly in their <span class="Apple-style-span" style="background-color: cyan;">intellectual faculties</span>"</span> --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343</div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, </div><div style="margin: 0px;"> </div><div style="margin: 0px;">அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே? </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்... </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"> </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல் படுத்த நினைத்தாரோ ஹிட்லர்? </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.</div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"</span><span class="Apple-style-span" style="background-color: cyan;"><span class="Apple-style-span" style="color: blue;">Those who want to live, let them fight,</span></span><span class="Apple-style-span" style="color: blue;"> and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live"</span> --- Adolf Hitler, at his third public speech after taking power.</div></div></div></blockquote><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள்</span> --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power </div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து: </div></div></div><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, <span class="Apple-style-span" style="background-color: cyan;">to establish an evolutionary higher stage of being</span>, may thus be rendered futile"</span> ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.</div></div></div></blockquote><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் </span>--- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People. </div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"> </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக் கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய SUPERIOR இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர். </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, <span class="Apple-style-span" style="color: red;">" The Origin of Species by Means of Natural Selection—or <span class="Apple-style-span" style="background-color: cyan;">The Preservation of Favoured Races in the Struggle for Life</span></span><span class="Apple-style-span" style="background-color: cyan;">"</span>. </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div class="separator" style="clear: both; margin: 0px; text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEn0NUbA9vDQPO4ImIMq01Jiq6UTN0nlhGGHanTpKL3vKCy9KARiFsGtEaL5WHE6rz4wmAQ3DzeMF8mHuCpcRBXtteVkkRjo_71HnDe730UO6kk-F_POMeyIuAryOiAxn1Sr4qqP5PIjo/s1600/Picture2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEn0NUbA9vDQPO4ImIMq01Jiq6UTN0nlhGGHanTpKL3vKCy9KARiFsGtEaL5WHE6rz4wmAQ3DzeMF8mHuCpcRBXtteVkkRjo_71HnDe730UO6kk-F_POMeyIuAryOiAxn1Sr4qqP5PIjo/s640/Picture2.png" width="448" /></a></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது. </div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.</div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">“<span class="Apple-style-span" style="background-color: cyan;">The leader of Germany is an evolutionist not only in theory</span>, but, as millions know to their cost, in the <span class="Apple-style-span" style="background-color: cyan;">rigor of its practice</span>. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front”</span> --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. </div></div></div></blockquote><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி"</span> --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. </div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர்.</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.<br />
<br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமவியலை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><ul style="text-align: justify;"><li><b>ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா? </b></li>
</ul><ul style="text-align: justify;"><li><b>ஒரு ஐரோப்பியர் வந்து, </b><span class="Apple-style-span" style="color: red;"><b>"நான் உன்னை விட உயர்ந்தவன்"</b></span><b> என்று சொன்னால், </b><span class="Apple-style-span" style="color: blue;"><b>"ஆமாம், நீ சொல்லுவது சரிதான்"</b></span><b> என்று ஆமோதிப்பீர்களா?</b> </li>
</ul><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">அப்படியானால், இனிமேலும் தயவுகூர்ந்து <span class="Apple-style-span" style="color: blue;">"உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்"</span> என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், <span class="Apple-style-span" style="color: red;">அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?,</span></div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;">என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். <b>அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...</b></div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="text-align: justify;"><blockquote><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; <span class="Apple-style-span" style="background-color: cyan;">உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.</span> நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்"</span> --- அல்குர்ஆன் 49:13</div></div></div></blockquote></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><div style="margin: 0px;"><br />
</div></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><br />
</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><br />
</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><br />
</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><br />
<br />
</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><b>My Sincere Thanks To:</b></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">1. British Broadcasting Corporation (BBC)</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">2. New Scientist Website.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><br />
</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;"><b>References:</b></div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life --- Charles Darwin, 1859.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">2. The Descent of Man --- Charles Darwin, 1971.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy --- Charles Darwin, 1845.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">7. Scientific Racism - Wikipedia.</div></div><div style="margin: 0px; text-align: justify;"><div style="margin: 0px;">8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.</div><div style="margin: 0px;"> </div><div style="margin: 0px;"><span class="post-author vcard">by <span class="fn">Aashiq Ahamed</span></span><br />
<span class="post-author vcard"><span class="fn"> </span></span><br />
Source: http://ethirkkural.blogspot.com/ <span class="post-author vcard"><span class="fn"><br />
</span></span></div></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-36665463487127734242010-09-06T23:52:00.000-07:002010-09-07T00:09:20.911-07:00நான் இஸ்லாத்தைத் தழுவினேன்-ஆமினா அசில்மி-02<div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;">சென்ற பதிவின் தொடர்ச்சி....</span></span></div><div style="text-align: justify;"><br />
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. <span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: 13px; line-height: normal;">ஆமினா அசில்மி</span> அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDHmrYj_niDT8e1hwc3xjoepzWeaqdTlS6FzAkuWgjJxhOmPO5xETbrWK3rN5CgMFqpBpTT57pzN2ZvhmyFmT3tKESPlCJC8eaWgujZlCTPWxhmFjDXrVTf1hU2AAk5Dx0hEGOMuIoqr0/s1600-h/Amina_Assilmi-The_True_Libe.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"><img border="0" height="153" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDHmrYj_niDT8e1hwc3xjoepzWeaqdTlS6FzAkuWgjJxhOmPO5xETbrWK3rN5CgMFqpBpTT57pzN2ZvhmyFmT3tKESPlCJC8eaWgujZlCTPWxhmFjDXrVTf1hU2AAk5Dx0hEGOMuIoqr0/s200/Amina_Assilmi-The_True_Libe.jpg" width="200" /></a></div><div style="text-align: justify;">குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.<br />
<br />
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.<br />
<br />
விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.<br />
அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.</div><div style="text-align: justify;"><br />
அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் </div><div style="text-align: justify;"><br />
வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும். ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.<br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- அல்குர்ஆன் 2:42 </span></blockquote></div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"</span></blockquote><div style="text-align: justify;">வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.</div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாவிடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்" </span></blockquote><div style="text-align: justify;">ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாவிற்காக குழந்தைகளை (ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்...<br />
<br />
<b> </b><br />
<b>தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்</b>.</div><div style="text-align: justify;"><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"</span></blockquote></div><div style="text-align: justify;"> மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார்.</div><div style="text-align: justify;"><br />
<a href="http://www.blogger.com/post-edit.g?blogID=4324661939698547550&postID=3666546348712773424" name="more"></a> தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்க்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குர்ஆன் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.</div><div style="text-align: justify;"><br />
<b>இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிகஅதிகமாக கொடுக்க ஆரம்பித்தான். </b></div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;"> "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- </span><span class="Apple-style-span" style="color: blue;">அல்குர்ஆன்</span><span class="Apple-style-span" style="color: blue;"> 2:286</span></blockquote><div style="text-align: justify;">உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குர்ஆன் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.<br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- </span><span class="Apple-style-span" style="color: blue;">அல்குர்ஆன்</span><span class="Apple-style-span" style="color: blue;"> 4:36 </span></blockquote>ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார். </div><div style="text-align: justify;"> <br />
அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.</div><div style="text-align: justify;"><br />
அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.</div><div style="text-align: justify;"><br />
இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார். </div><div style="text-align: justify;"><blockquote> <span class="Apple-style-span" style="color: red;">" நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்" </span></blockquote></div><div style="text-align: justify;">அதற்கு அவரது தாய் " அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...</div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகி</span><span class="Apple-style-span" style="color: red;">விட்டீர்கள்"</span></blockquote><div style="text-align: justify;">"ஒ அப்படியா, இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"</div><div style="text-align: justify;"><br />
சுப்ஹானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....</div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"</span></blockquote><div style="text-align: justify;">பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும். </div><div style="text-align: justify;"><br />
16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.</div><div style="text-align: justify;"><br />
ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமை படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.</div><div style="text-align: justify;"><br />
ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.</div><div style="text-align: justify;"><br />
<b>அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. </b></div><ul style="text-align: justify;"><li>ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள். </li>
<li>அன்றோ இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர். </li>
</ul><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"</span></blockquote><ul style="text-align: justify;"><li>அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ <span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;">சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். </span></li>
</ul><br />
<div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;">இறைவன் தன்னை நாடிவந்தவர்க்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர். </span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;"></span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;"> </span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;">கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.</span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;"></span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;"></span></div><div class="separator" style="clear: both; text-align: justify;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKAFRokoPa3OMCIs4rm-IbVbQ2RSSwQFe9kwgKb7YCH3C-KP5jwMwwBkWgfbtTNrEyA6MNzFdqolu5lbdexeNqT3ZCn23QRkNUDApfrrcGXNFDd-BS9jiDBXZk4NwhuIeVeYfunWkTebs/s1600-h/aminah_zoom.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKAFRokoPa3OMCIs4rm-IbVbQ2RSSwQFe9kwgKb7YCH3C-KP5jwMwwBkWgfbtTNrEyA6MNzFdqolu5lbdexeNqT3ZCn23QRkNUDApfrrcGXNFDd-BS9jiDBXZk4NwhuIeVeYfunWkTebs/s320/aminah_zoom.jpg" /></a></div><div style="text-align: justify;"><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px; line-height: normal;">சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.</span></div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோ</span><span class="Apple-style-span" style="color: red;">ம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"</span></blockquote><div style="text-align: justify;">எல்லா புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்தபுற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள்.<br />
<br />
இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.</div><div style="text-align: justify;"><blockquote><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள்</span><span class="Apple-style-span" style="color: blue;">செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு" --- </span><span class="Apple-style-span" style="color: blue;">அல்குர்ஆன்</span><span class="Apple-style-span" style="color: blue;"> 11:11 </span></blockquote></blockquote></div><div style="text-align: justify;"><blockquote><blockquote><span class="Apple-style-span" style="color: blue;"> " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செ</span><span class="Apple-style-span" style="color: blue;">ய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூ</span><span class="Apple-style-span" style="color: blue;">லி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- </span><span class="Apple-style-span" style="color: blue;">அல்குர்ஆன்</span><span class="Apple-style-span" style="color: blue;"> 17:9 </span></blockquote></blockquote></div><div style="text-align: justify;"><br />
<div style="color: blue;"><b>குறிப்பு:</b></div>ஆமினா அவர்களின் சொற்ப்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யுடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்ப்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Times,'Times New Roman',serif;"><b><span class="Apple-style-span" style="font-size: small;">References:</span></b></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">1. Interview with Rebecca Simmons of </span></span><span class="Apple-style-span" style="line-height: 18px;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">The Knoxville News-Sentinel in Tennessee</span></span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">2. islamreligiondotcom</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">3. youtubedotcom</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">4. famousmuslimsdotcom</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Times,'Times New Roman',serif;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: Times,'Times New Roman',serif;"><b>தமிழாக்கம்:</b> ஆஷிக் அஹ்ம</span><span class="Apple-style-span" style="font-family: Times,'Times New Roman',serif;">த்</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> Source: http://ethirkkural.blogspot.com/ <span class="post-author vcard"><span class="fn"><br />
</span></span><span class="Apple-style-span" style="font-family: Times,'Times New Roman',serif;"><br />
</span></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-6048943690427785062010-09-06T23:40:00.000-07:002010-09-06T23:40:12.424-07:00நான் இஸ்லாத்தைத் தழுவினேன்- ஆமினா அசில்மி-01<div style="text-align: justify;"><br />
<span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: 13px; line-height: normal;"> </span><br />
</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0fzwCqXhlYZt9q1BS5X73po79JL9zfkFp_ur74sBpDNV2lYkK7hlz6hnOawiHIQVK9SGQkpDgW-3LxVF4tFQH2WRg-2vpPWP9QObGReMH8dlvjQleqHIwFLxDV-X_rfOamgaDEFUVgz0/s1600-h/image001.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0fzwCqXhlYZt9q1BS5X73po79JL9zfkFp_ur74sBpDNV2lYkK7hlz6hnOawiHIQVK9SGQkpDgW-3LxVF4tFQH2WRg-2vpPWP9QObGReMH8dlvjQleqHIwFLxDV-X_rfOamgaDEFUVgz0/s320/image001.gif" /></a></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: black;">ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க </span><span class="Apple-style-span" style="color: #666666; font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px;"><span class="Apple-style-span" style="color: black;">அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர்</span> <b><span class="Apple-style-span" style="color: black;">(</span></b><span class="Apple-style-span" style="color: black;"> </span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;">International Union of Muslim Women <span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;">). </span></b></span></span></b></span></span></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: #666666; font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"> </span></b></span></span></b></span></span></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: #666666; font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;">ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். </span></span></b></span></span></b></span></span></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: #666666; font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span></span></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: #666666; font-family: 'Trebuchet MS',Tahoma,sans-serif; font-size: 12px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span></span></span></span><br />
<span class="Apple-style-span" style="color: red;">"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- </span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: red;">ஆமினா அசில்மி</span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: red;"> </span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;">ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.</span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; line-height: normal;">ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.</span><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span><br />
<a href="" name="more"></a><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;">அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். <span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;">ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார். </span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"></span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;">மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார். </span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"></span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;">அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்</span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"></span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: black; font-family: arial,helvetica,sans-serif; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: #111111; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"> </span></span></b></span></span></b></span></span></span></b></span></span></b></span></div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்" </span></blockquote><div style="text-align: justify;">ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது<br />
<br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை </span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,helvetica,sans-serif; font-size: 13px; line-height: 20px;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="font-family: arial,helvetica,sans-serif; font-weight: normal;"><b><span style="font-family: Arial; font-size: 10pt;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-weight: normal; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: red;">கிறிஸ்துவராக்குவேன்"</span></span></span></b></span></span></b></span></blockquote><div style="text-align: justify;"> இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.<br />
<br />
</div><blockquote> <span class="Apple-style-span" style="color: red;">" நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"</span></blockquote><div style="text-align: justify;">பிறகு <span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: 13px; line-height: normal;">ஆமினா அசில்மி</span> அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...<br />
<br />
</div><blockquote> <span class="Apple-style-span" style="color: red;"> "நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக"</span></blockquote><div class="separator" style="clear: both; text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMK1O3rBXJ8BkjgSWkBG-N7OS5FzqnF-owrwnNLuoXx-g5c6PUt-Z_rW86I9D0l9O5g1g7tFMr8gXqS5-h2SB-2yqHq5Ni0B3tvZxPYti5BmMMubVicAg4vLowp9I2kHqg3uS2KAYNXTM/s1600-h/275(Assilmi)-1.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMK1O3rBXJ8BkjgSWkBG-N7OS5FzqnF-owrwnNLuoXx-g5c6PUt-Z_rW86I9D0l9O5g1g7tFMr8gXqS5-h2SB-2yqHq5Ni0B3tvZxPYti5BmMMubVicAg4vLowp9I2kHqg3uS2KAYNXTM/s320/275(Assilmi)-1.gif" /></a></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: 13px; line-height: normal;">ஆமினா அசில்மி</span> அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.<br />
<br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."</span></blockquote><div style="text-align: justify;">பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். <span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: 13px; line-height: normal;">ஆமினா அசில்மி</span> அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.<br />
அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.<br />
<br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: red;">"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"</span></blockquote><div style="text-align: justify;">1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.<br />
<br />
</div><blockquote> <span class="Apple-style-span" style="color: red;"> " இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"</span></blockquote><blockquote> <span class="Apple-style-span" style="color: red;">"நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்" </span></blockquote><div style="text-align: justify;">இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. <span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande',Verdana,Arial,Helvetica,sans-serif; font-size: 13px; line-height: normal;">ஆமினா அசில்மி</span> அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.<br />
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.<br />
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே. <br />
ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</div><div style="text-align: justify;"><br />
இன்ஷா அல்லாஹ்...தொடரும்</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><div style="text-align: justify;"><br />
<span class="post-author vcard">by <span class="fn">Aashiq Ahamed</span></span></div><div style="text-align: justify;"><span class="post-author vcard"><span class="fn"> </span></span></div><div style="text-align: justify;"> Source: http://ethirkkural.blogspot.com/ <span class="post-author vcard"><span class="fn"><br />
</span></span></div> </div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-73695667918465891512010-09-02T02:12:00.000-07:002010-09-02T02:12:21.692-07:00யார் இந்த அஹ்மத் தீதாத்?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLHeFcSe2B2dkR-F7V5kUzrCptLsb8u7-BCh4XBnjIL12Lf0TqMdGLxmFKHFFYTWOgEUZSToPoCQLfUJBrZ8bgw1o3C99DL4mWmp-9iWq-RfTiUXSVbQmeAd9EO2UWLk1KrOpZMydS5W4/s1600-h/Bismillah_2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLHeFcSe2B2dkR-F7V5kUzrCptLsb8u7-BCh4XBnjIL12Lf0TqMdGLxmFKHFFYTWOgEUZSToPoCQLfUJBrZ8bgw1o3C99DL4mWmp-9iWq-RfTiUXSVbQmeAd9EO2UWLk1KrOpZMydS5W4/s320/Bismillah_2.JPG" /></a></div><br />
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...<br />
<br />
<div style="text-align: justify;">உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><div style="text-align: justify;">அஹ்மத் தீதத் அவர்கள், </div><br />
<ul><li>ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்</li>
<li>ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு</li>
<li>எண்ணற்றவர்களை தாவாஹ் பணிக்கு அழைத்து வந்தவர்</li>
<li>எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் </li>
<li>கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.</li>
<li>தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.</li>
</ul><br />
<div style="text-align: justify;">அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1yF64WEfzrsIvPvoWJOyoTkoHoGzbW68oeQ-MFyJQhLw4t1mJSOP6ZYzrfloIB2w-BOJswBsoxLD_ZSEuskAqrvA7etnUXdc4rcccZlEzavQcuCr7hsSZFcQjHjxuRRELU316Z9ANGyI/s1600-h/220px-Choice_deedat.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1yF64WEfzrsIvPvoWJOyoTkoHoGzbW68oeQ-MFyJQhLw4t1mJSOP6ZYzrfloIB2w-BOJswBsoxLD_ZSEuskAqrvA7etnUXdc4rcccZlEzavQcuCr7hsSZFcQjHjxuRRELU316Z9ANGyI/s400/220px-Choice_deedat.jpg" width="262" /></a></div><br />
<div style="text-align: justify;">இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும் கூறுவதை பார்க்கலாம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்... </div><br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: medium;"><b>1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, <span class="Apple-style-span" style="font-weight: normal;"><b>November 1986.</b></span></b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: medium;"><b><span class="Apple-style-span" style="font-size: 14px; font-weight: normal; line-height: 25px;"><b><span class="Apple-style-span" style="font-size: small;">Debate Title: <span class="Apple-style-span" style="font-weight: normal;">Is the Bible God's Word?</span></span></b></span></b></span><br />
<br />
<div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAUB8xyTSckHOgziTqnlUzR8iYMjRlHJhrTlDgVQ7MhT3QT0Jgipn9cX6mMuZahjLei349M1QMs5ZbVKJd_Uzxl1d0l2nJSMHdm7ezD69wPL76FDsmQTEMl7Tlz2RRpgumbIJG6oSQL_A/s1600-h/vlcsnap-83643.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAUB8xyTSckHOgziTqnlUzR8iYMjRlHJhrTlDgVQ7MhT3QT0Jgipn9cX6mMuZahjLei349M1QMs5ZbVKJd_Uzxl1d0l2nJSMHdm7ezD69wPL76FDsmQTEMl7Tlz2RRpgumbIJG6oSQL_A/s320/vlcsnap-83643.png" /></a></div>அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist). </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: blue;">"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். </span><br />
<span class="Apple-style-span" style="color: blue;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="color: blue;">நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை</span>(?)<span class="Apple-style-span" style="color: blue;"> மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6rAcS5z9gZMLo0dpRwENMb8Sk0YaQOYbqeiuPUdP5IpWIClFm6ZdcLWp6dc8CkSJpOzFKKAbqnQM2vFWVq0uyd2ZrrMJ7FZvDHsdAN4ClihgF_4mRM3Hr22_EIbXl1lSiWyqmpjsHrfQ/s1600-h/vlcsnap-83438.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6rAcS5z9gZMLo0dpRwENMb8Sk0YaQOYbqeiuPUdP5IpWIClFm6ZdcLWp6dc8CkSJpOzFKKAbqnQM2vFWVq0uyd2ZrrMJ7FZvDHsdAN4ClihgF_4mRM3Hr22_EIbXl1lSiWyqmpjsHrfQ/s320/vlcsnap-83438.png" width="257" /></a></div>ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.<br />
<br />
இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.<br />
<br />
இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid6vYep866lXI9IpsXgFZTGn2TcrVDhOzyJnJeqEdDk0LNeUy_H4UI8YUtWF-YaXRB02RExBDjUSbQksZcWWLHkgJVlyXzPji30Zhy9pzlNPnPBdVeVxmvr3Sr4MYo1-16z1lM_YYiZbQ/s1600-h/vlcsnap-498005.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid6vYep866lXI9IpsXgFZTGn2TcrVDhOzyJnJeqEdDk0LNeUy_H4UI8YUtWF-YaXRB02RExBDjUSbQksZcWWLHkgJVlyXzPji30Zhy9pzlNPnPBdVeVxmvr3Sr4MYo1-16z1lM_YYiZbQ/s400/vlcsnap-498005.png" width="400" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTESCHrpN8oU7yeGdgIv6Od83h7jRg5D2OXZ6GL2PdPmavBeYCGqI0hNAembkN1FK8GOgV3uGeSDVewLBmvF5YV3h8DyGwQT3j-aqoZeCNt5Hoj95s3ztIRLCdG58dUfpxaNV9smyRiw0/s1600-h/vlcsnap-498122.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTESCHrpN8oU7yeGdgIv6Od83h7jRg5D2OXZ6GL2PdPmavBeYCGqI0hNAembkN1FK8GOgV3uGeSDVewLBmvF5YV3h8DyGwQT3j-aqoZeCNt5Hoj95s3ztIRLCdG58dUfpxaNV9smyRiw0/s400/vlcsnap-498122.png" width="400" /></a></div><br />
அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே... </div><br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: medium;"><b>2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: medium;"><b><span class="Apple-style-span" style="font-size: 14px; font-weight: normal; line-height: 25px;"><b><span class="Apple-style-span" style="font-size: small;">Debate Title:</span></b><span class="Apple-style-span" style="font-size: small;"> Is the Bible the true word of God? </span></span></b></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUQqKRSqNJljVA_40DiSWU0xUC-ay6Hns84YqcwjlN-k0_DSMUZkXSPsluo5X5Oq4K-2lMDQGjlqKxAfwY9inMKS-PHCEfy6SM6j_K1DOmur9G2z3i09aKn-JZdVJ4x-d-bxXBbGopDbM/s1600-h/vlcsnap-500840.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUQqKRSqNJljVA_40DiSWU0xUC-ay6Hns84YqcwjlN-k0_DSMUZkXSPsluo5X5Oq4K-2lMDQGjlqKxAfwY9inMKS-PHCEfy6SM6j_K1DOmur9G2z3i09aKn-JZdVJ4x-d-bxXBbGopDbM/s320/vlcsnap-500840.png" /></a></div>ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச பட்டுவிட்டார்.<br />
<br />
சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)<br />
<br />
"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,<br />
<br />
பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.<br />
<br />
பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,<br />
<br />
"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuPUPAyYsGveWCb_ZQycEaHynvMMW6rjdYdPhREecUgdM3gBwNlhp2EKOVv8SiLGAWS-4i50pzxRDercdGaaX_4UzBZArxnu43QAepQs8kI61JbGtc0wFYs22a_ar28nuVZpRgYNnfU_Q/s1600-h/vlcsnap-500271.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuPUPAyYsGveWCb_ZQycEaHynvMMW6rjdYdPhREecUgdM3gBwNlhp2EKOVv8SiLGAWS-4i50pzxRDercdGaaX_4UzBZArxnu43QAepQs8kI61JbGtc0wFYs22a_ar28nuVZpRgYNnfU_Q/s400/vlcsnap-500271.png" width="400" /></a></div><br />
<br />
பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...<br />
<br />
பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPN-UfPzg9MieQGwza8QchZVRrpQcBuBdjgCJhVoml4Q8fx7wtLthyFSIgzuZeqesect2IZQdP4IJPz_Pb8DqM7NfmXZnWbCWpmhSGogFRrr7EB9VW0vhPzj9VpvAT8cjJiexXgnZ0-pI/s1600-h/vlcsnap-44630.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPN-UfPzg9MieQGwza8QchZVRrpQcBuBdjgCJhVoml4Q8fx7wtLthyFSIgzuZeqesect2IZQdP4IJPz_Pb8DqM7NfmXZnWbCWpmhSGogFRrr7EB9VW0vhPzj9VpvAT8cjJiexXgnZ0-pI/s400/vlcsnap-44630.png" width="400" /></a></div><br />
<br />
என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...<br />
<br />
தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.<br />
<br />
<span class="Apple-style-span" style="color: blue;">"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" </span>என்று பாஸ்டர் கூற...<br />
<br />
அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....<br />
<br />
"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் <b>Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings </b>"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNk6v0a8JceD92pttIvO47opK9sAe67k4dYqFE30JFSxmMjtH5Btyxom5JLPcufuGHdhVoUqUw6ASrGJMi_nlfkySLWk4PDUpu_JQhbURJ7ruz1ChjidrFRlrujHV4pUpfZBeInz5raec/s1600-h/vlcsnap-44982.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNk6v0a8JceD92pttIvO47opK9sAe67k4dYqFE30JFSxmMjtH5Btyxom5JLPcufuGHdhVoUqUw6ASrGJMi_nlfkySLWk4PDUpu_JQhbURJ7ruz1ChjidrFRlrujHV4pUpfZBeInz5raec/s400/vlcsnap-44982.png" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgro0N8Y8W6UmJ13aW48DnQ8vnww34R4LDIgb2kRyKiemQiiOPbI5W1fC06nlFu6iCRxWXmEIZ4YLodgZY1210-lXJMO3bR1KVt-jZLplozlD0hb9pOwemMsNc7zHaPf_zw_qFKqfcbz1s/s1600-h/vlcsnap-70923.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgro0N8Y8W6UmJ13aW48DnQ8vnww34R4LDIgb2kRyKiemQiiOPbI5W1fC06nlFu6iCRxWXmEIZ4YLodgZY1210-lXJMO3bR1KVt-jZLplozlD0hb9pOwemMsNc7zHaPf_zw_qFKqfcbz1s/s400/vlcsnap-70923.png" width="400" /></a></div><br />
<br />
என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது. <br />
<br />
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw5X_CNsiCh9G_ACl_JUOKeqrc-5y2C2puo065BS8zaCAiFm351-lYn6-b4CCAHKWENgkloSVkMIp4FJ7kJHiDLbHAXZmh2zDeR6XBV0_KikhZJzPBty0ZNJb0Vw2AReBGrIQTHCT7zlo/s1600-h/vlcsnap-84412.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw5X_CNsiCh9G_ACl_JUOKeqrc-5y2C2puo065BS8zaCAiFm351-lYn6-b4CCAHKWENgkloSVkMIp4FJ7kJHiDLbHAXZmh2zDeR6XBV0_KikhZJzPBty0ZNJb0Vw2AReBGrIQTHCT7zlo/s400/vlcsnap-84412.png" width="400" /></a></div><br />
<br />
அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள், ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7FfwuvZbo-JsZn99PK40wF2ckgFJa9y5-8YczN862ZbTO69TK47QSfnzJNse203FkX9lf4cPHT3sr1USbg4TTeDS6CH55lBtJzxmpWJd3cXQCsHyk51aNfamAAITIkMF4UD4D-F2eEUQ/s1600-h/vlcsnap-86897.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7FfwuvZbo-JsZn99PK40wF2ckgFJa9y5-8YczN862ZbTO69TK47QSfnzJNse203FkX9lf4cPHT3sr1USbg4TTeDS6CH55lBtJzxmpWJd3cXQCsHyk51aNfamAAITIkMF4UD4D-F2eEUQ/s400/vlcsnap-86897.png" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMRekSE0cF5V9B3nqd3uDxWtpOgpa371uuoLk0GXixK48rzDbQeNvQP6S9912Lq1QKu35gwGGJcRG5CA3L3WFdEwsFVtAH4qmgrCdYhCb3EE3hnd2WuPeCrSCItsBC12hpiZrZaxSrPxI/s1600-h/vlcsnap-87536.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMRekSE0cF5V9B3nqd3uDxWtpOgpa371uuoLk0GXixK48rzDbQeNvQP6S9912Lq1QKu35gwGGJcRG5CA3L3WFdEwsFVtAH4qmgrCdYhCb3EE3hnd2WuPeCrSCItsBC12hpiZrZaxSrPxI/s400/vlcsnap-87536.png" width="400" /></a></div><br />
<br />
"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"<br />
<br />
என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். <br />
<br />
<br />
<b><span class="Apple-style-span" style="font-size: medium;">3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; font-weight: normal; line-height: 25px;"><b><span class="Apple-style-span" style="font-size: small;">Debate Title:</span></b><span class="Apple-style-span" style="font-size: small;"> Is Jesus God?</span></span></span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim8b7KrOxzUCbLuq4wIY_FnjPtH1CdZu1Bg1B5QRVzPAB5UiG3uMgZzeVbhGWkIF9H47BUbb60kZBiOk4wHotMe2aN-qgT95u-mpNBo_HCxLU-u_TpresioQ8toZqJEuDJZ64C7jMqRWE/s1600-h/vlcsnap-512973.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim8b7KrOxzUCbLuq4wIY_FnjPtH1CdZu1Bg1B5QRVzPAB5UiG3uMgZzeVbhGWkIF9H47BUbb60kZBiOk4wHotMe2aN-qgT95u-mpNBo_HCxLU-u_TpresioQ8toZqJEuDJZ64C7jMqRWE/s320/vlcsnap-512973.png" /></a></div>பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.<br />
<br />
ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப் பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.<br />
<br />
விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"<br />
<br />
விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,<br />
<br />
"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க<br />
<br />
கூட்டத்தில் இருந்து ஒரு குரல் <span class="Apple-style-span" style="color: blue;">"ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicD_Nhia32TdCwEF7PW0SvZafHSXzND4qhBBXolFsK9OHx27oQSm3ch-X6vVA12r2dHHpa8aMA6LV-flaOJILxF5BWzFBJz_BTgDyqEWOpHWIMYAEt_yLNXypJI9W2HkgypkdrGT6Ct_Y/s1600-h/vlcsnap-511363.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="327" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicD_Nhia32TdCwEF7PW0SvZafHSXzND4qhBBXolFsK9OHx27oQSm3ch-X6vVA12r2dHHpa8aMA6LV-flaOJILxF5BWzFBJz_BTgDyqEWOpHWIMYAEt_yLNXypJI9W2HkgypkdrGT6Ct_Y/s400/vlcsnap-511363.png" width="400" /></a></div><br />
<br />
இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,<br />
<br />
தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்.... <br />
<br />
"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"<br />
<br />
என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.<br />
<br />
அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.<br />
<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: medium;"><b>4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.</b></span><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">Debate Title:</span></b><span class="Apple-style-span" style="font-size: small;"> Is Jesus God?</span><br />
<br />
டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfAZbSWrOido-8V8jFCTDo-F-p_NNdu4iJTGYP_raqrDdBOH7pr62EvtWbfX_o0jW72NZcq1jSQe46hsKTH_9jD6pyuuzxP981m6Fj-zX11KioqONMDoqxl0j65e6MgoE04zl0AES8_jg/s1600-h/vlcsnap-505881.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfAZbSWrOido-8V8jFCTDo-F-p_NNdu4iJTGYP_raqrDdBOH7pr62EvtWbfX_o0jW72NZcq1jSQe46hsKTH_9jD6pyuuzxP981m6Fj-zX11KioqONMDoqxl0j65e6MgoE04zl0AES8_jg/s320/vlcsnap-505881.png" /></a></div><div style="text-align: justify;">ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.</div><br />
கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgajYx8V1wnB2TkApeVcEDNrwVoMkRFgEGx4ldRqZyU-JzcxPkC1wG1Db5jdSxVG_pmQAtf-x98YisB5H8c2ux649eMGNcCxBdxPzA2eTto9IN7EyMvd5SFmRzdO1RtNFNH6KX-4uXTuIs/s1600-h/vlcsnap-505670.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgajYx8V1wnB2TkApeVcEDNrwVoMkRFgEGx4ldRqZyU-JzcxPkC1wG1Db5jdSxVG_pmQAtf-x98YisB5H8c2ux649eMGNcCxBdxPzA2eTto9IN7EyMvd5SFmRzdO1RtNFNH6KX-4uXTuIs/s320/vlcsnap-505670.png" /></a></div><br />
<br />
அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர். <br />
<br />
அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.<br />
<br />
அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.<br />
<br />
<b>இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார்.</b> அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.<br />
<br />
ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான் அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....<br />
<br />
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.<br />
<br />
இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுபானல்லாஹ்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiENxTx4OcoTrf1KxeWgoi3M8U6Tdz1Qg1HkOJwtc6MEW5Aq60LB4DJN0DQthKR72VVbLDl9UM_SRCFlUzapWMVDiMA061_AziQY9SA0PaiSp8_U88T_jm4sYZlkKzY9Ue-l96SC3CEM4w/s1600-h/howmuchblood.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiENxTx4OcoTrf1KxeWgoi3M8U6Tdz1Qg1HkOJwtc6MEW5Aq60LB4DJN0DQthKR72VVbLDl9UM_SRCFlUzapWMVDiMA061_AziQY9SA0PaiSp8_U88T_jm4sYZlkKzY9Ue-l96SC3CEM4w/s640/howmuchblood.jpg" width="456" /></a></div><br />
அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.<br />
<br />
இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..<br />
<br />
அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்... <br />
<br />
இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...<br />
<br />
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...<br />
<br />
<b>Official Website of IPCI:</b><br />
1. Ahmed-deedatdotcodotza<br />
<br />
<b>Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: </b><br />
1.Truthwaydottv<br />
<br />
<b>My Sincere thanks to:</b><br />
1. IPCI, Durban, South Africa.<br />
2. Truth Way Broadcasters.<br />
<br />
<b>References: </b><br />
<br />
1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.<br />
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.<br />
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.<br />
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.<br />
5. Ahmed Deedat - Wikipedia. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
<span class="post-author vcard">by <span class="fn">Aashiq Ahamed</span></span></div><div style="text-align: justify;"><span class="post-author vcard"><span class="fn"> </span></span></div><div style="text-align: justify;"> Source: http://ethirkkural.blogspot.com/ <span class="post-author vcard"><span class="fn"><br />
</span></span></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-42975925523333228622010-09-01T23:09:00.000-07:002010-09-01T23:10:24.934-07:00நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு...<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOw9ETqluIRVtlSeosr1ksR-WfxRXRuESLV9dNQ0tEAq4jTYnpDkBmdKd6MVTrNBVbabiwN36-2wIkg09hRhJNn-9QCPswNKLSZ61tfCQhI7mXVik7DCFYMDxQnfQu6TZ_cQhWUPSLcA/s1600-h/Bismillah_2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOw9ETqluIRVtlSeosr1ksR-WfxRXRuESLV9dNQ0tEAq4jTYnpDkBmdKd6MVTrNBVbabiwN36-2wIkg09hRhJNn-9QCPswNKLSZ61tfCQhI7mXVik7DCFYMDxQnfQu6TZ_cQhWUPSLcA/s1600/Bismillah_2.JPG" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...<br />
<br />
<div style="text-align: justify;">உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><div style="text-align: justify;">டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும். </div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM-mM_chBysX6e_XxYyrxf1HXp3O2vq8BAwnzCQU81fDzRPni9IMBQnI83M9M_TGr4FxXRdqWSfIGM2KfiHLvZPX2uKGas7HG7DiRoQuHftP-Er1LbnIB4HVMhVMZwvKTnnqeidEdyL4w/s1600-h/hqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM-mM_chBysX6e_XxYyrxf1HXp3O2vq8BAwnzCQU81fDzRPni9IMBQnI83M9M_TGr4FxXRdqWSfIGM2KfiHLvZPX2uKGas7HG7DiRoQuHftP-Er1LbnIB4HVMhVMZwvKTnnqeidEdyL4w/s400/hqdefault.jpg" width="400" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்.</b>..இன்ஷா அல்லாஹ். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என் தந்தையால் என் தாய்க்கு ஏற்ப்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன. </div><div style="text-align: justify;"><br />
</div><ul><li style="text-align: left;"><span class="Apple-style-span" style="color: purple;">என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்? </span></li>
</ul><ul><li style="text-align: left;"><span class="Apple-style-span" style="color: purple;">ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? </span></li>
</ul><ul><li style="text-align: left;"><span class="Apple-style-span" style="color: purple;">உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்...இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? </span></li>
</ul><ul><li style="text-align: left;"><span class="Apple-style-span" style="color: purple;">இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?</span></li>
</ul><ul><li style="text-align: left;"><span class="Apple-style-span" style="color: purple;">நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்? </span></li>
</ul><br />
<div style="text-align: left;">இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGueyHXU57UO_L41a12Nk8SRkBrCOiEUtZE3BA7ujBjvwElxsajfr4tVeWyQT3p2gVIrVvWb3yXLKmwZAd-CPSrjcdrCHjGwQy7-IiL_QRMDINV56ka4B0IqFKmh0AQCz3znRBfKxvt58/s1600-h/lang+2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGueyHXU57UO_L41a12Nk8SRkBrCOiEUtZE3BA7ujBjvwElxsajfr4tVeWyQT3p2gVIrVvWb3yXLKmwZAd-CPSrjcdrCHjGwQy7-IiL_QRMDINV56ka4B0IqFKmh0AQCz3znRBfKxvt58/s320/lang+2.jpg" width="320" /></a></div><div style="text-align: justify;">பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். "தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு பதில்கள் கிடைக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம். </div><div style="text-align: justify;"><br />
அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன். </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே... </div><div style="text-align: justify;"><br />
முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுத்தப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதில் ஒரு வசனம், </div><div style="text-align: justify;"><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">தீர்ப்பு நாளின் அதிபதி</span> --- Qur'an 1:3 </blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதன் இரண்டாது வசனம், </div><div style="text-align: justify;"><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். </span>--- Qur'an 2:2</blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: magenta;">ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்?</span> என்ற கேள்விதான் அது... </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.</b> </div><div style="text-align: justify;"><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.</span> --- Qur'an 2:30 </blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.<br />
<b><br />
</b><br />
<b>நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு. </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியானமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதே வசனத்தின் இறுதியில், </div><div style="text-align: justify;"><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் </span>--- Qur'an 2:30. </blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா? </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மெம்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCvgf_batAlw2nX5D97afzewKaGvzFACdQDzdJIJkXhV1MK9gpYEaIOcix5imoW-7K6ZSlmGZB5Q6iArE5UD3QRQw50D5c94wYfkdOjNfeJARmg5PlpU_Qgxalei4MF1LXlMR_hyWeSc0/s1600-h/lang.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCvgf_batAlw2nX5D97afzewKaGvzFACdQDzdJIJkXhV1MK9gpYEaIOcix5imoW-7K6ZSlmGZB5Q6iArE5UD3QRQw50D5c94wYfkdOjNfeJARmg5PlpU_Qgxalei4MF1LXlMR_hyWeSc0/s400/lang.jpg" width="349" /></a></div><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனி பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடை கிடைத்தன. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை. </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒருமுறை என் மகள் கேட்டாள், </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: red;">"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?" </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின.பதில்கள் கிடைக்க கிடைக்க,நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன்.<br />
<b><br />
</b><br />
<b>ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.</b></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்ப்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. </div><div style="text-align: justify;"><br />
குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான். <br />
<br />
பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.<br />
<br />
நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம். <br />
<br />
</div><div style="text-align: justify;">தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க் கொள்கிறதே, அதுபோல் தான்" என்று...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி <b>நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை.</b> முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதனால் தேடுவதை தொடருங்கள்...."</div><div style="text-align: justify;"><br />
<br />
இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது....அல்ஹம்துலில்லாஹ். <br />
<br />
இன்னும் இதுபோன்று எத்தனை உதாரணங்களை பார்க்கப்போகிறோம்....<br />
<br />
இறைவனே அறிவான். <br />
<br />
நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.<br />
<br />
அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்ப்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்...<br />
<br />
டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள் </div><ul><li>"Losing my religion, A call for Help", </li>
<li>"Struggling to Surrender" மற்றும் </li>
<li>"Even Angels Ask:: A Journey to Islam in America" </li>
</ul><br />
<div style="text-align: justify;">இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய "Losing my Religion, A call for help" புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான "Even Angels Ask" என்பதிலும் இடம் பெற்றுள்ளது. </div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrS1H-qMsL0ztGjVW1FGKAeewODazp25kAIrsv83cb8yx5q4m9mssnBJ2OGUfI-RRlrpF3B25x2dQ8pzI3F0QeF0aJO2D6FSscj7qAf8Rn_osvXdzCS2ADDDx4ih6-smUvSEJRCtLvkEI/s1600-h/41KiIa4SiZL._BO2,204,203,200_PIsitb-sticker-arrow-click,TopRight,35,-76_AA300_SH20_OU01_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrS1H-qMsL0ztGjVW1FGKAeewODazp25kAIrsv83cb8yx5q4m9mssnBJ2OGUfI-RRlrpF3B25x2dQ8pzI3F0QeF0aJO2D6FSscj7qAf8Rn_osvXdzCS2ADDDx4ih6-smUvSEJRCtLvkEI/s400/41KiIa4SiZL._BO2,204,203,200_PIsitb-sticker-arrow-click,TopRight,35,-76_AA300_SH20_OU01_.jpg" width="333" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதிலும் இவருடைய "Even Angels Ask" என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம். </div><div style="text-align: justify;"><br />
<span class="Apple-style-span" style="color: red;">For the believers, there is always a bright spot at the end of the tunnel.....</span><br />
<br />
</div><div style="text-align: justify;">இறைவன் இவர்களுக்கு மெம்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்கின்ற பாக்கியத்தை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>Dr.Jeffrey Lang's Books can be bought at:</b></div><div style="text-align: justify;">1. Amazondotdom</div><div style="text-align: justify;">2. Or by requesting any popular book shop with their ISBN numbers which follows.</div><div style="text-align: justify;"> <span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">a) Losing My Religion, A call for Help. ISBN: </span></span><span class="Apple-style-span" style="line-height: normal;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;">978-1590080276</span></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="line-height: normal;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;"> b) Struggling to surrender. ISBN: 978-0915957262</span></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="line-height: normal;"><span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small;"> c) Even Angels Ask. ISBN: 978-0915957675 </span></span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>My Sincere Thanks to:</b></div><div style="text-align: justify;">1. Br. Eddie</div><div style="text-align: justify;">2. Dr.Jeffrey Lang, Associate Professor, University of Kansas, USA. </div><div style="text-align: justify;">3. Amazondotcom</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>References:</b></div><div style="text-align: justify;">1. Dr.Lang's Interview with Br.Eddie for The Deen Show. thedeenshowdotcom. </div><div style="text-align: justify;"><br />
</div> Source: http://ethirkkural.blogspot.com/ </div><div style="text-align: justify;"></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-40771823924770547952010-09-01T22:53:00.000-07:002010-09-01T22:53:00.536-07:00"செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOw9ETqluIRVtlSeosr1ksR-WfxRXRuESLV9dNQ0tEAq4jTYnpDkBmdKd6MVTrNBVbabiwN36-2wIkg09hRhJNn-9QCPswNKLSZ61tfCQhI7mXVik7DCFYMDxQnfQu6TZ_cQhWUPSLcA/s1600/Bismillah_2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOw9ETqluIRVtlSeosr1ksR-WfxRXRuESLV9dNQ0tEAq4jTYnpDkBmdKd6MVTrNBVbabiwN36-2wIkg09hRhJNn-9QCPswNKLSZ61tfCQhI7mXVik7DCFYMDxQnfQu6TZ_cQhWUPSLcA/s1600/Bismillah_2.JPG" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...</div><div style="text-align: justify;"><br />
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....ஆமின்.</div><div style="text-align: justify;"> </div><blockquote><b><span class="Apple-style-span" style="color: blue;">செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?</span></b></blockquote><div style="text-align: justify;"><br />
வினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.<br />
<br />
செயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்?<br />
<br />
இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), செயற்கை செல் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா? </div><div style="text-align: justify;"><br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"Kornberg did not create life in a test tube, <span class="Apple-style-span" style="background-color: cyan;">nor did we create life from scratch.</span> We transformed existing life into new life. <span class="Apple-style-span" style="background-color: cyan;">We also did not design and build a new chromosome from nothing.</span> Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. <span class="Apple-style-span" style="background-color: cyan;">The result is not an "artificial" life form</span>"</span> - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.</blockquote><blockquote><br />
</blockquote><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை</span> - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010. </blockquote><br />
இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் <span class="Apple-style-span" style="color: red;">'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லையென்று"</span>. இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை?.<br />
<br />
இதே போன்றதொரு கருத்தை தான் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது. <br />
<br />
</div><blockquote style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: blue;">"He has not created life, only mimicked it”</span> - Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010. </blockquote><blockquote style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: blue;">அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார்</span> - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.</blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், </div><div style="text-align: justify;"><br />
</div><blockquote><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: blue;">செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?</span></div></blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள். </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதே கட்டுரையில் மருதையன் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்,</div><div style="text-align: justify;"><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா" </span>- வினவு, 8/7/2010. </blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: red;"><b>செயற்கை செல் என்றால் என்ன?</b></span><br />
<br />
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.<br />
<br />
இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.<br />
<br />
JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".<br />
<br />
இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.<br />
<br />
முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர். பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.<br />
<br />
இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.<br />
<br />
<b>இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது. </b><br />
<br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"The synthetic Mycoplasma mycoides genome <span class="Apple-style-span" style="background-color: cyan;">was assembled by adding the overlapping DNA fragments to yeast.</span> Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region"</span> - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.</blockquote><b><br />
</b><br />
<b>இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம். </b><br />
<br />
இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.<br />
<br />
இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.<br />
<br />
பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.<br />
<br />
அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.<br />
<br />
இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBp20sw3dP-oOCJwaXgIbJMKl4gCvoEAnIIgc4BlgAZEWFE9x3hE5g42Z0EhQ2_kDE5bDqI1M1XJdn7PINw_IMdPQ75z7ypUZveriireB-8WLeQMYR0mwqh6OG7PyotCIxnd1BolkzhjU/s1600/21cell_g-popup.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="340" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBp20sw3dP-oOCJwaXgIbJMKl4gCvoEAnIIgc4BlgAZEWFE9x3hE5g42Z0EhQ2_kDE5bDqI1M1XJdn7PINw_IMdPQ75z7ypUZveriireB-8WLeQMYR0mwqh6OG7PyotCIxnd1BolkzhjU/s640/21cell_g-popup.jpg" width="640" /></a></div><br />
<br />
இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் "சிந்தடிகா" என்று எழுதினாரோ மருதையன்) <br />
<br />
சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது. <br />
<br />
ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.<br />
<br />
<b>மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார். </b><br />
<br />
விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....<br />
<br />
</div><div style="text-align: justify;">இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?<br />
<br />
உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்? <br />
<br />
<blockquote>"<span class="Apple-style-span" style="color: blue;">First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; <span class="Apple-style-span" style="background-color: cyan;">it’s a synthetic genome of Mycoplasma mycoides</span>, which is familiar enough"</span> - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.</blockquote><br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய <span class="Apple-style-span" style="background-color: cyan;">செயற்கை மரபுரேகையான</span> இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்"</span> - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010. </blockquote></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ? </div><br />
<div style="text-align: justify;"> இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு "செயற்கை செல்" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...</div><br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. <span class="Apple-style-span" style="background-color: cyan;">But this assumes a strictly top-down control structure that some biologists now question.</span> Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?"</span> - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.</blockquote><br />
ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.<br />
<br />
இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.<br />
<br />
இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். <br />
<br />
<br />
<div style="margin: 0px; text-align: justify;"><span class="Apple-style-span" style="color: red;"><b>இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute's achievement show that life is just chemicals?) </b></span></div><div style="margin: 0px; text-align: justify;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. </div><div style="margin: 0px; text-align: justify;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.</div><div style="margin: 0px; text-align: justify;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;"><b>ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.</b></div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான "தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. </div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.</div><div style="margin: 0px;"><br />
</div><blockquote><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still "special" and incredibly powerful"</span> - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. </div></blockquote><blockquote><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: blue;">"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது"</span> - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. </div></blockquote><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது. </div><div style="margin: 0px; text-align: justify;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூற முடியாது. </div><br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா? </span></b><br />
<br />
<div style="text-align: justify;"> இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.<br />
<br />
மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.<br />
<br />
உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one). </div><br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch."</span> - Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.</blockquote><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை</span> - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010. </blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span class="Apple-style-span" style="color: blue;">இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?</span></b></div><div><br />
<div style="text-align: justify;"> மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ இயற்கையானது.<br />
<br />
ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.<br />
<br />
ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.<br />
<br />
<b> </b><br />
<b>வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.</b></div><br />
<blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest" </span>- Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.</blockquote><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்</span> - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010. </blockquote><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்? </b></div><div><br />
<div style="margin: 0px; text-align: justify;">அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்). </div><div style="margin: 0px; text-align: justify;"><br />
</div><div style="margin: 0px; text-align: justify;">ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.</div><div style="margin: 0px;"><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"Without life, Synthia wouldn't be alive"</span> - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. </blockquote><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது</span> - (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. </blockquote><br />
<div style="text-align: justify;"> செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது. <br />
<br />
<span class="Apple-style-span" style="color: blue;">மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை "செயற்கை மரபுரேகையை" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது. </span></div><br />
<div style="text-align: justify;"> இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.<br />
<br />
இதனால் தான் வென்டர் "தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ? <br />
</div><br />
</div><div><b><span class="Apple-style-span" style="color: red;">செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?</span></b></div><div><br />
</div><div>என்னை பொறுத்தவரை, ஆம். </div><div><br />
</div><div style="text-align: justify;">உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி. </div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><br />
பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர். </div><div style="text-align: justify;"><br />
<span class="Apple-style-span" style="color: blue;">ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்? </span></div><div style="text-align: justify;"><br />
ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?<br />
ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.<br />
<br />
இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும். </div><div><br />
</div><div><b><span class="Apple-style-span" style="color: red;">மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்? </span></b> </div><div><br />
</div><div style="text-align: justify;">பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம். </div><div style="text-align: justify;"><br />
ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார். </div><div><br />
</div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, <span class="Apple-style-span" style="background-color: cyan;">it raises genuine concerns</span>, and so we must consider carefully the implications of this research."</span> - President Obama, in a letter to the chair of his new bioethics commission. </blockquote><br />
<div style="text-align: justify;">இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது.<br />
இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. </div><div> </div><div><b><span class="Apple-style-span" style="color: red;">முடிவாக... </span></b></div><div><span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span></div><div style="text-align: justify;">உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.<br />
<br />
ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்.<br />
<b>இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது</b>.<br />
<span class="Apple-style-span" style="color: purple;">நான் நாத்திக சகோதரர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் "செயற்கை செல்" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....</span></div><div style="text-align: justify;"><br />
முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம். </div><div><br />
</div><div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">"Frankly, scientists do not know enough about biology to create life,"</span> - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010. </blockquote></div><div><blockquote><span class="Apple-style-span" style="color: blue;">வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது </span>- Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010. </blockquote></div><br />
விஷயம் முடிந்தது....முற்றுப்புள்ளி...... <br />
<br />
<br />
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.<br />
<br />
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...<br />
</div><br />
<b>My Sincere thanks to:</b><br />
1. Dr.Craig Venter.<br />
2. The Wall Street Journal daily.<br />
3. The Scientist magazine.<br />
4. The New York Times daily.<br />
5. Science magazine.<br />
6. Reuters.<br />
7. JCVI.org<br />
8. Vinavu.<br />
9. Nature Journal.<br />
<br />
<b>References: </b><br />
1. Creation of a Bacterial Cell Controlled by a Chemically Synthesized Genome - Science, Vol. 329. no. 5987, pp. 52 - 56, dated 2nd July 2010.<br />
2. Is Synthia Life From Scratch? No, But A Cell Controlled By A Synthetic Genome May Save Our Energy Future - Science 2.0, dated 20th May 2010.<br />
3. Cell door opens on fantastic future - The Sydney Morning Herald, dated 27th May 2010.<br />
4. How We Created the First Synthetic Cell - J. CRAIG VENTER AND DANIEL GIBSON, The Wall Street Journal, dated 26th May 2010.<br />
5. Artificial life? Synthetic genes 'boot up' cell - Reuters, dated 20th May 2010.<br />
6. First Self-Replicating Synthetic Bacterial Cell - J.Craig Venter Institute.<br />
7. What Synthia means to me - Christina Agapakis, Oscillator, Scienceblogs.com, dated 21st May 2010.<br />
8. Is the Synthetic Cell about Life? - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.<br />
9. Scientists create first synthetic cell - Hindustan Times, dated 22nd May 2010.<br />
10. Synthetic Cell - Man playing God or plagiarising God? - Abu Musa, Khilafah.com, dated 27th May 2010.<br />
11. Is Craig Venter's Synthetic cell really life? - Uncommon descent.<br />
12. Researchers Say They Created a ‘Synthetic Cell’ - The New york Times, dated 20th May.<br />
13. Mycoplasma capricolum, Mycoplasma mycoides, Microorganism, Genome, Bacterial cell structure - Wikipedia<br />
14. How many genes are there in an average human? - Answers.com<br />
15. Life after the synthetic cell, Nature, 27th May 2010. <br />
16. Vinavu's Article on Synthetic cell, 8th July 2010.<br />
<br />
Source: http://ethirkkural.blogspot.com/ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-2661391560492037202010-08-28T03:23:00.000-07:002010-08-28T03:23:40.360-07:00அல்லாஹ் எங்கே உள்ளான்?<div style="text-align: right;"><b> <span style="color: #cc0000; font-family: Arial; font-size: x-small;">ஆக்கம் : டாக்டர் யூ.எல். அஹ்மத் அஷ்ரஃப், </span></b></div><div> </div><div style="text-align: justify;"><b><span style="font-family: Arial; font-size: x-small;"> பேராசிரியர்<span lang="en-us">,</span> மன்னர் காலித் பல்கலைக்கழகம்-அப்ஹா, சவூதி அரேபியா</span></b></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="font-family: Arial; font-size: x-small;">குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புக்களுக்கிணங்க அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையாகும். அர்ஷ் எனும் சிம்மாசனம் ஏழு வானங்களுக்கும் அப்பால் உள்ளது, அதுதான் படைப்புகளின் இறுதிப்பகுதியாகும், அர்ஷின் கீழ்தான் சுவர்க்கம் உள்ளது.<br />
<br />
ஸஹாபாக்கள், தாபியீன்கள், மரியாதைக்குரிய நான்கு இமாம்களாகிய அபூ ஹனீபா (ரஹ்), மாலிக் (ரஹ்), ஷாஃபீஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) ஆகியோர்களும் மற்றும் ஹதீஸ் கலையில் பிரசித்தம் பெற்ற இமாம்களாகிய புகாரி (ரஹ்), முஸ்லிம் (ரஹ்), அபூதாவுத் (ரஹ்), திர்மிதீ (ரஹ்), நஸாயி (ரஹ்) மற்றும் இப்னு மாஜா (ரஹ்) ஆகியோர்களும் இக்கொள்கையைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள். இன்னும் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான முஹ்யத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் இக்கொள்கையைத்தான் வலியுறுத்துகிறார்கள்.<br />
<br />
<span style="color: #cc0000;"><b>அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என்பதை உறுதிப்படுத்தும் சில குர்ஆன் வசனங்கள்:</b></span><br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى.</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">ரஹ்மான் (அல்லாஹ்) அர்ஷின் மீது உள்ளான்</span> (20:5).<br />
<br />
இத்திருவசனத்தில் கூறப்பட்டுள்ள இஸ்தவா என்ற அரபுப் பதத்திற்கு மேலே உள்ளான் என்பது பொருளாகும். இவ்விளக்கத்தையே அபுல்ஆலியா (ரஹ்), முஜாஹித் (ரஹ்) போன்ற தாபிஈன்களைச் சேர்ந்த அறிஞர்களும் வழங்கியுள்ளனர். (ஆதாரம்-புகாரி பாகம் 9 பக்கம் 151).<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ.</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்து பின்பு அர்ஷின் மீதாகிவிட்டான்</span> (32:4).<br />
<br />
மேலும் அல்லாஹுத்தஆலா அருள்மறையில் பின்வருமாறு கூறுகின்றான்:<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">أَأَمِنتُم مَّن فِي السَّمَاء أَن يَخْسِفَ بِكُمُ الأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ. أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاء أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ.</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">வானத்தின் மேலே உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கின்றீர்களா? அப்போது பூமி நடுங்கும். அல்லது வானத்தின் மேலே உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கின்றீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்</span> (67:16, 17).<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ.</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">(வானவர்கள்) அவர்களு;கு மேலே உள்ள இரட்சகனை அஞ்சுகிறார்கள், அத்துடன் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டவைகளை செய்கிறார்கள் </span>(16:50).<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ.</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">மலக்குகளும் பரிசுத்த ஆவியும் (ஜிப்ரீலும்) ஐம்பதாயிரம் வருடம் அளவுள்ள ஒரு நாளில் அல்லாஹ்வை நோக்கி ஏறிச் செல்வார்கள் </span>(70:4).<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ....</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்கிறது...</span> (35:10).<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">وَقَالَ فِرْعَوْنُ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَّعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ.أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا...</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<span style="color: blue;"><br />
ஃபிர்அவ்ன் ஹமானிடம், ஹாமானே! எனக்கு ஒரு கோபுரத்தை கட்டு! அதன் மூலம் வானங்களின் வாயில்களை அடைந்து மூஸாவின் இறைவனை பார்க்கப் போகிறேன், மூஸா பொய் சொல்கிறார் என்றே நம்புகிறேன் எனக் கூறினான்...</span> (40:36,37).<br />
<br />
இதன் மூலம் மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ் வானத்தில் உள்ளான் என்று ஃபிர்அவ்னுக்கு கூறினார் என்றும் அவன் அதனை நம்பவில்லை என்றும் தெளிவாகின்றது.<br />
<br />
</span><span style="font-family: Arial; font-size: medium;">...وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ</span><span style="font-family: Arial; font-size: x-small;"><br />
<br />
<span style="color: blue;">..அந்நாளில் எட்டு வானவர்கள் அவர்களுக்கு மேலே உள்ள உமது இரட்சகனின் அர்ஷை சுமப்பார்கள் </span>(69:17).<br />
<br />
அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளான் என்பதை உறுதிப்படுத்தும் சில நபி மொழிகளும் அவற்றுக்கான விளக்கங்களும்:<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வானத்திற்கு மேலே இருப்பவனிடம் நான் நம்பிக்கைக்குரியவனாக இருக்கின்றேன், எனவே நீங்கள் என்னை நம்பமாட்டீர்களா? வானத்தின் செய்திகள் எனக்கு காலையிலும் மாலையிலும் வருகின்றன.<span style="color: #006600;">(அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி) அவர்கள். நூல்: புகாரி 4351, முஸ்லிம் 2449).</span><br />
<br />
அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைத்து முடித்தபோது எனது கோபத்தைவிட எனது இரக்கம் முந்திவிட்டது என தனது சந்நிதானத்தில் அவனது அர்ஷில் எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். <span style="color: #006600;"> (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள், நூல்: புகாரி 7422, முஸ்லிம் 2751).</span><br />
<br />
முஆவியா பின் ஹகம் (ரழி) அறிவிக்கின்றார்கள்: என்னிடத்தில் ஆடு மேய்க்கக்கூடிய அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள், ஒரு தினம் அப்பெண்ணை நான் கடுமையாக அடித்துவிட்டேன். அது எனக்கு வேதனையாக இருந்தது, ஆகவே அல்லாஹ்வின் தூதரே! அவளை நான் விடுதலை செய்யட்டுமா? என வினவ, அப்பெண்ணை தன்னிடம் வரவழைத்து அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என வினவினார்கள், அதற்கவள் வானத்தின் மேலே இருக்கிறான் எனக் கூறினாள், பின்னர் நான் யார்? என வினவ அதற்கு நீங்கள் அல்லாஹ்வின் தூதுவர் என அவள் பதிலளித்தாள், உடனே இப்பெண் முஃமினானவள் எனக்கூறி அவளை விடுதலை செய்யுமாறு பணித்தார்கள் <span style="color: #006600;">(ஆதாரம்- முஸ்லிம் 537).</span><br />
<br />
இறைவா! நீயோ மேலேயிருக்கிறாய், உனக்கு மேலே ஒன்றும் இல்லை என்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திற்குச் செல்லும்போது ஓதுமாறு ஏவக்கூடியவர்களாக இருந்தார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள் <span style="color: #006600;">(ஆதாரம் முஸ்லிம் 2713).<br />
</span><br />
நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினம் மக்களுக்கு உபதேசம் செய்துவிட்டு நீங்கள் மறுமையில் என்னைப் பற்றி வினவப்படுவீர்கள் அப்போது நீங்கள் என்ன கூறுவீர்கள்? எனக் கேட்டார்கள், அதற்கு மக்கள் நீங்கள் எத்திவைத்தீர்கள், நிறைவேற்றினீர்கள், உபதேசம் புரிந்தீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம் என்று கூறினார்கள், இதைக்கேட்ட நபியவர்கள் தனது சுட்டு விரலை வானத்தை நோக்கி உயர்த்தி பின்பு மக்களை நோக்கி இறைவா! நீயே சாட்சி, நீயே சாட்சி என மூன்று முறை கூறினார்கள் <span style="color: #006600;">(ஆதாரம்-முஸ்லிம் 2941).<br />
</span><br />
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிகளிடத்தில் உங்களை உங்கள் குடும்பத்தினர் நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள், என்னை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தான் என்று ஆனந்தத்துடன் கூறக்கூடியவராக இருந்தார்கள் என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் <span style="color: #006600;">(ஆதாரம்: புhரி 7420).</span><br />
<br />
அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ளான் என்பதே நபித் தோழர்களின் நம்பிக்கை என்பதை மேற்கூறிய செய்தி மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றது.<br />
<br />
நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் பிர்தௌஸ் எனும் சுவனத்தைக் கேளுங்கள், அதுதான் சுவர்க்கத்தின் விசாலனமான பகுதியும் உயர்ந்த பகுதியுமாகும். அந்த பிர்தௌஸிற்கு மேலே ரஹ்மானின் அர்ஸ் உண்டு, அதிலிருந்துதான் சுவர்க்கத்தின் நதிகள் ஊற்றெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் <span style="color: #006600;">(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ஆதாரம்-புகாரி 7423).<br />
</span><br />
மேற்கூறிய ஹதீஸின் மூலம் அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என்பதும் சுவர்க்கம் அர்;ஷிற்கு கீழே உள்ளது என்பதும் தெளிவாகின்றது.<br />
<br />
<span style="color: #cc0000;"><b>இமாம்களின் கூற்றிலிருந்து:</b></span><br />
<br />
அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என்றும், ஹதீஸில் வந்திருக்கக்கூடிய அல்லாஹ்வின் பண்புகளையும் நாம் நம்பிக்கை கொள்ளுவோம் என்றும் தாபியீன்கள் நிறைவாக இருந்த காலத்தில் நாம் கூறிக் கொண்டிருந்தோம் என இமாம் அவ்ஸாயீ (ரஹ். இறப்பு ஹி:157) அவர்கள் கூறினார்கள் <span style="color: #006600;">(நூல்: அல் அஸ்மா வஸ்ஸிஃபாத் பக்கம் 408).<br />
</span><br />
ஜஹ்மிய்யாக்கள் கூறுவது போல் (அல்லாஹ்) இங்கே பூமியிலே உள்ளான் என்று நாம் கூறமாட்டோம், அவன் அர்ஷ் மீது உள்ளதாகத்தான் கூறுவோம் என இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ். இறப்பு ஹி:181) அவர்கள் கூறினார்கள் <span style="color: #006600;">(ஆதாரம்: கல்கு அஃப்ஆலில் இபாத் பக்கம் 10).</span><br />
<br />
அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளான் என நம்புவது அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கையாகும் என்று இமாம் அபுல்ஹஸன் அல்அஷ்அரீ (ரஹ். இறப்பு ஹி:324) அவர்கள் கூறியுள்ளார்கள் <span style="color: #006600;">(ஆதாரம் மகாலாதுல் இஸ்லாமியியீன் பக்கம் 1-345).<br />
</span><br />
அல்லாஹ் மேலே உள்ளான் அவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூற முடியாது, மாறாக அல்குர்ஆனில் அவன் கூறி இருக்கின்றவாறு வானத்திற்கு மேலே அர்ஷ் மீது உள்ளான் என்றே கூறப்படவேண்டும் என இமாம் அப்துல் காதிர் அல்ஜீலானி (ரஹ். இறப்பு ஹி:561) கூறினார்கள் <span style="color: #006600;">(ஆதாரம் அல்குன்யா1-54-56).<br />
</span><br />
<span style="color: #cc0000;"><b>அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என்பதை நிராகரிப்பவனின் சட்டம்:</b></span><br />
<br />
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஆகியவற்றை அறிந்து விளங்கிய பின்பும் அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை என எவரும் பிடிவாதமாகக் கூறினால் அவர் காஃபிர் ஆகிவிடுவார், ஏனெனில் அவர் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் திட்டவட்டமாக கூறப்பட்டதை நிரகாரித்தவராவார். இமாம்களின் பின் வரும் ஃபத்வாக்கள் இக்கருத்தையே உறுதிசெய்கிறது.<br />
<br />
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எனது இரட்சகன் வானத்திலா பூமியலா என்று எனக்குத் தெரியாது எனக் கூறுபவன் காஃபிர் ஆகிவிட்டான் ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் ரஹ்மான் அர்ஷ் மீது உள்ளான் எனக் கூறியுள்ளான் (ஆதாரம்: அல்கிக்உல் அப்ஸத் பக்கம் 49).<br />
<br />
இமாம் முஹம்மத் இப்னு யூசுஃப் அல்பியாபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை என்று கூறுகின்றாரோ அவர் காஃபிர் ஆவார் <span style="color: #006600;">(ஆதாரம்: கல்கு அஃப்ஆலில் இபாத் பக்கம் 19).<br />
</span><br />
இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷ் மீது உள்ளான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவன் காஃபிர் ஆவான், அவனிடம் தவ்பா செய்யுமாறு கேட்கப்படும், தவ்பா செய்யாவிடின் அவனின் கழுத்தை வெட்டி குப்பை மேட்டில் வீசவேண்டும் <span style="color: #006600;">(ஆதாரம்: மஃரிபது உலூமில் ஹதீஸ் பக்கம் 84).<br />
</span><br />
<span style="color: #cc0000;"><b>குறிப்பு:</b></span><br />
துஆ கேட்கும் மனிதன் தன் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் நீட்டுகிறான், அவனின் கண்களும் உள்ளமும் தன் இறைவனை நோக்கும் போது வானத்தை நோக்குகிறது. ஆகவே மனிதனின் உள்ளுணர்வு கூட அவனது இறைவன் மேலே உள்ளான் என்பதைத்தான் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இறைவன் எங்கும் உள்ளான் என்பது அல்குர்ஆனுக்கும் நபிமார்களின் போதனைகளுக்கும் முரண்படும் தவறான வாதம் என்பது எள்முனை அளவும் சந்தேகமற்றது.<br />
<br />
அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் எனக் கூறுவதால் அவனுக்கு குறிப்பிட்ட ஓர் இடத்தை கற்பிப்பதாக ஆகிவிடும், ஆகவே இவ்வாறு கூறுவது கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இவ்வாதம் அர்த்தமற்றதாகும், ஏனெனில் அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என நாமாக கற்பனை செய்து கூறவில்லi, மாறாக அல்லாஹ்வே அல்குர்ஆனில் பல இடங்களில் இக்கருத்தை கூறியுள்ளான்.<br />
<br />
அல்லாஹ்விற்கு இடம் இல்லை எனக் கூறுவோர் அவன் பிரபஞ்சத்தில் ஓர் இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றோ அல்லது படைப்பினங்கள் ஒன்றிலும் தங்கியிருக்கவில்லை என்றோ கருதினால் அது தவறில்லை, மாறாக அவன் அர்ஷ் மீதும் இல்லை என்பதும் இதன் நோக்கமாக இருந்தால் அது தவறான வாதமாகும்.<br />
<br />
அல்லாஹ்வே மிக அற்ந்தவன், நபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதம் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாகட்டுமாக.<br />
<br />
<br />
<i><b>வெளியீடு: ரவ்ழா தஃவா நிலையம், ரியாத்</b></i></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="font-family: Arial; font-size: x-small;"><i><b>நன்றி: www.ottrumai.net </b></i></span></div><div style="text-align: justify;"> <br />
<span style="font-family: Arial; font-size: x-small;"> <span style="color: grey;"></span></span></div><span style="font-family: Arial; font-size: x-small;"><span style="color: grey;"> </span></span>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-74731206786804251122010-08-23T04:57:00.000-07:002010-08-23T04:57:25.270-07:00ஸுன்னா ஓர் அறிமுகம்<div style="text-align: justify;"> </div><div style="text-align: right;">மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)<br />
nashmelslm@yahoo.com<em> </em></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><em>(முஹம்மத்) அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை </em><em>(53:3-4)</em></div><div style="text-align: justify;"><br />
</div><div> </div><div style="text-align: justify;">இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரம் <em>‘ஸுன்னா’</em>ஆகும். இஸ்லாமிய உலகிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இஸ்லாமிய எழுச்சியும், மார்க்கம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுவருகின்ற இக்காலகட்டத்தில், தவ்ஹீத் பிரச்சாரத்தின் அடிப்படைகளில் ஒன்றான,<em> ‘ஸுன்னா’ </em>வின்பால் மக்களை அழைக்க வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நபிகளாரின் ‘அல்ஹதீஸ்’ எனப்படும் <em>‘ஸுன்னா’ </em>விடயத்தில் நாம் அதீத கவனம் செலுத்தக் காரணம் என்னவெனில், இஸ்லாமிய மார்க்கத்தில்<em>‘ஸுன்னா’</em>வுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பரிய மகத்துவமும், அந்தஸ்த்து மேயாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><em>‘ஸுன்னா’ </em>என்பது திருமறை குர்ஆனுக்கான விளக்கவுரையாகும். ஏனெனில், திருமறை வசனங்களை விளக்கும் விதமாகவும், அதன் அந்தரங்கங்களை வெளிக் கொணர்வதாகவும், வரையறைகளை தெளிவு படுத்துவதாகவும் அல்குர்ஆனுக்கு செயல் வடிவம் கொடுக்கின்றதாகவும்<em>‘ஸுன்னா’ </em>அமைந்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><em>‘ஸுன்னா’</em>வினை விடுத்து அல்குர்ஆனோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ள முடியாத இஸ்லாமிய மார்க்கத்தில் தூதரைப் பின்பற்றுவது பற்றி திருமறை என்ன கூறுகின்றது என்பதனையும், இறைத்தூதரின் பணிகள் தொடர்பாக ஆராய்வதன் மூலம் ஸுன்னாவின் முக்கியத் துவத்தினை உணர்ந்து கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">01. திருக்குர்ஆனைப் போன்று ‘ஸுன்னா’வும் அல்லாஹ்வின் வஹியாகும்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை’ (53:3,4).</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">02. திருமறை குர்ஆனை மக்களுக்கு விளக்கும் பணி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதே பொறுப்பாக்கப்பட்டதாகும்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப்போதனையை உமக்கு அருளினோம்’ (16:44).</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘எந்த தூதரையும், அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கி கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்’ (14:4)<em>.</em></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">03. இறைவனுக்கு வழிப்பட்டவராக வேண்டுமென்றால் தூதருக்கும் வழிப்பட்டேயாக வேண்டும்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவராவார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை’ (4:80).</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">04. பிறப்பு முதல் இறப்பு வரை எமது தனிப்பட்ட, சமூக, அரசியல் விவகாரங்கள், வணக்கவழிபாடுகள் அனைத்திலும் சர்ச்சை, தெளிவின்மை ஏற்படும் போது அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவினை நோக்கியே பயணிக்க வேண்டும்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இறை விசுவாசத்தின் அடிப்படையும் அதுவேதான்.</div><div style="text-align: justify;"><br />
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வி’யத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’ (4:59).</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">05. தூதரின் ஏவல், விலக்கல்களை கவனத்திற் கொள்ளாது விட்டால் அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு உட்பட நேரிடும்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘இத்தூதர் உங்களுக்கு எதைக்கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களை தடுத்தாரோ(அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்’ (59:07)<em>.</em></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">06. தூதருக்கு மாறு செய்தால் குழப்பம் ஏற்படுவதுடன், கடினமான வேதனைக்கும் இலக்காகவேண்டி வரும். </span></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்’ (24:63)<em>.</em></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">07. அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் தீர்ப்பை உளமாற ஏற்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் தீர்ப்புச் செய்தால் மனோ இச்சை, பெரியார்கள், மத்ஹபுகள் போன்றவற்றிற்கு அடிமையாகாது. அப்படியே கட்டுப்படுவதுதான் நம்பிக்கை கொண்ட ஆண்களினதும், பெண்களினதும் கடமையாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்’ (33:36<em>).</em></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நாம் மேற்கண்ட வசனங்களிலிருந்து <em>‘ஸுன்னா’</em>வின் முக்கியத்துவத்தினையும் இஸ்லாமிய மார்க்கத்தில் அது பெற்றிருக்கின்ற மிக உயர்ந்த அந்தஸ்த்தினையும் அறிந்து கொள்ளும் அதே வேளை, சமுதாயத்தில் <em>‘ஸுன்னா’</em>வின் யதார்த்தமும், அது பற்றிய விழிப்புணர்வும் இல்லாத போதுதான் தனிமனிதர்களுக்குப் பின்னால் சென்று ‘பித்அத்’களை உயிர்ப்பித்து தமது அமல்களின் பரக்கத்துக்களை இழப்பதனைப் பார்க்கின்றோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><em>எனவேதான் எமது பிரச்சாரத்தில், மக்களை ‘ஸுன்னா’வின்பால் அழைக்கின்ற பெரும் பணியைச் செய்து வருவதனை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். அல்லாஹ்வின் தூதருடைய ‘ஸுன்னா’வின் மீது முஸ்லிம்கள் தமது முழுக் கவணத்தையும் செலுத்தும் போதுதான் இச்சமூகம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ளும்.</em></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் ஸுன்னாவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கின்ற அதேவேளை ஸுன்னாவிற்கெதிரான அம்சங்கள், மக்கள் மத்தியில் ஸுன்னா சென்றடையத் தடையாகவுள்ள அம்சங்கள் போன்றவற்றை சற்று விரிவாக நோக்குவோம்</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-10731460888254659742010-08-23T04:38:00.000-07:002010-08-23T04:38:17.588-07:00‘ஸுன்னாஹ்’ பற்றிய சொல் விளக்கம்<div class="entry clear" style="text-align: justify;"><div style="text-align: right;"> </div><div class="snap_preview"><div style="text-align: right;"> </div><div style="text-align: right;">மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)<br />
nashmelslm@yahoo.com</div><div style="text-align: right;"><br />
</div>‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)<br />
<br />
‘ஸுன்னா’ பற்றிய முக்கியத்துவம், இஸ்லாமிய சட்டவாக்கத்தில் அது கொண்டுள்ள அளப்பரிய பங்கு போன்றவற்றை சமுதாயம் சரிவரப் புரிந்து கொள்ளாததன் காரணத்தினால்தான் மக்களிடம் பித்அத்கள் செய்யாதீர்கள் எனக் கூறும்போது சமுதாய மக்கள் சில நேரங்களில் அது பற்றி கரிசனை கொள்வதில்லை.<br />
பித்அத்தின் பாரதூரம் புரியாததால் ‘ஸுன்னா’ வினை நமது சமுதாயம் அலட்சியம் செய்கின்றது. எனவே, இது தொடர்பாக கவனம் செலுத்த முன்பு ‘ஸுன்னா’ என்றால் என்ன? அதன் வகையீடுகள் யாவை? என்பன குறித்து நோக்குவோம்.<br />
பொதுவாக மொழி வழக்கில் ‘ஸுன்னா’ என்பது ஏதாவது ஒரு வழிமுறை அல்லது நடைமுறை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் நபிமொழியின் மூலம் ‘ஸுன்னா’ என்கின்ற பதத்தின் பொருளினை அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
‘நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய வழிமுறையை செய்கிறாரோ அவருக்குப் பின் அவ்வாறு செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடைகின்றது. இவர்களது கூலிகளில் இருந்து எதுவும் குறைக்கப்படாது. யார் இஸ்லாத்தில் ஓர் தீய நடைமுறையைச் செய்கிறாரோ பின்னர் அதுபோல் செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடை கின்றது. இவர்களது பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப்படாது.’ (இப்னுமாஜா)<br />
<br />
இஸ்லாமிய ஷரீஆவில் ‘ஸுன்னா’வானது நபிகளார்(ஸல்) அவர்கள் ஏவிய, தடுத்த செயற்பாடுகள், அவர்களது வார்த்தைகள், அனுமதித்த விடயங்கள், நபியவர்கள் பற்றிய விபரங்கள் என்கின்ற பரந்த கருத்தில் அமைந்துள்ளது. இதனையே அண்ணலார் (ஸல்) அவர்கள் எனது ஸுன்னாவைப் பற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.’ (அஹ்மத்)<br />
<br />
இங்கு ஸுன்னாவை புரிய முற்படும்போது நபிகளார்(ஸல்) அவர்கள் காட்டித்தராத அல்லது அவர்களது வழிமுறைக்கு எதிரான ‘பித்அத்’ எனும் நூதன அனுஷ்டானங்களுக்கு புறம்பானது என்றும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது குறித்த ஒரு மார்க்க விவகாரம் நபிகளார்(ஸல்) அவர்களின் முன்மாதிரி யுடன் நடைபெறும்போது ‘ஸுன்னா’ என்றும், நபிகளார்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணாகககாணப்படும் போது ‘பித்ஆ’ என்றும் அழைக்கப்படும். மேலும், கட்டாயம் செய்ய வேண்டியவிடயங்கள் தவிர, செய்தால் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்ற ‘நப்ல்’ என்றழைக்கப்படும் குறுகிய கருத்திலும் ‘ஸுன்னா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.<br />
கண்ணியமிகு அறிஞர்கள் அந்தந்த வட்டத்தில் ‘ஸுன்னா’ எனும் பதத்தை தத்தமது துறைகளை அடிப் படையாகக் கொண்டு விளக்கிச் சென்றனர். அந்த வகையில் ஹதீஸ்கலை அறிஞர்கள் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வு, பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், செய்திகள், வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் போன்ற அனைத்து துறைகளையும் கவனத்திற் கொண்டு முன்மாதிரி என்ற வகையிலும் கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ற வகையிலும் அறிமுகம் செய்தனர்.<br />
<br />
<em>‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)</em><br />
<br />
ஸுன்னா ஒரு சட்டமூலாதாரம் என்ற வகையில் முஜ்தஹிதுகள் ‘ஷரீஆ சட்டங்களை தொகுப்பதற்காகவும், மஸாயில்களை ஆய்வு செய்யும் நோக்கத்தோடும் விதிகளை வகுத்த அறிஞர்கள் சட்டவாக்கம் செய்ய ஏதுவாக காணப்பட்ட நபிகளார்(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றை ஸுன்னா என வரைவிலக் கணம் செய்தனர். சட்டக்கலை அறிஞர்கள் மாத்திரம் மக்களின் செயற்பாடுகளில் அல்லது வணக்க வழிபாடு களில் கட்டாயமானதா? இயலுமானதா? அல்லது தடை செய்யப்பட்டதா? என்ற அம்சங்களை கூற வரும்போது ‘வாஜிப்’ அல்லது ‘பர்ழ்’ போன்ற பதங்களுக்கு எதிர்ப் பதமாக ஸுன்னாவை அறிமுகம் செய்தனர்.<br />
<br />
எது எவ்வாறாயினும் ஏனைய இரு சாராருடைய பார்வையினை விட ஹதீஸ் கலை அறிஞர்களது அவதானமும், நோக்கிய விதமும் பரந்துபட்டது.<br />
‘என் ஸுன்னாவை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.’ ஸஹீஹுல் புஹாரி-5063, ஸஹீஹ் முஸ்லிம்-2714<br />
<br />
அகீதா (இறைக்கொள்கை) அறிஞர்கள் ஸுன்னாவைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.<br />
<br />
அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறும் இறைக்கொள்கையினை ஆரம்பகாலத்தில் மக்கள் எவ்வித சிரமமுமின்றி விசுவாசித்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், நபித்தோழர்கள் காலத்திலும் அகீதா, ஈமான் தொடர்பான அம்சங்களில் எந்தவித மாற்றுக் கலாசார கொள்கைகளும் ஊடுருவவில்லை.<br />
<br />
அழ்ழாஹ் அர்ஷில் உள்ளான் என்றால் அப்படியே நம்பினார்கள். நபித்தோழர் முஆவியா பின் அல்கம்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.<br />
‘எனது ஒரு அடிமையை நான் தாக்கிவிட்டேன். அது எனக்கு சிரமமாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதை அறிந்து அப்பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள் எனக் கூறி, அவளிடம் அழ்ழாஹ் எங்கே? எனக் கேட்டார்கள். அப்பெண் அழ்ழாஹ் வானத்தில் என்றாள். நான் யார் என்று கேட்க நீங்கள் அழ்ழாஹ்வின் தூதர் எனப் பதிலளித்தாள். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘அவள் விசுவாசி அவளை விடுதலை செய்’ எனக் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்-935, அபூதாவூத்-795, அஹ்மத்-7565)<br />
<br />
பிற்பட்ட காலங்களில் தர்க்கவியல், தத்துவவியல் போன்ற கலைகள் முஸ்லிம் சமுதாயத்திற்குள் புகுந்ததன் பின்பு, அகீதா தொடர்பான பல அம்சங்களை மறுத்தும், விமர்சித்தும் பல குழுக்கள் தோற்றம் பெற்றன. இவற்றிற்கு உதாரணமாக, கதரிய்யா, முஃதஸிலா, அஷ்அரிய்யா போன்றவைகளை குறிப்பிடலாம். இவ்வாறு பிழையான அகீதாவினை உடையவர்கள் ‘அஹ்லுல் பித்ஆ’ என்றும், சரியான அகீதாவினை உடையவர்களினை ‘அஹ்லுல் ஸுன்னா’ என்றும் அழைக்கப்படலாயினர்.இக்கோணத்தில் தான் தலாக்கில் கூட ‘தலாக் பிதஈ’ என்றும் ‘தலாக் ஸுன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் ஸுன்னா என்ற பதத்தை பயன்படுத்திய விதம்:<br />
‘நபி(ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.<br />
<br />
அவர்களில் ஒருவர்(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார்.<br />
<br />
அப்போது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீஙகள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்- அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் ‘ஸுன்னாவை’ யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி), <em>நூற்கள்: புஹாரி-5063, முஸ்லிம்-2714)</em><br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந் தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம். நான், அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அழ்ழாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான்.<br />
<br />
இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை(குழப்பம்) இருக்கின்றதா என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ஆம் (இருக்கின்றது) என்று பதிலளித்தார்கள். நான், அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை(குழப்பம்) இருக்கும் என்று பதிலளிக்க நான் அந்தக் கலங்கலான நிலை என்ன என்று கேட்டேன்.<br />
அதற்கு அவர்கள், ஒரு கூட்டத்தார் எனது ‘ஸுன்னா அல்லாத’ ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய், தீமையையும் நீ காண்பாய் என்று பதிலளித்தார்கள். நான், அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் நரகத்தின் வாசல்களுக்கு(வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.<br />
<br />
நான், அழ்ழாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான் இந்த(மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன(செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை(கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும்(இறுகப்) பற்றிக்கொள் என்று பதிலளித்தார்கள்.<br />
<br />
அதற்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை(பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்(என்ன செய்வது) என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு(விலகி) ஒதுங்கிவிடு ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி(எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) நூல்: புஹாரி-7084<em>)</em><br />
<br />
நபித்தோழர்களின் வார்த்தைகளில் ‘ஸுன்னா’:<br />
<br />
‘தமது(தொழுகையில்) ருகூஉவையும், சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா(பின் அல்யமான்(ரலி)) அவர்கள், அவர் தொழுது முடித்தபோது, நீர்(உரியமுறையில்) தொழவில்லை, என்று கூறினார்கள். மேலும் அவர்கள்,(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மது(ஸல்) அவர்களுடைய ‘ஸுன்னாவுக்கு’ மாற்றம் செய்தவராகவே இறக்கின்றீர் என்று சொன்னதாகவும் நான் எண்ணுகிறேன்.’ <em>(அறிவிப்பவர்: அபூவாயில் ஷகீக் பின் சலமா-ரஹ்) நூல்:புஹாரி-389)</em><br />
<br />
‘நான் உஸ்மான்(ரலி) அவர்களுடனும், அலீ(ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து(கிரான்)செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ்(தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி ‘லப்பைக்க பி உம்ரத்தின் வஹஜ்ஜத்தின்’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களின் ‘ஸுன்னாவை’ யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடமாட்டேன் எனக் கூறினார்கள். <em>(அறிவிப்பவர்: மர்வான் பின் ஹகம், நூல்: புஹாரி-1563)</em><br />
<br />
இவ்வாறாக நபிமொழிகளிலும், நபித்தோழர்களின் கூற்றுக்களிலும் ஸுன்னா என்ற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம்.<br />
</div></div><div><!--end entry--> </div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-30734010483505664892010-08-23T04:34:00.000-07:002010-08-23T04:35:14.061-07:00ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்குமிடையிலான தொடர்பு<div class="entry clear" style="text-align: justify;"><div class="snap_preview"><div style="text-align: right;">மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)</div><div style="text-align: right;">nashmelslm@yahoo.com</div><br />
<i>‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்’ (அல்குர்ஆன் 16:44)</i><br />
<br />
நபிகளார்(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ‘ஸுன்னா’ என்ற பதத்தை பயன்படுத்திய விதம் பற்றி அறிந்து கொண்டோம்.<br />
<br />
‘ஸுன்னா’ என்பது அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியது என்ற வகையில் அல்குர்ஆனோடு இணைந்து இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய பங்கை ஆற்றுகின்றது என்பதைப் பார்ப்போம். பின்வரும் மூன்று முறைகளில் ஸுன்னாவின் பயன்பாடு அமைந்து காணப்படும்.<br />
<br />
01. திருமறைக்குர்ஆனில் இடம்பெறுகின்ற அம்சங்களை உறுதி செய்வதாக அமைந்திருத்தல்.<br />
<br />
அதாவது அல்குர்ஆன் கூறுகின்ற குறித்ததொரு விடயத்தை ஸுன்னாவும் வேறு விதத்தில் எடுத்துச் சொல்வதாகும். அந்த வகையில் அல்குர்ஆன் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்’ (அல்குர்ஆன் 02:43),<br />
<br />
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற் காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமை யாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’ (அல்குர்ஆன் 02:183)<br />
<br />
மற்றும் ‘அந்த ஆலயத்தில் அழ்ழாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.’ (அல்குர்ஆன் 03:97) என்றெல்லாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற விடயங்களை நபிமொழியும் பின்வருமாறு கூறுகின்றது. ‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.<br />
<br />
1. அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.<br />
2. தொழுகையை நிலைநிறுத்துவது.<br />
3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.<br />
4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.<br />
5. ரமளானில் நோன்பு நோற்பது ஆகியவையாகும்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-08)<br />
<br />
அதே போன்று ‘நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம்.’ (அல்குர்ஆன் 49:10) என திருமறைக் குர்ஆன் குறிப்பிட, நபிமொழியும் ‘ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5010) எனக் கூறுகின்றது.<br />
<br />
02. அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற அம்சங்களை விளக்கி வைக்கும் ஸுன்னா இவ் இரண்டாவது வகையில் அல்குர்ஆன் பொதுப்படையாகக் கூறுவதை ஸுன்னா விளக்குவதாகவும் அல்குர்ஆனின் பரந்துபட்ட பொருளை ஸுன்னா குறிப்பாக்குவதாகவும், சிரமமான அம்சங்களை விபரிப்பதாகவும் அமைந்து காணப்படும். எனவே, இப்பகுதியினை பின்வரும் குறிப்புக்களினூடாக அவதானிக்கலாம்.<br />
<br />
<b>அ) </b>மிகச்சுருக்கமாகவும், பொதுப்படையாகவும் அல்குர்ஆன் முன்வைக்கின்ற அம்சங்களை விளக்கி நிற்கும் பொறுப்பை ஸுன்னா ஏற்றுக்கொள்ளும். தொழுகை விடயத்தில் அல்குர்ஆனைப் பொறுத்த வரைக்கும் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்!’ (அல்குர்ஆன் 02:43),<br />
‘நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக வுள்ளது.’ (அல்குர்ஆன் 04:103),<br />
<br />
மற்றும் ‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.’ (அல்குர்ஆன் 23:1,2) போன்ற பொதுவான வசனங்களை அல்குர்ஆன் எடுத்துச் சொன்னாலும் தொழுகையின் நேரங்கள், ரக்அத்துக்களின் எண்ணிக்கைகள், செயன்முறை ஆகிய அனைத்து அம்சங்களையும் ஸுன்னாவே விபரிக்கின்றது.<br />
<br />
இதனையே அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ், நூல்: ஸஹீஹுல் புஹாரி-631) அதே போன்று ஸகாத் விடயத்தில் ஸகாத் விதியாகும் பொருட்கள், அளவுகள் போன்றவற்றையும் ஹஜ் முறைமைகள், நோன்பின் பரந்துபட்ட அம்சங்கள், சுத்தம், திருமணம், வியாபாரம், குற்றவியல் தண்டனை முறைகள் இவ்வாறு அனைத்து அம்சங்களையும் விபரிக்கின்ற பணி ஸுன்னாவையே சாரும்.<br />
<br />
<b>ஆ)</b> குறித்தவொரு சட்டத்தின் வரையறைகளை சுருக்கமாகக் கூறுதல். அல்குர்ஆனில் அந்நிஸா அத்தியாயத்தில் ‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அழ்ழாஹ் வலியுறுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 04:11) என்று குறிப்பிடுகின்ற இச்சட்டம் நபிமார்களை உள்ளடக்காது என பின்வரும் நபிமொழி வரையறுக் கின்றது.<br />
<br />
‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்’ (அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3712)<br />
<br />
மேலும், திருடுகின்ற ஆண்-பெண் இருபாலாரினதும் கைகளை வெட்டுமாறு குறிப்பிடும் அல்குர்ஆன் ‘திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்’ (அல்குர்ஆன் 05:38) எனக்கூறுகின்றது. எக்கையை, எதுவரை வெட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நபிமொழியே தெளிவுபடுத்துகின்றது.<br />
<br />
<b>இ) </b>மேலெழுந்தவாரியாக அல்குர்ஆன் கூறும் அம்சங்களை ஸுன்னா குறிப்பாக்குகிறது. திருமறைக்குர்ஆன் வஸிய்யத் செய்தல் பற்றி ‘(இவையாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே’ (அல்குர்ஆன் 04:11) என்று குறிப்பிட, ஸுன்னாவானது அந்த வஸிய்யா மொத்தப் பொருளில் மூன்றிலொரு பகுதியாகவே இருக்க வேண்டும் (அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3349) என ஸுன்னா மட்டுப்படுத்துவதை ஹதீஸே குறிப்பிடு கின்றது.<br />
<br />
<b>ஈ) </b>விளங்கச் சிரமமானதை விளக்கி வைத்தல். ‘நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (06:82) எனும் இறை வசனம் அருளப்பட்ட போது, நாங்கள் அழ்ழாஹ்வின் தூதரே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தான் இருக்கிறார் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், (அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்து விடாதீர்கள் என்று தான் அதற்குப் பொருள். லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ‘என் அருமை மகனே! அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்’ என்று குறிப்பிட்டதை நினைவூட்டு வீராக!’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3360)<br />
<br />
மேலும், அல்பகறா வசனத்தில் இடம்பெறும் ‘வைகறை எனும் வெள்ளைக் கயிறு, கறுப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்’ (அல்குர்ஆன் 2:187) கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு என்கின்ற அம்சம் இரவையும், பகலையுமே குறிக்கின்றது என்பதை அல்ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோதுஇ நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)<br />
<br />
அல்குர்ஆனில் நிரூபணமான சட்டங்களை ஸுன்னாவின் மூலம் மாற்றப்படுவதென்பது குறைந்தளவிலேயே இடம்பெறுவதால் பல அறிஞர்கள் இதனையொரு தனிப்பகுதியாகக் கருதுவதில்லை. இன்ஷா அழ்ழாஹ் எமது அடுத்த இதழில் அல்குர்ஆன் குறிப்பிடாத ஸுன்னாவினால் மாத்திரம் சட்டமாக்கப்படும் அம்சங்கள் பற்றி நோக்குவோம்.<br />
அல்குர்ஆன் கூறுகின்ற அதே அம்சங்களை ஸுன்னாவும் உறுதி செய்வது, அல்குர்ஆன் கூறுகின்ற அம்சங்களை விட மேலதிக விளக்கங்களை ஸுன்னா தெளிவுபடுத்துவது ஆகிய இரு அம்சங்களையும் நாம் கடந்த இதழில் நோக்கினோம்.<br />
<br />
இவ்விதழில் ஸுன்னாவானாது தனித்து நின்று எவ்வாறு சட்டங்களை ஆக்கும் என்பதைக் கவனிப்போம்.<br />
<br />
அல்குர்ஆனைப் பொறுத்தவரைக்கும் கால சூழ்நிலைகளுக்கேற்ப அர்ஷில் உள்ள அழ்ழாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதநூலாகும். மக்கா காலகட்டத்தில் இறக்கியருளப்பட்ட வசனங்களை நோக்கினால் இறைவனை மட்டும் வணங்குவது பற்றியும், ஓரிறைக் கொள்கையினை மனித நெஞ்சங்களில் ஆழப்பதிப்பதை நோக்காக கொண்டிருப்பதனையும் காணலாம். எனவேதான், அல்குர்ஆன் இரத்தினச்சுருக்கமாகவும், மேலோட்டமாகவும் பேசியவற்றையெல்லாம் ஸுன்னாவே மிகவிபரமாகத் தெளிவுபடுத்துகின்றது.<br />
அவ்வாறே அல்குர்ஆன் குறிப்பிடாத பல்வேறு அம்சங்களை ஸுன்னாவே முதன்முதலில் அறிமுகம் செய்கின்றது. இதனை அறிஞர்கள் ‘ஸுன்னா முஷர்ரிஆ’ என்று அழைக்கின்றனர்.<br />
<br />
ஹலால், ஹராம் என்பவற்றைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் திருமறைக்குர்ஆனுக்கு நிகராக ஸுன்னாவும் சட்டமியற்றும் என்பதே அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்பவர்களின் நிலைப்பாடாகும்.<br />
<br />
இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,<br />
<i>‘அறிந்து கொள்ளுங்கள் நான் அல்குர்ஆனையும், அது போன்ற ஒன்றையும் கொடுக்கப்பட்டுள்ளேன்’என்று குறிப்பிட்டார்கள்.’(அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதி கரிப் (ரழி), நூல்: அஹ்மத் 16841)</i><br />
<br />
அல்குர்ஆன் வசனங்களை விபரிக்கின்ற மற்றும் வரையறைகளை விதிக்கின்ற ஒரு பெரும்பணியை ஸுன்னாவால் மேற்கொள்ள முடியுமாக இருந்தால், அல்குர்ஆன் கூறாத சட்டங்களை கூட வஹியென்ற வகையில் ஸுன்னா கொண்டு வரும்.<br />
<br />
இது விடயத்தில் ஹவாரிஜுகள், முனாபிக்குகள் மற்றும் ஸிந்தீக்குகள் மாற்றுக் கருத்தில் இருந்தார்கள். ஸுன்னா இரண்டாம் நிலை வஹியென்று கூறிய அவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் அறிமுகம் செய்தார்கள். ‘என்னைத் தொட்டு ஏதேனும் விடயம் உங்களிடம் வந்தால் அதனை அல்குர்ஆனோடு பொருத்திப்பாருங்கள்.<br />
<br />
அல்குர்ஆனோடு உடன்பட்டால் அதனை நான் சொல்லியிருப்பேன். அல்குர்ஆனோடு முரண்பட்டால் அதனை நான் சொல்லவில்லை என்று எடுத்து கொள்ளுங்கள்’; என்பதே அவ் இட்டுக்கட்ப்பட செய்தியாகும். அல்குர்ஆன் மட்டும் போதும் என்கின்ற பயங்கர வழிகேட்டின் அடிப்படையும் இதுவேயாகும்.<br />
<br />
இன்று அரபு நாட்டிலும், தமிழ் நாட்டிலும் அல்குர்ஆன் மட்டும் போதும் என்று கோஷமிடுகின்ற ஒரு சிந்தனைப்பிரிவினர் அல்குர்ஆனின் ஒரு சில வசனங்களை மாத்திரம் மேலோட்டமாக விளங்கிக் கொண்டு (உதாரணமாக: இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர் வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். அல்குர்ஆன் 16:89) ஸுன்னா தேவையற்றது என்று கூறுகின்றனர். ஆனால் ஸுன்னாவில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை அவர்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, செத்த பிராணிகள், இரத்தம் போன்றவற்றை உண்பதை அல்குர்ஆன் முற்றாக தடைசெய்கின்றது.<br />
<br />
‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அழ்ழாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.’(அல்குர்ஆன் 05:03)<br />
<br />
ஆனால், இப்பொதுத் தடையிலிருந்து செத்த மீன்களும், கல்லீரல், மண்ணீரல் என்பனவும் விலக்களிக்கப்பட்டுள்ளன என ஸுன்னா பறைசாற்றுகின்றது. இந்தக் குர்ஆனிய்யீன்கள் தங்களது குற்றில் உண்மையாளர்களாக இருந்தால் உயிருள்ள மீனையே சாப்பிட வேண்டும். ஈரல் வகைகளை உண்ணக் கூடாது. இத்தகைய வழிகெட்ட சிந்தனையிலிருந்து அழ்ழாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக!<br />
<br />
இவ்விடத்தில் வாசகர்கள் மற்றுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
அதாவது அல்குர்ஆன், ஹதீஸில் இல்லாத அம்சங்களை இஜ்மா, கியாஸ் மற்றுமுள்ள சட்ட மூலாதாரங்களால்தான் புரிந்து கொள்ள முடியும் எனக்கூறுகின்றவர்கள் பெரும்பாலும் ஸுன்னாவை இரண்டாம் நிலை வஹியாகவே கருதுகின்றார்கள்.ஆனால்,<br />
<br />
‘அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.’ (அல்குர்ஆன் 53:3,4) எனும் வசனமானது ஸுன்னாவும் அல்குர்ஆனுக்கு நிகரான வஹியே என்பதை உணர்த்துகின்றது.<br />
ஸுன்னாவின் பணி பற்றிக்கருத்துக் கூறுகையில் அறிஞர் அவ்சாயி அவர்கள் ‘ஸுன்னா அல்குர்ஆனின் பால் தேவையாவதை விட அல்குர்ஆன் ஸுன்னாவின் பால் அதிகம் தேவையுடையது’ என்றும், யஹ்யா பின் கதீர் அவர்கள் ‘அல்குர்ஆன் தொடர்பாக தீர்ப்புக் கூறக்கூடியது ஸுன்னாவே’ எனக் கூறுகின்றார்கள்.<br />
<br />
அந்த வகையில் ஸுன்னாவால் மாத்திரம் சட்டமாக்கப்பட்ட சில அம்சங்களை பின்வருமாறு நோக்கலாம்.<br />
<br />
<b><i>01.</i></b>ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரியையும், ஒரு பெண்ணோடு அவளது தந்தையின் சகோதரியையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.<br />
<br />
‘(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அழ்;ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்:ஸஹீஹுல் புஹாரி 5108)<br />
<br />
<i><b>02.</b></i>பறவைகளில் கோரைப் நகங்களால்; கிழித்தும், மிருகங்களில் கோரைப் பற்களால் குதறியும் சாப்பிடும் பிராணிகளை உண்ணுவது தடைசெய்யப்பட்டுள்ளது.<br />
<br />
‘விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடானெத்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3914)<br />
<br />
<i><b>03.</b></i>நாட்டுக் கழுதைகள் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணவேண்டாமெனத் தடை செய்தார்கள்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 5522)<br />
<br />
<b><i>04.</i></b>திருமணம் முடித்த விபச்சாரியை கல்லெறிந்து கொல்ல வேண்டும்.<br />
<br />
‘(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ (ரலி) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன் என்று சொன்னார்கள்’ (அறிவிப்பவர்: ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி 6812)<br />
<br />
<i><b>05.</b></i>காலுறை அணிந்துள்ளவர் வுழுச் செய்யும் போது இறுதியாகக் காலைக் கழுவாமல் காலுறை மேல் தண்ணீரைத் தடவுதல்.<br />
<br />
‘முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாவது, நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்ளுடன் இருந்தேன்.<br />
<br />
அவர்கள் (உழூ செய்ய முற்பட்டபோது) அவர்களது இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு, (ஈரக்கையால்) அவ்விரு காலுறைகள் தடவி (மஸஹ் செய்யலா)னார்கள்.’ (அறிவிப்பவர்: முகீரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 206)<br />
<br />
<i><b>06.</b></i>சூரிய, சந்திர கிரகணத் தொழுகைகள் அறிமுகம் செய்யப்படல்<br />
<br />
‘நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எஙகளுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு சூரியனும் சந்திரனும் அழ்ழாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணஙகள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீஙகள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும் வரை நீஙகள் தொழுங்கள், பிரார்த்தியுஙகள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 1040)<br />
<br />
<b><i>07.</i></b>பொருளாதார நடைமுறைகள், பங்குடமை, கூட்டு முறை மற்றும் பங்கிடலில் முன்னுரிமை பற்றிய ஹதீஸ்கள்<br />
<br />
‘பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டுவிட்டால் பஙகாளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை, என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 2257)<br />
<br />
<b><i>08. </i></b>தவறிப் போன பொருட்கள், உயிரினங்கள் என்பவைகள் தொடர்பான சட்டங்கள்<br />
<br />
‘நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள்.<br />
<br />
நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு.<br />
<br />
அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள்,(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா, அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது எனக்கு நினைவில்லை) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 2426)<br />
<br />
இவ்வாறாக, மேலுள்ள நபிமொழிகள் மூலம் ஸுன்னாவினது அளப்பரிய முக்கியத்துவத்தினை அறிந்த பின்பும் வஹியில் ஒன்றினை விட்டு ஒன்றினை எடுக்க கூடிய வழிகேட்டை என்னவென்று சொல்வது?</div></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-65427528236709275462010-08-23T04:17:00.000-07:002010-08-23T04:21:19.781-07:00நபிகளாரின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வது எப்படி?<div class="entry clear" style="text-align: justify;"><div style="text-align: justify;"></div><div class="snap_preview" style="text-align: justify;"><div style="text-align: right;">மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)</div><div style="text-align: right;">nashmelslm@yahoo.com</div><br />
‘அழ்ழாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2946)<br />
<br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தல் கற்பித்தல் மற்றும் தஸ்கிய்யா (தூய்மைப்படுத்தல்) போன்ற பணிகளைக் கொண்டு அழ்ழாஹ்வால் பணிக்கப்பட்டிருந்தார்கள். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில் ‘அழ்ழாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2946)<br />
<br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அமானத்தை ஏற்று தனது பணியை முழுமையாக நிறைவு செய்தார்கள். ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர் : அபூபக்ரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078) மேலும் தனக்கு அருளப்பட்ட இறைசெய்தியை எற்றிவைக்க தன்னாலான முழு வழிவகைகளையும் பயன்படுத்தி சொல்லால் சமூகத்திற்கு நேர்வழிகாட்டியது போன்று செயலாலும் நேர்வழிகாட்டி பின்பற்றப்படக்கூடியவர் என்று அழ்ழாஹ்வால் அழைக்கப்பட்டார்கள்.<br />
<br />
எனவே இமாம் எனும் பதமானது அவரது செயற்பாடுகள் மற்றவர்களால் பின்பற்றப்படக்கூடியது என்பதைக் குறித்து நிற்கின்றது. இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.<br />
<br />
‘பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூவு செய்)யுங்கள் அவர் ‘சமி அழ்ழாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொன்னால் நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ எனச் சொல்லுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-734)<br />
<br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது செயற்பாடுகள் மற்றவர்களால் அவதானிக்கப்படக் கூடியவை என்பதனால் நடந்து கொண்ட விதம்:<br />
<br />
1. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தேகம் வருகின்ற இடங்களை தவிர்ந்து கொள்வார்கள். யதார்த்தத்தில் ஆகுமான ஒன்றைக் கூட அது வெறுக்கப்படுமானால் வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள்.<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களை சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச்செல்ல எழுந்தேன்.<br />
<br />
அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்) அப்போது அன்சாரிகளின் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிதானமாகச் செல்லுங்கள் இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான் என்று சொன்னார்கள்.<br />
<br />
இதைக் கேட்ட அவ்விருவரும் அழ்ழாஹ் தூயவன். அழ்ழாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்) என்று சொன்னார்கள். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஷைத்தான் மனிதரின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான். அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான். என்று நான் அஞ்சினேன் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-3281)<br />
<br />
2. வெளிப்படையான செயற்பாடுகளில் தன்னால் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது கவனத்திற் கொள்வதற்கு ஆசைப்படுவார்கள்.<br />
<br />
‘உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும்இ இரக்கமும் உடையவர்.’(அல்குர்ஆன் 09:128)<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர்.<br />
<br />
அந்த மூன்றாம்நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின்இ ‘அம்மா பஃது’ (இறைவாழ்த்துக்குப் பின்) எனக் கூறிவிட்டுஇ நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும்இ (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-924)<br />
<br />
3.தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளில் பெரும்பாலும் முழுமையாகவும் பூர்த்தியாகவும் செய்பவர்களாக இருந்தார்கள். ‘ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-6462)<br />
<br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஒரு தடவை மற்றும் இரு தடவைகள் உளூ உறுப்புக்களை கழுவுவதன் மூலம் உளூச் செய்துள்ளார்கள். மாறாக அதிகமான தடவைகள் உளூவின் உறுப்புக்களை மூன்று தடவை கழுவுவதன் மூலமே உளூச் செய்துள்ளார்கள்.<br />
ஒரு தடவை கழுவி உளூச் செய்தல்<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒவ்வொரு உறுப்பையும்)தலா ஒரு முறைக் கழுவி உளூ செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-157)<br />
<br />
இரு தடவைகள் கழுவி உளூச் செய்தல்<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலையைத் தவிர மற்ற உறுப்புக்களை)தலா இரண்டு முறை கழுவி உளூ செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் ஸைத் (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-158)<br />
<br />
மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்தல்<br />
<br />
‘உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (உளூச் செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.<br />
<br />
(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்துஇ வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஹும்ரான் (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-159)<br />
<br />
4. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது செயற்பாடுகளிலிருந்து தவறான விளக்கம் எடுக்கப்படாத அளவிற்கு விபரமாக விளக்குவார்கள்.<br />
ஜனாஸாவிற்காக அழ வேண்டாமென தடுத்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் வரையறை தொடர்பாக பின்வருமாறு தெளிவுபடுத்து கின்றார்கள். ‘சஅத் பின் உபாதா (ரழி) அவர்கள் நோயுற்ற போது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சஅத் பின் அபீவக்காஸ் அப்துழ்ழாஹ் பின் மஸ்ஊத் (ரழி) ஆகியோருடன் சென்றார்கள்.<br />
<br />
வீட்டுக்குள் நுழைந்த போது (சஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் என்ன ‘இறந்து விட்டாரா?’ என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை அழ்ழாஹ்வின் தூதரே!’ என்றனர்.<br />
<br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாக கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அழ்ழாஹ் தண்டிப்பதில்லை. மாறாக இதோ இதன் காரணமாகவே தண்டிக்கின்றான் அல்லது தயவு காட்டுகிறான்’ என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ்; பின் உமர் (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1683)<br />
‘(ஒரு முறை) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். (எத்தனை முறை கேட்டாலும் அனுமதியளிக்கமாட்டேன்)<br />
<br />
அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (பாத்திமாவை) மணவிலக்குச் செய்து விட்டு அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்குநான் அனுமதி வழங்கமாட்டேன்).<br />
<br />
என் மகள் (பாத்திமா) என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப் படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4839)<br />
<br />
5. மற்றவர்கள் தனதுசெயற்பாடுகளைப் புரிந்து கொண்டு பின்பற்றவேண்டுமென்பதற்காக செய்தவைகள்.<br />
<br />
‘அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பிவைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள்.’ (அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-1658)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது (மிம்பர்) நின்று தொழு(வித்)ததையும் அதன் மீது நின்று தக்பீர் கூறியதையும் அதன் மீது ருகூஉ செய்ததையும். பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து அந்த சொற்பொழிவுமேடையின் அடிப்பாகத்திற்கு இறங்கி அதில் சஜ்தா செய்ததையும் பிறகு பழையபடி மேடைக்கே சென்றதையும் நான் பார்த்தேன். தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி ‘மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்துகொள்ளுவதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்கள்.’ (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூ ஹாஸிம் பின் தீனார் (ரஹ்) நூல்: ஸஹீஹுல் புஹாரி-917)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின் போது தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்திமிட்)டார்கள். (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை அவர்கள் வெறுத்ததே அ(வர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த)தற்குக் காரணமாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2443)<br />
<br />
6. இது தவிர ஒருவரின் கேள்விக்கு பதிலாக ஒருவரின் செயற்பாட்டைக் கண்டிக்கும் விதத்தில் ஒருவரின் செயற்பாட்டை புகழும் விதத்தில் மற்றும் அங்கீகரிக்கும் வகையில் கூறியவைகள்:<br />
<br />
‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம் நான் சாய்ந்துகொண்டு சாப்பிடமாட்டேன் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஜுஹைபா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-5399)<br />
<br />
‘ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குளியல் கடமையாகுமா? என்று ஒரு மனிதர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்’ என்றார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-580)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ் வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடு கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-5063)<br />
<br />
பின்பற்றும் நோக்கில் நபிகளாரின் செயற்பாடுகளை நபித்தோழர்கள் அவதானித்தல்:<br />
<br />
‘நான் என் சிறிய தாயார் மைமூனா (ரழி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு (வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புக்களைக் கழுவாமல் நடுநிலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன்.<br />
<br />
நான் அவர்களை நோட்டமிடுவதற்காக விழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத் தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் நின்று தொழ நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்கையைப் பிடித்துச் சுற்றி என்னைத் தமது வலப்பக்கத்திற்கு கொண்டு வந்தார்கள். பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையைப் பதின்மூன்று ரக்அத்களுடன் முடித்துக் கொண்டார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டை விட்டபடி உறங்கினார்கள். உறங்கும் போது குறட்டை விடுவது அவர்களது வழக்கமாகும். பின்னர் பிலால் (ரழி) அவர்கள் வந்து அவர்களை (ஃபஜ்ர்) தொழுகைக்காக அழைத்தார்கள். அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்.<br />
அழ்ழாஹும்மஜ்அல் ஃபீ கல்பி நூரன். வஃபீ பஸரீ நூரன். வஃபீ சம்ஈ நூரன். வஅன் யமீனீ நூரன். வ அன் யசாரீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ அழ்ழீம் லீ நூரா.<br />
<br />
(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு (எல்லாத்திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக!’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1399)<br />
<br />
‘நான் ஒரு நாள் இரவு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை (கண்விழித்து) கவனிக்கப்போகிறேன் எனச் சொல்லிக் கொண்டேன். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்(முதலில்) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (உளூவின் காணிக்கையாகத்) தொழுதார்கள்(210).<br />
<br />
பிறகு மிக மிக மிக நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாக இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் .<br />
<br />
அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்(210). அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு (ஒரு ரக்அத்) வித்ர் தொழுதார்கள்(110). இவை பதின்மூன்று ரக்அத்கள் ஆகும்(13).’ (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனி (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1413)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரழி) பிலால் (ரழி) உஸ்மான் பின் தல்ஹா (ரழி) ஆகியோரும் கஅபாவினுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது நானே முதல் முதலில் உள்ளே நுழைந்தேன். பிலால் (ரழி) அவர்களிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா என்று கேட்டேன். பிலால் (ரழி) அவர்கள் ஆம்! வலப் புறத்து இரு தூண்களுக்கு மத்தியில் எனப் பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் உமர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-1598)<br />
<br />
‘ஒரு நாள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வீதியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் இப்னு உமர் (ரழி) அவர்களும் இருந்தார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் இப்னு உமர் (ரழி) அவர்கள் அவ்வீதியால் செல்ல நேரிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் செல்லமாட்டார்கள்.<br />
<br />
இது தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் போத இப்னு உமரை விட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடவடிக்கைகளை பின்பற்றும் எவரையும் நான் கண்டதில்லை என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: நாபிஉ (ரஹ்) நூல்: ஸியரு அஃலா மின்நுபலா (இப்னு உமர் (ரழி) அவர்கள் பற்றிய பாடம்)<br />
<br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற் பாடுகளில் வணக்கம் என்ற வகையில் பின்பற்றப்படுவதற்கு அப்பாலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகளை இப்னு உமர் (ரழி) அவர்கள் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் வணக்கம் என்பதற்குள் உள்ளடங்காது என்பதனை இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் தொடர்களில் நோக்குவோம்.</div></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-11160373206804501842010-08-23T04:09:00.000-07:002010-08-23T04:11:25.619-07:00நபிகளாரின் செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை புரிந்து கொள்வது எப்படி?<div style="text-align: right;"><div style="color: black;"><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: 11px; font-weight: normal;">மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)</span></div>nashmelslm@yahoo.com </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அழ்ழாஹ்வை அஞ்சுங்கள்! அழ்ழாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.’ (அல்குர்ஆன் 59:07)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>சென்ற இதழின் தொடர்ச்சி…</i></div><div style="text-align: justify;"><br />
</div><div></div><div style="text-align: justify;">கடந்த இதழில் எமது ஸுன்னா தொடர் பகுதியில் நபிகளாரின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வது எப்படி? எனும் தலைப்பில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற செயற்பாடுகளில் பெரும்பாலும் முழுமையாகவும், பூர்த்தியாகவும் செய்வார்கள் என்கின்ற குறிப்பில் மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்தல் பற்றிய நபிமொழியில் காதை மஸ்ஹுசெய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை என ஒரு வாசகர் கேட்டிருந்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">எமது ஸுன்னா தொடரைப் பொறுத்தவரையில் முழுமையாக சட்டவிளக்கங்களுக்காக எழுதப்படுவதன்று. மாறாக, ஸுன்னாவின் முக்கியத்துவம் மற்றும் ஸுன்னா தொடர்பான மிக முக்கிய தெளிவுகளை வழங்கி, பித்அத்திலிருந்து முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கிலேயே எழுதப்பட்டு வருகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">நாம் கூறுகின்ற விடயங் களுக்கு அவசியமான மிக முக்கிய உதாரணங்களை மாத்திரம் ஆங்காங்கே குறிப்பிடுகின்றோம். இருந்த போதிலும், தங்களது நியாயமான சந்தேகத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடும் எமக்கு உண்டு என்ற வகையில் அதற்கான தெளிவை வழங்குகின்றோம்.</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">உளூவுடைய உறுப்புக்களை கழுவுவது சம்பந்தமாக வருகின்ற நபிமொழிகளைப் பொறுத்த வரையில் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நபிமொழிக் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள அறிவுப்புக்களில் காதை மஸ்ஹுசெய்வது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஏனைய நபிமொழிக் கிரந்தங்களையும் ஆய்வு செய்துதான் குறித்த விடயத்தில் அமல் செய்ய முடியும். அந்த வகையில் காதை மஸ்ஹுசெய்வது தொடர்பாக இடம்பெற்றுள்ள நபிமொழி பின்வருமாறு:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், காதுகளுக்கும் தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து மஸஹ் செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழி), நூல்: நஸாயி-74)</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை பிரித்து விளங்கு வதற்கான வழிமுறைகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் வாஜிபாக (கட்டாயமானது), ஸுன்னத்தானதாக (மன்தூப்), மற்றும் ஆகுமானவை (முபாஹ்)களாகவோ இருக்க முடியும். சில நேரங்களில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் மறதியாக சில விடயங்கள் இடம்பெற்றுவிடும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">‘(ஒரு நாள்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹர் அல்லது அஸர்த் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)த போது அவர்களிடம்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">‘அழ்ழாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)’ என்று கூறினர். உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">பின்னர், எங்களை நோக்கித் திரும்பி, ‘ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்கு தெரிவித்துவிடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான். (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நானும் எதையேனும் மறந்துவிட்டால் எனக்கு (அதை) நினைவு படுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவுசெய்து அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் புஹைனா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-991)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">அந்த வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் ஒவ்வொரு விடயங்களையும் பிரத்தியேகமாக விளங்கிக் கொள்வதற்கான அளவுகோள்களை நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><span style="color: blue;">நபிகளாரின் செயற்பாடுகளில் வாஜிப்</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">1. தான் மேற்கொண்ட செயற்பாடு வாஜிபானாது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவாகக் கூறுதல்.</div><div style="text-align: justify;"><br />
2. கட்டாயமானது என்று சொல்கின்ற அந்தஸ்த்தில் குறித்த செயல் இடம் பெறுதல். ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்ற அழ்ழாஹ்வின் வார்த்தைக் கமைவாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது, கடமையான தொழுகையின் நேரங்கள் பற்றி வினவப்பட்ட போது, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">அவரிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்முடன் இவ்விரு நாட்கள் தொழுங்கள்! என்று கூறி தனது செயற்பாடுகளின் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்ப நேரத்தையும், இறுதி நேரத்தையும் விளக்கியமை’ (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: புரைதா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1078)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">3.முன்னர் வாஜிபான ஒரு விடயத்துடன் உவமைப்படுத்துதல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">4.கடமைகளுக்கு அடையாளமாக மார்க்கத்தில் காணப்படும் விடயங்கள்: அதான், இகாமத்துடன் தொழுகை நடாத்துதல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">5.நேரம் கடந்திருந்த போதிலும் ஏற்கனவே, என்ன முக்கியத்துவத்துடன் ஒரு செயலைச் செய்தார்களோ, அவ்வாறே நிறைவேற்றுதல்: ‘நாங்கள் (ஒரு நாள்) இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் (யாரும்) விழிக்கவில்லை. பிறகு, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து), ‘ஒவ்வொருவரும் தமது வாகனத்தின் தலையைப் பிடித்து(க் கொண்டு இந்த இடத்தை விட்டு நகர்ந்து) செல்லட்டும். ஏனெனில், இந்த இடத்தில் நம்மிடம் ஷைத்தான் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட, வைகறைத் தொழுகை (பஜ்ர்) தொழுவித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1212)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><span style="color: blue;">நபிகளாரின் செயற்பாடுகளில் ஸுன்னத் என்கின்ற வரையறைக்குள் இடம்பெறும் விடயங்களை பின்வரும் அடிப்படைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">1. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கூற்றின் மூலமே ஸுன்னத் என விளக்குதல்: ‘திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, இவ்விரு தினங்களிலும் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் எனது அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரழி), நூல்: நஸாயி-2330)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">2.ஸுன்னத் என்று கூறுவதற்கு ஏற்றவாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் காணப்படுதல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">3.ஸுன்னத்தான ஒரு விடயத்தோடு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) பிறிதொரு விடயத்தை ஒப்பிட்டுக் கூறுதல்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">4.ஸுன்னத்திற்கான அறிகுறியாக மார்க்கத்தில் காணப்படும் அம்சங்களோடு குறித்த செயல் இடம்பெறல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">5.நஸ்ஹ் (சட்டம் மாற்றப்படல்) அல்லது எந்த தடையும் இல்லாது ஒரு சில வேளைகளில் விட்டாலே தவிர ஒரு அமலைத் தொடராக மேற்கொள்ளல்: ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் பஜ்ர் தொழுகையில் ‘அலிப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-891)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><span style="color: blue;">ஆகுமான விடயங்களை அறிந்து கொள்வதின் அளவுகோல்கள் </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">1.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தனது செயற்பாடு ஆகுமானது என வெளிப்படையாகக் கூறுதல்: ‘நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1776)</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">2.ஆகுமானதென்பதை விளக்கும் வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடு அமைந்திருத்தல்: ‘போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அழ்ழாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அழ்ழாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 08:69) என்கின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனீமத்தில் இருந்து சாப்பிட்டமையும், ‘ஒட்டகங்களை உங்களுக் காக அழ்ழாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அழ்ழாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.’ (அல்குர்ஆன் 22:36) என்கின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு குர்பானி இறைச்சியிலிருந்து சாப்பிட்டமையும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">3.ஏற்கனவே, ஆகுமானதென அறியப்பட்ட விடயத்தையும் குறித்த அம்சத்தையும் இணைத்து உவமைப் படுத்துதல்: குறித்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாட்டில் கட்டாயமானதிற்கும், </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஸுன்னத்திற்குமானதுமான ஆதாரங்கள் இல்லாதிருப்பது. அத்தகைய சந்தர்ப்பங்களில் வாஜிப், ஸுன்னத் ஆகியவைகளில் ஒன்று நிரூபணமாகாத நிலையில் ஆகுமானதென்ற நிலைக்கே செல்ல வேண்டும். அதுவே அடிப்படையுமாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">மேற்படி இவ்விடயங்கள் மார்க்க அடிப்படைகளைப் புரிந்து கொள்வது தொடர்பிலாகும். இது தவிர, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஏனைய செயற்பாடுகள் பற்றிய விபரத்தை இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் இதழ்களில் நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">இன்ஷா அழ்ழாஹ் வளரும்…</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நன்றி: www.dharulathar.com</div><div style="text-align: justify;"><br />
</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-44783143564388892142010-08-10T04:16:00.000-07:002010-08-10T04:16:49.137-07:00அண்ணல் வழியில் அருள்மிகு ரமழான்<div style="text-align: justify;">சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கிணங்க ரமழான் குறித்து இறைமறையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் என்ன கூறுகின்றார்கள் என சுருக்கமாக நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong><strong>அருள்மறையும் அருள்மிகு ரமழானும்</strong></strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அருள்மிகு ரமழான் மாதத்தின் சிறப்புக்களில் மிக முக்கியமானது அகிலத்தாருக்கு வழிகாட்டியான அருள்மறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டதாகும். இது குறித்து திருமறைக்கு குர்ஆன் குறிப்பிடுகையில்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’ (அல்குர்ஆன் 02:185)</span> என்று கூறுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலகப் பொதுமறை இறக்கியருளப்பட்ட அருள்மிகு ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது? என்கின்ற அர்த்தமற்ற, அறிவுபூர்வமற்ற வரட்டுச் சித்தாங்களை தூக்கி வீசிவிட்டு சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்ககூடிய, சிந்திக்கத் தூண்டக் கூடிய, இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டக் கூடிய அதிஅற்புத வேதத்தை கற்று, அதன்படி செயற்பட்டு, அகிலத்தின் இரட்சகனின் அருளை அதிகமதிகம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>இதோ அருள்மறை பேசுகின்றது.</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’ (அல்குர்ஆன் 47:24)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘இது (அழ்ழாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.’ (அல்குர்ஆன் 02:02)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>இறையச்சமே இலக்கு</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அழ்ழாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:83)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலுள்ள அருள்மறை வசனம் ரமழான் மாத நோன்பு கட்டாயக் கடமை என்பதை உணர்த்துவதோடு, கடமையாக்கப்பட்டதற்கான காரணம் இறையச்சமே என்று எடுத்தியம்புகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>நோன்பு ஓர் கேடயம்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கின்ற கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அழ்ழாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அழ்ழாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1894)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழி ‘<strong>நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்’ </strong>என்பதை மாத்திரமன்றி, <strong>‘நோன்பாளியின் வாயிலிருந்து வருகின்ற வாடை கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்தது’ </strong>என்று கூறுவதன் மூலம் நோன்பாளியின் சிறப்பினை உணர்த்தி நிற்கின்ற அதே வேளை, ‘<strong>நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’</strong> என்று அருளாளன் விஷேடமாகக் குறிப்பிடுவதன் மூலம் நோன்பின் மகத்துவத்தினை உணர்ந்நது கொள்ளலாம்.<br />
<strong><br />
</strong><strong>ரய்யான் நோன்பாளிகளுக்கே!</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1896)</span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"> </span> </div><div style="text-align: justify;"><strong>திறக்கப்படும் சுவன வாசல்கள்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“ரமழான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன எனஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1898)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>விலங்கிடப்படும் ஷைத்தான்கள்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1899)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>பாவங்களுக்குப் பிரியாவிடை</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>மன்னிக்கப்படும் பாவங்கள் </strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2008)</span><br />
<strong><br />
மழைக்காற்றை விட அதிகமாக வாரிவழங்கும் வள்ளல்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள. வானவர் ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் சந்திக்கும் வேளையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை- அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும் போது மழைக் காற்றை விட, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1902)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>ரமழானை ஆரம்பிப்பது எவ்வாறு?</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">01.29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">02.பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்” (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">03. மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>இரவுத் தொழுகை நபிவழியும் புதுவழியும்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.”(அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால், அன்னையவர்கள் ’ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ, அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.</div><div style="text-align: justify;">ஆனால், நமது சமுதாய மக்கள் தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998)</span> என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>வெள்ளைக் கயிரும் கறுப்புக் கயிறும்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>பரக்கத் மிக்க ஸஹர்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் அருள்வளம் -பரக்கத்- இருக்கின்றது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1923)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>நிய்யத்தை வாயால் மொழியலாமா?</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong> </strong>நிய்யத் என்ற சொல்லுக்கு உள்ளத்தால் நினைத்தல் என்பதுவே பொருளாகும்.</div><div style="text-align: justify;">மாறாக, வாயால் மொழிதல் என்ற பொருள் கிடையாது. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்லி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹி தஆலா’ இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை நோற்பதற்கு நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக”</div><div style="text-align: justify;">குறித்த செய்தியை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் ஒரு முறை கூட ஓதியதாக எந்த ஆதாரமும் கிடையாது. மாறாக, குறித்த துஆவை ஓதுவது நபிகளாரின் தூதுத்துவத்தில் குறை காணும் செயலாகும். “நான் நோன்பு நோற்கின்றேன்” என்ற எண்ணம் மனதில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">”அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-01)</span></div><div style="text-align: justify;"><strong><br />
மறதியாக உண்ணல், பருகல்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“ஒருவர் மறதியாக உண்ணவோ, பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில், அழ்ழாஹ்வே உண்ணவும், பருகவும் செய்தான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1933)<br />
</span><br />
<strong>உயிர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதிப் பத்து</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“(ரமழானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தானும் இரவை உயிர்ப்பித்து, தனது குடும்பத்தை விழிப்பூட்டி, தனது வேஷ்டியையும் (அழ்ழாஹ்வை வணங்குவதற்காக) இறுக்கமாக கட்டிக்கொள்ளுவார்கள்.” (ஸஹீஹுல் புஹாரி-2024)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>உம்ரா செய்தால் ஹஜ் நன்மை.</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">“ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி (1782) </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>ஆதாரபூர்வமற்ற நோன்பு திறக்கும் துஆக்கள்</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நோன்பு திறக்கும் நேரங்களில் நமது சமூகத்தில் பரவலாக ஓதப்பட்டு வருகின்ற”அழ்ழாஹும்ம லக்க ஸும்த்து வபிக ஆமன்த்து வஅலைக்க துவக்கல்த்து வஅலா ரிஜ்க்கிக்க அஃப்தர்த்து ஃபதகப்பல்மின்னி”, ”தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”ஆகிய இரண்டு துஆக்களும் ஆதாரபூர்மற்றவைகள் ஆகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலும், பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் நேரங்களில் மிக முக்கிய நேரம் ” நோன்பு திறக்கும் நேரம்” என்கின்ற கருத்தில் இடம்பெற்றுள்ள செய்தியும் ஆதாரபூர்வமற்றதாகும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு எமது தளத்தில் வெளியிடப்பட்டுள்ள “நோன்பு திறக்கும் போது ஓதும் துஆக்கள்?” என்கின்ற ஆய்வுக் கட்டுரையைப் பார்வையிடவும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>அனைத்தும் ஆதாரபூர்வமற்றவைகளே!</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: black;">“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் இறுதித் தினத்தன்று எங்களுக்கு பிரசங்கம் செய்யும் போது கூறினார்கள். ‘மனிதர்களே! பரகத் செய்யப்பட்ட சங்கை மிகு மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஒரு இரவு இருக்கின்றது. அதில் அழ்ழாஹ் நோன்பு நோற்பதை கடமையாகவும், இரவில் நின்று வணங்குவதை உபரியான (சுன்னத்) தாகவும் ஆக்கியுள்ளான். யார் அம்மாதத்தில் ஏதோ ஒரு நற்கருமத்தைப் புரிகின்றாரோ அவர் ரமழான் அல்லாத மாதத்தில் கடமையான (வணக்கத்)தை நிறைவேற்றியவரைப் போன்றாவார்.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலும், யார் அம்மாதத்தில் கடமையான (வணக்கத்)தை நிறைவேற்றுகின்றாரோ, அவர் ரமழான் அல்லாத மாதத்தில் எழுபது கடமை (வணக்கங்) களைப் புரிந்தவரைப் போன்றாவார். இம்மாதம் பொறுமை செய்யும் மாதமாகும். பொறுமைக்குக் கூலி சுவர்க்கமாகும். மேலும், இம்மாதத்தில் ஒரு விசுவாசியின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். யார் இதில் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறாறோ, அது அவரது பாவங்களுக்கு மன்னிப்பாகவும் அவரை நரக நெருப்பிலிருந்து விடுவிக்கக் கூடியதாகவும் மாறிவிடுகின்றது. மேலும், (நோன்பு திறந்தவருடைய) கூலியிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவருக்கு கிடைப்பது போன்ற கூலி இவருக்கும் கிடைக்கும். அப்போது ஸஹாபாக்கள், நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வதற்குரிய வசதி எங்களிடம் இல்லையே? என்று கேட்டனர். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழம் அல்லது ஒரு மிடரு நீர் அல்லது ஒரு மிடரு பாலைக் கொடுத்து நோன்பு திறக்கச் செய்பவருக்கும், இக்கூலியை அழ்ழாஹ் வழங்குவான் என்று கூறினார்கள். இம்மாதத்தின் ஆரம்பப் பகுதி (ரஹ்மத்) அருளுக்குரிய தாகும். நடுப்பகுதி (மஃபிரத்) பாவமன்னிப்பிற்குரியதாகும். இறுதிப்பகுதி (இத்கும்மினன் நார்) (நரக) நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதற்குரியதாகும். யார் தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்களை (வேலைகளை) இலகு படுத்துகின்றாரோ அவரை அழ்ழாஹ் மன்னித்து (நரக) நெருப்பிலிருந்து விடுவிக்கின்றான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இம்மாதத்தில் நான்கு விடயங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு உங்களுடைய இறைவனை திருப்திப்படுத்தக்கூடிய விடயமாகும். மற்றைய இரண்டும் அவற்றை விட்டு விலகி அலட்சியமாக இருக்க முடியாதவையாகும். (இறைவனை திருப்திப்படுத்தக் கூடிய) இரண்டு விடயங்களில் ஒன்று வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அழ்ழாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. என்று சான்று பகர்வதாகும். (இரண்டாவது) பிழை பொறுக்கத் தேடுவதாகும். அலட்சியமாக இருக்க முடியாத இருவிடயங்களில் ஒன்று அழ்ழாஹ்விடத்தில் நீங்கள் சுவனத்தைக் கேட்பதாகும். (இரண்டாவது) நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாகும். எவரொருவர் இம்மாதத்தில் ஒரு நோன்பாளியை வயிறு நிரம்பச் செய்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் சுவனம் நுழையும் வரை தாகமே ஏற்படாத அளவிற்கு தன்னுடைய நீர்த்தடாகத்திலிருந்து ஒரு மிடரு நீரை குடிக்கக் கொடுக்கின்றான்.’ (அறிவிப்பவர்: சல்மான் (ரழி), நூற்கள்: ஸஹீஹ் இப்னு குஸைமா-1887, சுஅபுல் ஈமான்-3608)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘அலி இப்னு ஷைத் இப்னு ஜத்ஆன்’ என்கின்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;">‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்துவிட்டால், ‘இறைவா! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக! மேலும், ரமழானை எங்களை அடையச் செய்வாயாக!’ எனப் பிராத்திப் பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி), நூற்கள்;: அஹ்மத்-2346, முஃஜமுல் அவ்சத்-3939)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘ஸயீத் இப்னு அபிர்ருகாத்’ என்கின்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபுர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>பித்அத்களை முற்று முழுதாக புறக்கணிப்போம்.</strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">15 ம் கிழமை, 27 ம் கிழமை என்று குறித்த சில தினங்ககளை விஷேட தினங்களாக கருதி உயிர்ப்பிப்பது, ஸலவாத் மாலை என்ற பெயரில் நபிவழிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட நூலை பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் சிறுவர்களைக் கொண்டு பாடச் செய்வது, தவ்பா என்ற பெயரில் இமாம் சில வாசகங்களைச் சொல்ல மஃமூம்கள் அவற்றை ஒப்புவிப்பது, கூட்டு திக்ர்கள், கூட்டுப் பிரார்த்தனைகள் என நபிவழியை குழிதோண்டிப் புதைக்கின்றனர். இவர்கள் குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மார்க்கத்தை தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எனவே, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் ரமழான் வணக்கங்கள் உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அழ்ழாஹ் அருள் புரிவானாக!</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-84589440626215430052010-08-08T06:13:00.000-07:002010-08-08T06:13:45.844-07:00சர்வதேசப்பிறை ஓர் அறிமுகம்<div class="snap_preview"><div style="text-align: right;">முஹம்மட் அர்ஷாத் அல் அதரி</div><div style="text-align: right;">arshathalathary@gmail.com</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அருள்மறைக் குர்ஆன் இறங்கிய சங்கைமிகு மாதமான ரமழான் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்களிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடுகின்றன. அதில் முதன்மையானது ரமழானை தீர்மானிக்க கூடிய பிறையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளான நோன்பு மற்றும் பெருநாள் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தீர்மானிப்பதில் பிறை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிறையினை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுமாறு அருள்மறைக் குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஆனால், இப்பிறையினை தீர்மானிப்பதில் முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1. ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரே பிறை (சர்வதேசப் பிறை)<br />
2. நாட்டுக்கொரு பிறை<br />
3. ஊருக்கொரு பிறை<br />
4. கணிப்பின் அடிப்படையில் பிறையைத் தீர்மானித்தல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆகிய பிரதான அடிப்படைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே ஊரில் ஒரு சாரார் நோன்பு நோற்றிருக்க, மற்றுமொரு சாரார் உண்டு கழிக்கின்றனர். இத்தகைய கருத்து வேறுபாடுகளுள் எது சரியானது? என்பதனை இறைவன் மீதான அச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அருள்மறைக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளின் அடிப்படையில் நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: red;"><strong>காலக் கணக்கினை அறிந்து கொள்ளவே சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டுள்ளன. </strong></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்.’ (அல்குர்ஆன் 06:96)</div><div style="text-align: justify;">‘ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அழ்ழாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.’ (அல்குர்ஆன் 10:05)</div><div style="text-align: justify;">‘பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 02:189)</div><div style="text-align: justify;">‘இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.’ (அல்குர்ஆன் 17:12)</div><div style="text-align: justify;">இது போன்ற அருள்மறை வசனங்கள் காலக் கணக்கினை அறிந்து கொள்வதற்காகவே சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டுள்ளதாக எடுத்தியம்புகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><strong>மாதநாட்களின் எண்ணிக்கை எத்தனை? </strong></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சிலவேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1913)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேற்படி அடிப்படைகளை மனதில் நிலைநிறுத்தியவர்களாக, பிறை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:</div><div style="text-align: justify;">01.<span style="color: red;">29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது: </span></div><div style="text-align: justify;">‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)</div><div style="text-align: justify;"> 02.<span style="color: red;">பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது: </span></div><div style="text-align: justify;">‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)</div><div style="text-align: justify;">03. <span style="color: red;">மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது: </span></div><div style="text-align: justify;">நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;">‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகளில் பிறையைத் தீர்மானிப்பதற்கு இம்மூன்று வழிமுறைகளுமே கற்றுத் தரப்பட்டுள்ளன. நாம் பிறை தொடர்பான எத்தகைய முடிவினை எடுப்பதாக இருந்தாலும் நமது சுய விருப்பு, வெறுப்புகளுக்காக இவற்றில் ஒன்றை எடுத்து, மற்றொன்றை நிராகரிக்க முடியாது. மாறாக, இம் மூன்று வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகவே நமது முடிவு இருக்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: red;">சர்வதேசப் பிறை என்றால் என்ன? </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இருபத்து ஒன்பதாவது நாளை நிறைவு செய்த பின்னர் நாம் பிறை பார்க்க வேண்டும். பிறை தென்பட்டால் அடுத்த மாதம் பிறந்து விட்டது என முடிவு செய்ய வேண்டும். மாறாக, அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் உலகின் எப்பாகத்தில் இருந்தேனும், இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால், அதனை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று செயற்பட வேண்டுமென்பதுவே சர்வதேச பிறையாகும்.</div><div style="text-align: justify;">மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்கு கற்றுத் தந்த மூன்று வழிமுறைகளில் ஒன்றை எடுத்து, மற்றொன்றை நிராகரிக்காது இருக்க வேண்டுமாயின் ஒருவர் சர்வதேசப் பிறையையே சரி காணவேண்டும். மாறாக, சில சகோதரர்கள் கூறுவது போன்று சர்வதேசப் பிறை என்பது சவூதிப் பிறையோ, மக்காப் பிறையோ கிடையாது என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: red;">சர்வதேசப் பிறையை நாம் ஏன் சரி காண்கின்றோம்?</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">01.<span style="color: blue;">அருள்மறைக் குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் சர்வதேசப் பிறைக்கே வலுவான ஆதாரங்கள் கிடைக்கின்றன.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிறை தொடர்பான, மாறுபட்ட கருத்துக்களில் சர்வதேசப் பிறையை வலியுறுத்தக் கூடிய வகையிலேயே நபிமொழிகளில் ஏராளமான, வலுவான ஆதாரங்கள் காண கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்.நோன்பை விடுங்கள்.’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘மக்கள் எல்லோரும் பிறை பார்க்க முயன்றார்கள். நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையை’ பார்த்தேன் என்று கூறினேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவூத்-2342, தாரமி-1691, இப்னு ஹிப்பான்-3447, ஹாகிம்-1541, பைஹகி-2593)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்-2339, அஹ்மத்-18844)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாம் இதுவரை பார்த்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பிறை கண்டதாக சாட்சியம் கிடைத்தால் தூர, பிரதேச, கால எல்லைகளைப் பொருட்படுத்தாது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. மேலும், 06:96, 10:05, 02:189,17:12 போன்ற அருள்மறை வசனங்கள் பிறையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘மக்களுக்கு காலங்காட்டிகள்’ என்று குறிப்பிடுவதன் மூலம் உலகின் எப்பாகத்திலேனும் பிறை காணப்பட்டுவிட்டால் அது முழு உலகிற்குமே உரிய பிறையாகும் என்பதனை உறுதி செய்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எனவே, உலகில் எப்பிரதேசத்திலேனும் பிறை காணப்பட்டதாக இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் சாட்சியமளித்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சர்வதேசப் பிறைக்கே அருள்மறைக் குர்ஆனிலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயரிய வழிகாட்டலிலும் வலுவான ஆதாரம் கிடைக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">02.<span style="color: blue;">சர்வதேசப் பிறையே நடைமுறைச் சாத்தியமானது: </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இன்றைய நவீன பிரச்சினைகள், இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி இவ் உலகம் அழிக்கப்படுகின்ற நிலையில் வாழ்கின்ற கடைசி மனிதனுக்கும் வழிகாட்டக் கூடிய ஓர் உன்னதமான வாழ்வியல் வழிகாட்டியாகும்.</div><div style="text-align: justify;"><br />
அந்த வகையில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை இஸ்லாம் ஒரு போதும் போதிக்காது என்கின்ற விடயத்தை உள்ளத்தில் இருத்தியவர்களாக இப்பிரச்சினையை நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாடுகளின் எல்லைகளைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்டதாகும். யுத்தம் மற்றும் அரசியற் காரணிகளால் இணைந்திருந்த ஒரு நாடு பல நாடுகளாக பிரிவதையும், பிரிந்திருந்த நாடுகள் இணைந்து ஒரு நாடாக மாறுவதையும் காண்கின்றோம். மனிதக் காரணிகளால் ஏற்படுகின்ற இம்மாற்றமானது அழ்ழாஹ்வின் மார்க்த்தை மாற்றியமைக்குமா? என்பதனை நாட்டுக்கு நாடு ஓர் பிறை, ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறுகின்ற மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். அந்த வகையில் நடைமுறை ரீதியான சில பிரச்சினைகளை நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">01.நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமிடையில் பிறையைத் தீர்மானிப்பதில் ஒரு நாள் அல்லது இருநாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இப்போது ஒருவர் சவூதியில் வைத்து தலைப்பிறையினை தமது கண்களால் கண்டு நோன்பு நோற்கின்றார். பின்னர், ரமழானின் நடுப்பகுதியில் நாடு திரும்புகின்றார். குறித்த மாதம் சவூதிக்கும், இலங்கைக்கும் இடையில் இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இப்போது இலங்கையில் இருப்பவர்கள் 28 வது நோன்பை பூர்த்தி செய்கையில், சவூதியிலிருந்து வருகை தந்தவருக்கு 30 வது நோன்பு பூர்த்தியாகிவிடும். இவருக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இவர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கின்ற கட்டளையினை மீறி 31 வது நோன்பையும் நோற்க வேண்டுமா? அல்லது தனித்துப் பெருநாள் கொண்டாட வேண்டுமா? தனித்துப் பெருநாள் கொண்டாட வேண்டுமென்றால் அதற்குரிய ஆதாரம் என்ன?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">02.இன்று உலகளாவிய ரீதியல் துரித விமான சேவை இடம்பெற்று வருகின்றது. தற்போது வர்த்தக நோக்கிற்காக பாகிஸ்த்தானுக்கு சென்ற சில சகோதரர்கள் பாகிஸ்த்தானில் வைத்து தலைப்பிறையைப் பார்த்து விட்டு சில மணி நேரங்களில் நாடு திரும்புகின்றனர். ஆனால், இலங்கையில் பிறை தென்படவில்லை. இவர்களுக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இவர்கள் பாகிஸ்த்தானில் கண்ணால் கண்ட பிறையின் அடிப்படையில் நோன்பு நோற்பதா? அல்லது இலங்கையில் பிறை காணப்படவில்லை என்பதற்காக நோன்பு நோற்காதிருப்பதா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">03.உள்நாட்டுப் பிறையின் அடிப்படையில் நோன்பு நோற்ற இலங்கையர் ஒருவர் கட்டார் நாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றார். குறித்த சகோதரர் 27 நோன்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் கட்டாரில் பிறையைக் காண்கிறார். குறித்த மாதம் கட்டாரிற்கும், இலங்கைக்கும் இடையில் இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இவருக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? அழ்ழாஹ்வின் தூதரின் பிறை கண்டால் நோன்பை விட்டு விடுங்கள் என்கின்ற நபிமொழியை மீறுவதா? அல்லது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கின்ற நபிமொழியை மீறுவதா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">04.இன்றைய இந்தியா, பாகிஸ்த்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இணைந்து ஆரம்பத்தில் பாரத நாடு (ஹிந்துஸ்த்தான்) என்கின்ற ஒரு நாடாகவே காணப்பட்டது. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பாரத முஸ்லிம்களும் ஒரே பிறையின் அடிப்படையிலேயே நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களை அனுஷ்டித்திருப்பார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால், பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் பாரத நாடு இந்தியா, பாகிஸ்த்தான் என்கின்ற இருநாடுகளாகப் பிரிவடைந்து, பின்னர் பாகிஸ்த்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவடைந்து இன்று வௌ;வேறு மூன்று நாடுகளாகக் காணப்படுகின்றன. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் ஒரே பிறையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் இன்று மூன்று பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வலியுறுத்தக் கூடிய மார்க்க அறிஞர்களே! அரசியற் காரணிகளால் ஏற்படுகின்ற மாற்றம் அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மாற்றியமைக்குமா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">05.உலகில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். (இன்ஷா அழ்ழாஹ் நிச்சயம் ஏற்படும்) தற்போது பலஸ்த்தீன், ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் வாழ்கின்ற எமது ஈமானிய உறவுகள் மீது கோரத்தாக்குதல்களை மேற்கொள்கின்ற யூத, கிறிஸ்த்தவ, சியோனிஸ்டுகள் மீது போர் தொடுப்பது இஸ்லாமிய அரசின் கட்டாயக் கடமையாகின்றது. இப்போரில் அருளாளன் அழ்ழாஹ்வின் பேருதவியால் இஸ்லாமிய அரசுக்கு வெற்றி கிடைக்கின்றது. இதனை வரலாற்றில் பதிவு செய்வதாயின் எந்தப் பிறையின் அடிப்படையில் பதிவு செய்வது? அமெரிக்கப் பிறையின் அடிப்படையிலா? பலஸ்த்தீன் பிறையின் அடிப்படையிலா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">06.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் பிறை 12ல் மரணமடைந்தார்கள் என்று ஆதாரபூர்வமான நபிமொழகள் எடுத்தியம்புகின்றன. அவ்வாறாயின், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பகுதியின் பிறை 12ல் மரணமடைந்தார்கள். மக்காப் பிறையின் அடிப்படையிலா? மதீனாப் பிறையின் அடிப்படையிலா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">07. ஆரம்பத்தில் ஒரு நாடாகக் காணப்பட்ட கொரியா இன்று வடகொரியா, தென்கொரியா என்கின்ற இரு நாடுகளாகக் காணப்படுகின்றது. கொரிய நாட்டு மக்கள் ஒரு பிறையின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைசட்டமா? அல்லது இரு வேறுபட்ட பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைசட்டமா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">08. இந்தியாவின் கீழக்கரை என்கின்ற பிரதேசத்திற்கும் இலங்கையின் தலை மன்னாரிற்கும் இடைப்பட்ட தூரம்வெறும் 50 கி.மீ இற்கும் குறைவான தூரமேயாகும். ஆனால் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்திற்கும், காலிக்கும் இடையிலான தூரம் 600 கி.மீ இற்கும் அதிகமான தூரமாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தியாவின் கீழக்கரையில் கண்ட பிறை தலை மன்னாருக்கு செல்லுபடியாகாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நீதமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள் என பொதுவாகத்தானே கட்டளையிட்டுள்ளார்கள். ஏன் இந்த முரண்பாடு? இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம் என்று நாம் உரைகளில் உரக்கச் சொல்வது அர்த்தமற்றுப் போய்விடுமே?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">09.இன்றைய ஜேர்மன் நாடு ஆரம்பத்தில் கிழக்கு ஜேர்மன், மேற்கு ஜேர்மன் என்கின்ற இரு நாடுகளாக காணப்பட்டது. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் கிழக்கு ஜேர்மன் மக்கள் ஒரு பிறையின் அடிப்படையிலும், மேற்கு ஜேர்மன் மக்கள் ஒரு பிறையின் அடிப்படையிலும் தமது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்திருப்பார்கள். ஆரம்பத்தில் இரு வேறுபட்ட பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்தவர்கள் அரசியல் மாற்றத்தின் காரணமாக ஒரு பிறையின் அடிப்படையில் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசியல் மாற்றம் அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மாற்றியமைக்குமா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவ்வாறான நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக காணப்படுகின்றன. இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் அனைத்திற்கும் சர்வதேசப் பிறை ஒன்றே தீர்வு சொல்லக் கூடியது. மேலும், நாடுகளின், மாகாணங்களின், பிரதேங்களின் எல்லைகள் அழ்ழாஹ்வாலோ, அவனது தூதர் (ஸல்) அவர்களாலோ வகுத்து தரப்பட்டது கிடையாது. மாறாக, நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். எனவே, நிர்வாக எல்லைகளைக் காரணம் காட்டி பிறைத் தகவலை நிராகரிக்க முடியாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இற்றைக்கு சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று, இறந்துவிட்டால் சென்றவர்கள் திரும்பி வந்து சொன்ன பின்புதான் இறந்தவருடைய மனைவி இத்தா இருக்கும் நிலை காணப்பட்டது. அதே போன்று தகவற் தொழிநுட்ப வளர்ச்சி குன்றியிருந்த காலத்தில் காத்தான்குடியில் காணப்பட்ட பிறைத் தகவல் கொழும்புக்கோ, திருகோணமலைக்கோ தெரிய வாய்ப்பிருக்கவில்லை. எனவே, காத்தான்குடியில் ஒரு தினத்திலும், திருகோணமலையில் வேறொரு தினத்திலும், கொழும்பில் மற்றொரு தினத்திலம் நோன்பு நோற்கும் நிலையே காணப்பட்டது. பின்பு ஏற்பட்ட தகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக முழு இலங்கையிலும் ஒரே தினத்தில் நோன்பு நோற்க கூடிய நிலை காணப்பட்டது. (அதிலும் அடிக்கடி பாரிய தவறுகள் இடம்பெறாமலில்லை. குறிப்பாக, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் எனக் கூறுபவர்கள் கடந்த 2005 ல் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் நோன்பு நோற்றமை குறிப்பிடத்தக்கது.)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஹஜ்ஜுக்காக சென்ற கணவன் இறந்த தகவல் இன்றைய நவீன தொடர்பு சாதனங்களினூடாக இறந்தவருடைய மனைவிக்கு தெரியப்படுத்தப்படுகையில் இறந்தவருடைய மனைவி ஆரம்பகால நடைமுறையை காரணம் காட்டி தகவலை நிராகரிப்பது எவ்வளவு தவறோ, அதே போன்றுதான் ஆரம்பகால நிலமையை காரணம் காட்டி கொழும்புத் தகவலை காத்தான்குடியிலோ ஏனைய ஊர்களிலோ உள்ள மக்கள் நிராகரிப்பது தவறாகும்?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதே போன்று தவறான மற்றொரு வாதம்தான் இன்று தகவல்; தொழிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சியை நிராகரித்துவிட்டு, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என எவ்வித வரையறைகளுமின்றி பொதுவாக கட்டளையிட்டிருக்க, அவ்விரு சாட்சிகளும் எங்கள் நாட்டிற்குள் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வோம் எனவும், நீதமான, நம்பகமான முஸ்லிம்களாக இருந்தாலும் எங்கள் நாட்டிற்கு வெளியில் இருந்தால் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என வாதிடுவது ஆகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலகின் எப்பாகத்தில் இருந்தேனும் பிறை தென்பட்டால் அதுவே குறித்த மாதத்திற்கான தலைப்பிறையாகும். இப்பூகோள அமைப்பில் நேரங்கள் மாத்திரம்தான் வித்தியாசப்படுமே தவிர, ஒரு போதும் நாள் வித்தியாசப்படாது. எனவே, உலகின் எப்பகுதியில் இருந்து தகவல் கிடைத்தாலும் அதனை ஏற்று செயற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது. மாறாக, மனோ இச்சையின் அடிப்படையில் புறக்கணிப்போமாயின் இறைவனிடத்தில் குற்றவாளியாக நேரிடும். இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இருநாட்களும் நோன்பு நோற்பதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எனவே, இது வரை நாம் பார்த்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலும், நடைமுறை சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையிலும் தலைப்பிறை என்பது உலகளாவிய மக்கள் அனைவருக்கும் ஒரே பிறைதான் என்பதனை மிகத் தெளிவாக அறிந்து கொண்டோம். பிறை கண்ட சாட்சியம் இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் மூலம் ஆதாரப்பூர்வமாக எமக்கு கிடைக்கையில், இஸ்லாம் தலைப்பிறையின் மூலம்; விரும்புகின்ற உலகளாவிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முன்வர வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இறுதியாக, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய வழிமுறையில் எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள அருளாளன் அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!</div></div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-89237326251247557852010-08-08T06:08:00.000-07:002010-08-08T06:08:17.174-07:00சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும்<div style="text-align: justify;">சர்வதேசப் பிறை விடயத்தில், அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை விடுத்து, பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களான இஹ்வானிகளும், தனிமனிதர்களை கண்மூடிப் பின்பற்றும் தப்லீக்வாதிகளும், மார்க்கத்தை விட்டு வெளியேறிய கப்றுவணங்கிகளும் தவ்ஹீத்வாதிகளை மிகப்பெரும் பாவிகளாக சித்தரித்து வந்த காலம் சென்று, தவ்ஹீத்வாதிகள் என அறியப்படுகின்ற சில சகோதரர்கள் சர்வதேசப் பிறையை சரிகண்டவர்களை மிகத்தாறுமாறாக விமர்சிக்கின்ற நிலமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div> </div><div style="text-align: justify;">மத்ஹபுவாதிகளையும், மன்ஹஜே (சரியான கொள்கை) இல்லாதவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட சபைகளை நாங்கள் நிராகரித்து சர்வதேசப்பிறையை சரிகண்டமையால் நாம் எதிர்நோக்கிய மிகப்பெரும் விமர்சனம் ‘ஹவாரிஜ்கள்’ (இஸ்லாத்தில் முதன் முதலில் கிளரச்சி செய்து வெளியேறியவர்கள்) என்பதாகும். மேலும், அறிவீனர்கள், மனோஇச்சைக்காரர்கள் போன்ற விமர்சனங்களையும் எதிர்நோக்கினோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஆனாலும், தாம் அடையப்போகும் (?) இஸ்லாமிய கிலாபத்திற்கு உகந்ததது சர்வதேசப்பிறைதான் என யூசுப் கர்ழாவி போன்றோர் வலியுறுத்தியும், மத்ஹபு நூற்களில் சர்வதேசப்பிறைக்கு சாதகமான கருத்துக்கள் நிறைந்திருந்தும், தான் அடைய விரும்புவது கணிப்பு அடிப்படையிலான பிறை அல்லது பிராந்தியப் பிறை என்றிருந்தும் தங்களுக்குள் ஆயிரமாயிரம் முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஸுன்னா வலியுறுத்துகின்ற சர்வதேசப் பிறையை மறுப்பதுதான் முழுமையான மனோ இச்சையாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவர்கள் தமக்குள் பாரிய கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தும் தேசியப்பிறையென எவ்வித அடிப்படையுமற்ற பிறையையே முன்னிலைப்படுத்துகின்றனர். தனிப்பட்ட முறைகளில் கேட்டுப்பார்த்தால் அவர்களது உண்மைநிலை புலப்படும். இங்கு எம்மோடு உடன்பாடான, அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே எமது கொள்கை என்ற நிலைப்பாட்டில் உள்ள சில சகோதரர்களும் சர்வதேசப்பிறையை விமர்சிக்கின்றனர். அவ்வாறு விமர்சிக்கும் போது ஒரு தடவை ஊருக்கு ஊர் பிறை என்றும், ஒரு தடவை மாநிலத்திற்கோர் பிறை என்றும், மற்றோர் தடவை நாட்டுக்கு ஓர் பிறை என்றும், தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றனர். எனவே, மாற்றுக் கருத்துள்ள நமது சகோதரர்கள் முன்வைக்க கூடிய முக்கியமான சில விமர்சனங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><span style="color: red;"><strong>வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்காலாமா?</strong></span><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><strong><br />
‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.</strong> (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தூர, பிரதேச, கால எல்லைகளைக் கருத்திற் கொள்ளாது பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்பதற்கு மேலுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியும் ஒரு ஆதாரமாகும். ஆனால், அண்மை காலத்தில் மேலுள்ள நபிமொழியிலிருந்து சில தவறான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதன் உண்மை நிலை தொடர்பாக நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;"><strong>விமர்சனம்:</strong></span> வாகனக் கூட்டத்தினர் தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதனால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அவர்களது தொழும் திடலுக்கு மறுநாள் செல்லுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகின்றது. பிறை பார்த்தவர்களுக்குதான் அந்த கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த ஊர் மக்களுக்கு அல்ல!</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;"><strong>விளக்கம்:</strong></span> குறித்த நபிமொழியில் வாகனக் கூட்டத்தினர் நோன்பு நோற்றதாக கிடையவே கிடையாது. மேலும், நோன்பு நோற்றிருந்தவர்களையே நோன்பை விடுமாறு ஏவ வேண்டும். வாகனக் கூட்டத்தினர் நோன்பு நோற்றிருந்தார்கள் என்பது நமது யூகமே அன்றி வேறில்லை. வாகனக் கூட்டத்தினரிடம் அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்றுள்ளீர்களா? என வினவவுமில்லை. மாறாக, நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என வாகனக் கூட்டத்தினர் கூறவுமில்லை. இவ்வாறான நிலையில் நபிகளார் நோன்பை விடுமாறு கட்டளையிட்டது வாகனக் கூட்டத்தினருக்கே என வாதிடுவது தவறான வாதமாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அடுத்து, வாகனக் கூட்டத்தினர் மார்க்கத் தீர்ப்பு பெற வந்ததாக நபிமொழியில் இடம் பெறவில்லை. மாறாக, பிறை பார்த்ததாக சாட்சியமளிக்கவே வருகை தந்துள்ளதாக குறித்த நபிமொழி கூறுகின்றது. மேலும், ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 1909) என்கின்ற நபிமொழியின் முற்பகுதியை அறிந்தவர்கள், அதன்படி நோன்பு நோற்றவர்கள், அதன் பிற்பகுதியை அறியவில்லை எனவும், நோன்பு நோற்றுக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக வந்தனர் என்பதும் ஏற்புடைய வாதமல்ல.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், குறித்த நபிமொழியானது ‘நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்’ என்று ‘தன்மை’ நிலையில் ஆரம்பிக்கின்றது. ‘நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்’ என்று வாகனக் கூட்டத்தினரும் ‘தன்மை’யில் பதிலளிக்கின்றார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்விரு சாராரையும் இணைத்து, அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என பொதுவாக நபிமொழி குறிப்பிடுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இதனை இன்னும் சற்று விரிவாக நோக்குவோமாயின், ஒரு விடயத்தை ஆரம்பத்தில் தன்மையில் கூறிவிட்டு பின்னர், முன்னிலையிலோ, படர்க்கையிலோ கூறுகின்ற வழக்கம் பொதுவாக எல்லா மொழி நடைகளிலும் உண்டு. இதனை அருள் மறைக்குர்ஆனிலும் காண முடியும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி ‘இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்’ என்று அழ்ழாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.’ (அல்குர்ஆன் 10:22)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள அருள்மறை வசனத்தில் ‘முன்னிலை’யில் குறிப்பிடப்பட்டுள்ள ‘நீங்கள்;’ என்பது யாரைக் குறிப்பிடுகின்றது? ‘அவர்களை’ என்று ‘படர்க்கை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது யாரைக் குறிப்பிடுகின்றது. இரண்டும் ஒரே சாராரையே குறிப்பிடுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதனைப் போன்றே மேலுள்ள நபிமொழியில் அறிவிப்பாளர் அபூஉமைர் (ரஹ்) கூறுகையில், எனது சிறிய தந்நை எனக்கு சொன்னார் என்று ஆரம்பிக்கின்றார். அறிவிப்பாளர் அபூஉமைர் (ரஹ்), ‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்.’ என்று இங்கு குறிப்பிடுவது நபித்தோழர்களை ஆகும். அதே போன்று அறிவிப்பாளர் ‘அவர்களது நோன்பை விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்கள்’ என்று குறிப்பிடுவது நோன்பு நோற்றிருந்தவர்கள் அனைவரையும் என்பதையும், ‘அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்பது அனைத்து மக்களையுமே குறிப்பிடுகின்றது என்பதனையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், குறித்த நபிமொழியானது பிறைத் தகவல் உலகின் எப்பாகத்தில் இருந்து வந்தாலும் தூர, பிரதேச வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது தகவலை எற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. சாட்சியமளித்த வாகனக் கூட்டத்தினரிடம் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று விசாரிக்காது அவர்களது சாட்சியத்தை ஏற்று நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிடுகின்றார்கள். நேற்று மாலை பிறைபார்த்த வாகனக் கூட்டத்தினர் மறுநாள் பகலின் கடைசி நேரத்தில் அதாவது சுமார் 20 மணி நேரத்தின் பின்னர் வந்து சாட்சியமளிக்கின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நோன்பு திறக்க சில மணி நேரங்களே இருக்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். எனவே, இந்நபிமொழியானது உலகின் எப்பாகத்திலிருந்து தகவல் கிடைத்தாலும் அதனை ஏற்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஏற்று அமுல்படுத்த வேண்டும்; என்கின்ற சர்வதேசப் பிறைக்கே வலுவான ஆதாரமாக அமைகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;"><strong>சிரியாவில் பிறை பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாதா?</strong></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘<strong>உம்மு ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்த போது ரமழான (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.</strong></div><div style="text-align: justify;"><strong><br />
</strong></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><strong>பிறகு அந்த (ரமழான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது ‘நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்.’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீயே அதைக் கண்டாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்.’ என்ற கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள், ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமழான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறைiயைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான், ‘முஆவியா( ரழி) அவர்கள் (முதல் கண்டு), நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?’ என்று கேட்டேன்.அதற்கு, ‘இல்லை. இப்படித்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ என்று பதிலளித்தார்கள்.’ </strong>(அறிவிப்பவர்: குறைப் பின் அபீ முஸ்லிம் (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1983)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என வாதிடுகின்ற மார்க்க அறிஞர்களும், ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என வாதிடுகின்ற மார்க்க அறிஞர்களும் எடுத்து வைக்கின்ற பிரதான ஆதாரம் மேலுள்ள நபிமொழியேயாகும். இதன் உண்மை நிலை தொடர்பாக நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;"><strong>விமர்சனம்:</strong> </span>தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் (ரஹ்) கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரழி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள். எனவே, சிரியாவில் பார்த்த பிறை மதீனாவிற்குப் பொருந்தாது என வாதிடுகின்றனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><strong><span style="color: blue;">விளக்கம்:</span> </strong>மேற்படி நபிமொழியை ஆதாரமாகக் காட்டக் கூடியவர்கள் ஒருபோதும் இதனை நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில், குறித்த சம்பவம் இடம் பெற்ற காலப்பகுதியில் ஷாமும் (சிரியா), மதீனாவும் ஒரே ஆட்சியின் கீழ், ஒரு நாட்டின் இரு மாகாணங்களாகவே காணப்பட்டன. எனவே, மேற்குறித்த நபிமொழியில் இருந்து சட்டம் எடுப்பதாக இருந்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு பிறை, மேல் மாகாணத்திற்கு ஒரு பிறை, வட மாகாணத்திற்கு ஒரு பிறை என்றுதான் சட்டம் வகுக்க முடியும். மாறாக, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஒரு போதும் மேலுள்ள நபிமொழி ஆதாரமாக அமைய முடியாது என்பதனை மனதில் இருத்தியவர்களாக குறித்த செய்தியின் விளக்கத்தினை நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளும் மாத்திரமே ஆகும். அதற்கு மாற்றமாக கண்ணியமிகு நபித்தோழர்களின் சுய ஆய்வுகளாக இருந்தாலும் அது ஒரு போதும் இஸ்லாத்தின் சட்ட மூலாதாரமாக அமைய முடியாது. அழ்ழாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட வஹியை மாத்திரமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!’ (அல்குர்ஆன் 06:106) மேலும் பார்க்க: (அல்குர்ஆன் 02:38,24:51, 24:54,03:31,08:46,06:153,04:59, 33:36, 05:030)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div class="ii gt" id=":yt" style="text-align: justify;">மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்களுக்கு, அவர்களது செயற்பாடுகள் விளக்கமாக அமையும். </div><div class="ii gt" id=":yt" style="text-align: justify;"> </div><div class="ii gt" id=":yt" style="text-align: justify;">உதாரணமாக, ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அழ்ழாஹ்வின் தூதரே! இரவு தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 1137) <br />
<br />
மேலுள்ள நபிமொழியில் இரண்டிரண்டாக தொழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது பதினொறு ரக்அத்களை இரண்டிரண்டாக தொழுவதையே என்பதற்கு கீழுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடு விளக்கமாக அமைகின்றது.<br />
<br />
‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)<br />
<br />
இது போன்றே ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்று கூறிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் தகவல் எங்கிருந்து வந்தாலும் தூர, பிரதேச வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது ஏற்க வேண்டுமென தெளிவுபடுத்துகின்றன.<br />
<br />
இப்போது குரைப் (றஹ்) அவர்களின் செய்தியை நோக்குவோம். ‘இல்லை. இப்படித்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘இப்படித்தான்’ என்கின்ற சொல் எங்கு நோக்கி மீள்கின்றது என்று சற்று நுணுக்கமாக நோக்குவோமாயின், இப்படித்தான் என்கின்ற சொல் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறிய, ‘நாங்கள் (ரமழான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறைiயைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’ என்கின்ற வசனத்தை நோக்கியே மீள்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
அதாவது, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909) என்கின்ற நபிமொழியை எடுத்துக்கூறி,<br />
<br />
‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்கின்ற நபிமொழியை தனது ஆய்வின் அடிப்படையில் மறுத்து விடுகிறார்கள்.<br />
<br />
இப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையான வஹியை ஏற்பதா? அல்லது கண்ணியமிகு நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஆய்வின் முடிவை எடுப்பதா? என்ற வினாவிற்கு வஹியை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என அருளாளன் அழ்ழாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான்.<br />
<br />
மேலும், பிறைத் தகவல் ரமழானின் இறுதிப் பகுதியிலேயே கிடைக்கின்றது. நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களும் ஷாம் வாசிகளும் அடுத்த பிறையைப் பார்த்து மாத நாட்களின் எண்ணிக்கையை 29 ஆக பூர்த்தி செய்து விட்டு பெருநாள் கொண்டாடினால், ஒரு நாள் பிந்தி பிறை பார்த்தவர்கள் 28 நாட்களில் மாதத்தை நிறைவு செய்ய வேண்டி ஏற்படும் என்பதனால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 1909) என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு குரைப் (ரஹ்) அவர்களின் தகவலை நிராகரித்திருக்கலாம்.<br />
<br />
அல்லது, குறித்த ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்கின்ற நபிமொழி நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கிடைக்காது இருந்திருக்கலாம். இதனையும் நாம் சுய யூகத்தின் அடிப்படையிலோ, கற்பனையிலோ கூறவில்லை. மாறாக, நபிமொழிகளை ஆய்வு செய்கையில் இத்தகைய முடிவுக்கே ஒருவர் வர முடியும். ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு 13 வயது ஆகும். உஹது யுத்தம் நடைபெற்ற போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 05 வயது சிறுவர்களாயிருந்தார்கள். உஹது யுத்தத்தில் கலந்து கொள்ளாத நபித்தோழர் அவர்கள் உஹது யுத்தம் தொடர்பான பல செய்திகளை அறிவித்துள்ளார்கள். அதாவது குறித்த செய்திகளை உஹது யுத்தத்தில் கலந்து கொண்ட மூத்த நபித்தோழர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். மேலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து கேட்ட நபிமொழிகளில் இருந்து ஆய்வு செய்வார்கள். எனவே, குறித்த செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தெரியாதிருக்கலாம் அல்லது தமது ஆய்வின் அடிப்படையில் குரைப் (ரஹ்) அவர்களின் தகவலினை நிராகரித்திருக்கலாம்.<br />
மேலும், மனிதர்கள் என்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கு பல்வேறு செய்திகள் கிடைக்காதிருந்திருக்கின்றது என்பதனை பின்வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றது.<br />
<br />
<strong> <span style="color: blue;">அனுமதி கோருதல்</span></strong><br />
<br />
</div><div style="text-align: justify;"> </div><div class="ii gt" style="text-align: justify;">‘உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள் உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்! என்றார்கள். அவர் திரும்பிச் சென்றுவிட்டார்! என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூசா (ரலி) அவர்கள், இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்! எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்! எனக் கேட்டார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், நம்மில் இளையவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்ல மாட்டார்கள்! என்றனர். அபூமூசா (ரலி) அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்துகொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்! என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: உபைத் பின் உமைர் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி 2062,6245) </div><div class="ii gt" style="text-align: justify;">அனுமதி கோருதல் மூன்று தடவை என்கின்ற சட்டம் மனிதன் என்ற ரீதியில் கண்ணியமிகு நபித்தோழர் உமர் (ரலி) அவர்களுக்கு தெரியாதிருந்திருக்கின்றது. மேலும், ‘(வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்துகொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!’ என்று அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.<br />
<br />
<span style="color: blue;"><strong>அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணம் </strong></span><br />
<br />
(நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரழி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரழி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரழி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரழி) பக்கமிருந்து அபூபக்ர் (ரழி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக, முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக, அழ்ழாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான். மேலும், அழ்ழாஹ் கூறுகிறான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அழ்ழாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அழ்ழாஹ் கூலி வழங்குவான்.(அல்குர்ஆன்-3:144) என்றார்கள். அழ்ழாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அழ்ழாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்துகொண்டதைப் போலவும் அஙகிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1242,,3670)<br />
<br />
இது போன்று மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் மிகப்பெரும் நபித்தோழர்களுக்கு கூட பல்வேறு செய்திகள் கிடைக்காதிருந்திருக்கின்றன என்பதை நபிமொழிக் கிரந்தங்களில் காணக்கிடைக்கின்றன. மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.<br />
<br />
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். 1.அழ்ழாஹ்வின் வேதம் 2. அவனது தூதர் (ஸல்) அவர்களது வழி முறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்:ஹாகிம் 318)<br />
<br />
இப்போது பிறை தொடர்பான அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயரிய வழிகாட்டலை நோக்குகையில் ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்.நோன்பை விடுங்கள்.’ என்று கூறிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூர, பிரதேச எல்லைகளை பொருட்படுத்தாது பிறைத் தகவலை ஏற்று அமுல்படுத்தியுள்ளயார்கள்.<br />
<br />
‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று <span style="color: red;">சாட்சி</span> கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)<br />
<br />
<span style="color: red;"><strong>ரமழானை அடைவது…</strong></span><br />
<br />
<br />
‘இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.’ (அல்குர்ஆன் 02:185)<br />
<br />
<strong><span style="color: blue;">விமர்சனம்:</span> </strong>உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.<br />
<br />
<span style="color: blue;"><strong>விளக்கம்:</strong></span> மேற்படி அருள்மறை வசனத்தில் ‘ ஃபமன் ஷஹித’ ‘யார் அம்மாதத்தை அடைகிறாரோ’ என்று இறைவன் கூறுவதனால் ரமழான் மாதத்தை அடையாதோரும் இருப்பார்கள் என வாதிடுகின்றனர். இதனை இலகுவாக ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.<br />
<br />
உதாரணமாக, கட்டார் நாட்டில் மாலை 6.30 மணிக்கு தலைப்பிறை தென்படுமாயின், தலைப்பிறையை கண்ட கட்டார் முதலில் ரமழானை அடைகின்றது. தகவல் கிடைக்காத யாரும் உலகில் அப்போது ரமழானை அடையவில்லை. தகவல் கிடைக்கும் போது உலகில் யாரெல்லாம் ஷஃபானை 29 ஆக பூர்த்தி செய்துள்ளார்களோ அவர்கள் இப்போது ரமழானை அடைவார்கள்.<br />
<br />
கட்டாரில் மாலை 6.30 மணிக்கு தலைப்பிறை தென்படுகையில், இலங்கையர்களாகிய நாம் இரவு 9.00 மணியில் இருப்போம். இப்போது கட்டாரில் இருந்து இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால் நாம் ரமழானை அடைவோம். அதாவது: முதலில் கட்டார் மாதத்தை அடைகின்றது. தகவல் கிடைத்தன் பிற்பாடு நாம் மாதத்தை அடைகின்றோம்.<br />
<br />
மேலும், பிறை கண்டு மாதத்தை அடைந்தவர்கள் உடனடியாக நோன்பை ஆரம்பிப்பதில்லை. மாலை 6.30 மணிக்கு பிறை தென்பட்டாலும் கிட்டத்தட்ட சுமார் 10 மணிநேரத்தின் பின்பே நோன்பை ஆரம்பிக்கின்றோம். அவ்வாறாயின் பிறை கண்ட நேரத்திற்கும் ஸஹரிற்கும் இடைப்பட்ட நீண்ட நேரத்தின் அர்த்தம் என்ன?<br />
<br />
</div><div style="text-align: justify;"> </div><div class="ii gt" style="text-align: justify;">பிறைத் தகவலை ஏனையோரும் ஏற்று மாதத்தை ஆரம்பிப்பதற்காகவே இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.<br />
<strong><br />
<span style="color: red;"> சர்வதேசப் பிறை நடைமுறைச் சாத்தியமற்றதா?</span></strong><br />
<strong><br />
<span style="color: blue;">விமர்சனம்:</span></strong> சவூதியில் மாலை 7.00 மணியாக இருக்கும் போது அங்காரா (அமெரிக்கா) பிரதேசத்தார் காலை 7.00 மணியை அடைந்திருப்பார்கள். அதாவது, இவர்கள் ரமழானின் முதல் நாள் பகலை அடைந்து விட்டனர். இவர்கள் என்ன செய்வது? எனவே, சர்வதேசப் பிறை நடைமுறைச் சாத்தியமற்றதாகி விடுகின்றதே என ஒரு வாதத்தினை முன் வைக்கின்றனர். </div><div class="ii gt" style="text-align: justify;"> </div><div class="ii gt" style="text-align: justify;"><span style="color: blue;"><strong>விளக்கம்:</strong></span> இப்பூமியின் சுழற்சியின் அடிப்படையில் இந்த நேர வித்தியாசம் உலகம் முழுவதும் இரவு 12 மணி நேரம், பகல் 12 மணி நேரம் ஆக மொத்தத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் அதாவது: ஒரு நாளிற்கு மேல் செல்லாது. எனவே, மாற்றுக் கருத்துள்ளவர்களின் வாதத்தின் அடிப்படையில் மிக கூடிய நேரமான 12 மணி நேரத்திற்கு பிறைத் தகவலை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு வஹியின் ஒளியில் தீர்வைக் கண்டுவிட்டால் 12 மணி நேரத்திற்கு குறைந்த நேரத்தில் தகவலை ஏற்று செயற்படுத்துவது மிக இலகுவான, நடைமுறைச் சாத்தியமான விடயமாகிவிடும்.<br />
<br />
இதற்கும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியில் எமக்கு மிக அழகிய வழிகாட்டல் கிடைக்கின்றது. ரமழான் நோன்பு கடமையான நோன்பாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர், ஆரம்பத்தில் ஆஷுரா நோன்பானது கடமையான நோன்பாகக் காணப்பட்டது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஆஷுரா நோன்பை விரும்பியவர் நோற்கவும், விரும்பியவர் நோற்காதிருக்கவும் செய்யலாம் என்கின்ற இறைகட்டளை விதிக்கப்படுகின்றது.<br />
<br />
‘ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (ஆஷுரா நாள்) அன்று நோன்பு நோற்குமாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள். ரழமான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் நாடியவர் ஆஷுரா நாளன்று நோன்பு நோற்றனர். நாடியவர் (அதை) விட்டு விட்டனர்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2070)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ‘நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘இது ஒரு மகத்தான நாள். இந்த நாளில்தான் மூஸாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.’ என்று கூறினர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களை விட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்.’ என்று கூறினார்கள். பின்னர், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2083)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளன்று ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும். சாப்பிட்டு விட்டவர், இரவு வரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்’ என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸலமா பின்த் அல்அக்வஉ (ரலி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2090)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும்- அழ்ழாஹ் நாடினால்- நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது, கம்பளியிலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விiளாட்டுப் பொருளைக் கொடுப்போம்.’ (அறிவிப்பவர்: ருவய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2091)<br />
<br />
மேலுள்ள நபிமொழிகளிலிருந்து ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் ஆஷுரா நோன்பு கடமையான நோன்பாக இருந்தது. ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிடுகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று கட்டளையிடுகின்றார்கள்.<br />
<br />
பின்னர், ஆஷுரா நோன்பு கடமையான நோன்பு என்பதிலிருந்து, விரும்பியவர் நோன்பு நோற்கலாம். நாடியவர் (அதை) விட்டு விடலாம் என கட்டளை விதிக்கப்பட்டு, ரமழான் நோன்பு கடமையான நோன்பாக்கப்படுகின்றது.<br />
<br />
</div><div style="text-align: justify;"> </div><div class="ii gt" style="text-align: justify;">எனவே, மேலுள்ள நபிமொழிகளிலிருந்து, இருபத்தொன்பதாம் நோன்பை நிறைவு செய்திருப்பவர்களுக்கு, மறுநாள் பகல் வேளையில் தகவல் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சிய பகுதியை நோன்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே, அந்த வகையிலும் சர்வதேசப் பிறைய நடைமுறைச் சாத்தியமானது என்பது தெளிவாகின்றது. <br />
<span style="color: red;"><strong>கிராமத் தகவலும் நகரத் தகவலும் </strong></span><br />
‘<br />
ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்-2339, அஹ்மத்-18844)<br />
<br />
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)<br />
<br />
<span style="color: blue;"><strong>விமர்சனம்:</strong></span> குக்கிராமத்து பிறை என்பதினால்தான் ‘கிராமப்புறத்து அரபிகள்’ என்று நபிமொழியில் வந்துள்ளது. உண்மையில் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை ஏற்பவர்கள் என்றால் எப்படி இவ்வார்த்தையை உங்களுக்கு ஏற்றவாறு திருப்புவீர்கள் என வாதிடுகின்றனர்.<br />
<br />
<span style="color: blue;"><strong>விளக்கம்: </strong></span>சர்வதேசப் பிறையை மறுக்கின்ற பலர் இவ்வாதத்தையே முன்வைக்கின்றனர். இவ்வாதத்தை சர்வதேசப் பிறைக்கு எதிராக முன்வைக்க கூடிய சகோதரர்கள் இவ்வாதம் உள்நாட்டுப் பிறைக்கும் எதிரானது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கிராமவாசிகள் வந்து தகவல் சொன்னதால் நகரங்களை அண்டியுள்ள கிராமப்புறங்களையே குறிக்கும் என வாதிடுகின்றனர். குறித்த நபிமொழிகளில்; ‘கிராமங்களிலிருந்து’ வரும் தகவலை மாத்திரம்தான் ஏற்க வேண்டும் என கட்டளையிடப்படவில்லை. மாறாக, ‘வரும் பிறைத் தகவலை ஏற்கலாம்’ என்கின்ற செய்தியே குறிப்பிடப்படுகின்றது. மேலும் செய்தியைக் கொண்டு வந்தவர்களை அடையாளங்காட்டுவதற்காகத்தான் ‘கிராமவாசிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் செய்தியைக் கொண்டு வந்தவர்கள் கிராமவாசிகள். மேலும், அபூதாவுத், அஹ்மத், தாரகுத்னி போன்ற நபிமொழிக் கிரந்தங்களில் ‘கிராமப்புறத்தவர்களின் தகவல்’ என்று இடம் பெறும் அறிவிப்புக்களை பின்வரும் நபிமொழி தெளிவாக விளக்குகின்றது.<br />
‘<br />
பிறையைப் பார்த்து நோன்பு வையுஙகள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (ரழி), நூல்: நஸயி-2116)<br />
<br />
எனவே, சில நபிமொழிகளில் اعرابي கிராமப்புறத்து மனிதர்கள் என இடம்பெற்றிருப்பது தகவல் கொண்டு வந்தவர்களை அடையாளம் காண்பிப்பதற்காகவே இடம்பெற்றுள்ளது. இதனைய<br />
</div><div style="text-align: justify;"> </div><div class="ii gt" style="text-align: justify;">ما خرج مخرج الغالب فلا مفهوم له என்கின்ற ‘ஆதாரத்திலே கூறப்பட்ட விடயங்களோடு, கூறப்படாத விடயங்கள் இணைக்கப்படமாட்டாது’ என்ற விதியும் உறுதி செய்கின்றது. இதனை அல்குர்ஆன் 4:23 வசனம் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். மேற்படி வசனத்தில் திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்டவர்களைப் பற்றிக் கூறிக்கொண்டு வருகின்ற இறைவன், ‘நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள்’ என்று குறிப்பிடுகின்றான். முன்னர் செய்த திருமணத்தின் மூலம் பெறப்பட்ட பெண் குழந்தைகள் தமது பொறுப்பில் இல்லாவிட்டால் கூட அவர்களை திருமணம் செய்யக்கூடாது என்பதுவே இஸ்லாமிய சட்டமாகும். அதே போன்றுதான் நபிமொழியில் இடம்பெற்றுள்ள ‘கிராமப்புறத்து மனிதர்’ என்கின்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். </div><div class="ii gt" style="text-align: justify;"><br />
மேலும், 4 சதுரகிலோமீற்றர் அல்லது 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட கிராமத்தகவல் 100 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட நகரத்தவர்களைக் கட்டுப்படுத்தும் என்றால், 100 சதுர கிலோமீற்றர் நகரத்தின் தகவல் ஒரு நாட்டை கட்டுப்படுத்தாதா? ஒரு நாட்டின் தகவல் முழு உலகையும் கட்டுப்படுத்தாதா? ஏனெனில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்று பொதுவாகத்தானே கட்டளையிட்டுள்ளார்கள்.<br />
<br />
மேலும், நாம் ஏலவே, ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு நபிமொழிகளை அணுகுவதாலேயே இவ்வாறான விபரீதமான நிலைப்பாடுகளை எடுக்க நேரிடுகின்றது. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஏனைய பொன்மொழிகளையும் இணைத்து நோக்குகையில் கிராமத் தகவல், நகரத் தகவல் என பாகுபடுத்தாது தகவல் எங்கிருந்து வந்தாலும் அதனை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று அமுல்படுத்த வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம்.<br />
<span style="color: blue;"><br />
</span><strong><span style="color: blue;">விமர்சனம்:</span> </strong>அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வித வெளித்தகவலையும் பெற முயற்சிக்கவில்லை என்று கூறக்கூடிய சகோதரர்கள், நீங்கள் தொழிநுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் பின்னர்தானே இவ்வாறு செயற்படுகின்றீர்கள். அவ்வாறெனில், முன்னொரு காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த பிறையையா இப்போது நடைமுறைப்படுத்துகின்றீர்கள்? தொலைபேசி மற்றும் ஏனைய தொழிநுட்ப வசதி இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் என வாதிடுகின்றனர்.<br />
<br />
<strong><span style="color: blue;">விளக்கம்:</span> </strong>அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வித வெளித் தகவல்களையும் பெற முயற்சிக்கவில்லை எனக் கூறினால் பிறை கண்டவர்கள் தகவல் சொல்வது என்பது வீணாகிப் போகின்றது. அவ்வாறு வீணான விடயத்தை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏவமாட்டார்கள். வெளிநாட்டுத் தகவலைப் பெற முயற்சிக்க கூடாது எனக்கூறுவோரே உண்மையில் அம்முயற்சியை எடுக்கின்றனர். இரவு 08.30 மணிவரை ‘கௌன்டர்’ திறந்திருக்கும். எம்மாவட்டத்திலாவது பிறை கண்டால் குறித்த இலக்கத்திற்கு தகவல் சொல்லுங்கள் என்று கூறுவோர் நாங்களா? நீங்களா? என்பதை சிந்திக்க வேண்டும். சிறிய நாடுகளுக்கு நிகரான ஒரு மாநிலத்திற்கு ஒரு பிறையைப் பிரகடனம் செய்து கொண்டு பல நூறு கி.மீ.களுக்கு அப்பால் தகவல் பெறுவது மட்டும் எந்தவகையில் நியாயம்? கருத்தில் உறுதியானவர்கள் என்றால் நீங்கள் அந்தந்த ஊர்களோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டாமா?<br />
<br />
<span style="color: blue;"><strong>விமர்சனம்:</strong></span> ‘உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்!’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள போது, சர்வதேச ரீதியில் தகவலை அறிய முற்பட்டால் இந்நபிமொழிக்கு வேலையில்லாமல் போய்விடுகின்றது என வாதிடுகின்றனர்.<br />
<br />
<span style="color: blue;"><strong>விளக்கம்:</strong></span> இந்த நபிமொழியைத் தவறாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே இவ்வினா எழுகிறது. மேலும், தலைப்பிறை தென்படும் நேரம், தோன்றும் பிரதேசம், வெற்றுக்கண்களுக்கு தென்படும் நேரம் போன்ற விடயங்களை முன்கூட்டியே கணித்து அதன் அடிப்படையில் செயற்படுபவர்கள் இவ்வாதத்தினை முன்வைப்பதானது ஆச்சரியமானது. அடுத்து, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுஙகள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909) என்ற நபிமொழியானது பிறை தென்படும் இடமெல்லாம் மேகமூட்டம் காணப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. மாறாக, முதன் முதலில் எங்கு பிறை தென்பட வேண்டுமென இறைவன் நாடியுள்ளானோ அங்கு மேகமூட்டமாய் இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்வதையே குறிக்கின்றது.<br />
<br />
<strong><span style="color: blue;">விமர்சனம்:</span> </strong>இன்று சர்வதேச ரீதியாக தகவல் மூலம் நீங்கள் பெற முயற்சிக்கும் பிறையானது நாளையோ, அல்லது மறுதினமோ உங்கள் பகுதிக்கு தெரியுமல்லவா? இவ்வாறிருக்கையில் முந்திக் கொண்டு நீங்கள் பிறைத் தகவலைப் பெறுவது உங்களை நோக்கி நாளை வரும் பேரூந்தை நேற்றோ, இன்றோ துரத்திச் சென்று பிடிப்பது போன்றல்லவா உள்ளது என வாதிடுகின்றனர்.<br />
<br />
<strong><span style="color: blue;">விளக்கம்:</span> </strong>இவ்வாதத்தினை முன்வைக்க கூடிய சகோதரர்கள் முதலில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். (உங்களது வாதத்தின் அடிப்படையில்) இலங்கையின் வடமாகாணத்தில் இன்று தென்படுகின்ற பிறை மறுநாள் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென்மாகாணத்தில் தோன்றும் வரை காத்திருக்கலாமே. அவ்வாறு தென்படாத பட்சத்தில் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து விட்டு நோன்பு நோற்கலாம் அல்லது பெருநாள் கொண்டாடலாம். நூறு அல்லது நூற்றி ஐம்பது கி.மீற்றர்களுக்கு நாம் ஏன் முந்திக் கொண்டு அவசரப்பட வேண்டும். நாளை தோன்றினால் அப்பகுதி மக்கள் நோன்பு நோற்பார்கள்தானே! அல்லது நீங்கள் நபிமொழியை பின்பற்றுவதாக இருந்தால் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் என வரையறைகளை விதிக்காது, நபிமொழிகளின் அடிப்படையில் நிரூபணமான சர்வதேசப் பிறையை பின்பற்றுங்கள். மாறாக, தகவல் பெறுவதற்கு வரையறைகளை விதித்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.<br />
<br />
<strong><span style="color: blue;">விமர்சனம்:</span> </strong>தலைப்பிறையானது பிறந்து ஒரு சில நிமிடங்கள்தான் பார்வைக்குத் தோன்றும். எனவே, எப்பகுதியில் முதலில் தெரிந்ததோ அவர்களுக்குத்தான் அது பொருந்தும். நள்ளிரவுக்கு அப்பாலும் தகவலை ஏற்க முடியாது என வாதிடுகின்றனர்.<br />
<br />
<strong><span style="color: blue;">விளக்கம்:</span> </strong>உங்கள் வாதத்தின் அடிப்படையில் இரவு 08.30 மணிக்குள் தகவல் வந்தால் மாத்திரம் ஏற்போம் என வாதிடுவது சரியா? உங்கள் விதிப்படி புத்தளத்தில் பிறைகண்டு அங்குள்ள பொறுப்புவாய்ந்தவர்களுக்கு வந்து சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு காட்டுவதற்கு அவகாசம் இருக்குமா? இல்லை அவர் நம்பகமான முஸ்லிம் என்பதை மட்டும் வைத்து அறிவிப்பீர்களா? வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயியோ, கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களோ பிறை கண்டதாக தாமதித்து வந்து சொன்னால் தகவலை ஏற்பீர்களா? அல்லது ‘கௌன்டர் குளோஸ்ட்’ என்று கூறி மறுப்பீர்களா? தகவலை ஏற்க முடியுமென்றால் நாம் ஏற்பது மாத்திரம் எவ்வகையில் தவறாகும்? எனவே, நள்ளிரவல்ல சுபஹுக்கு தகவல் வந்தாலும் அல்லது ஸுபஹுக்கு பின்னர் பிறை தகவல் வந்தாலும் அதனை ஏற்க வேண்டும் என்பதே நபிமொழியாகும்.<br />
<br />
<span style="color: blue;"><strong>விமர்சனம்:</strong></span> 29ம் நோன்பு முற்றுப் பெற்று பிறையைத் தேடியும் கிடைக்காமல் 30ம் நோன்பு நோற்றிருக்க, உலகில் எங்கிருந்தோ வந்த தகவல் அடிப்படையில் காலையில் அல்லது பகல் நேரத்தில் நோன்பை விடச் சொன்னால் நியாயமாகுமா?<br />
<br />
<strong><span style="color: blue;">விளக்கம்:</span> </strong>29வது நோன்பை நிறைவு செய்த பின்னர் பிறை கண்ட தகவல் கிடைக்குமாக இருந்தால் நோன்பை விட்டுவிட வேண்டும் என்பதுவே நபிமொழியில் நிரூபணமான விடயமாகும். நாம் வெளிநாட்டுத்தகவலின் அடிப்படையில் நோன்பை விடுவதா? இது என்ன புதிய விடயம் என வியக்கின்றனர். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றிருக்கையில் பிறை கண்ட தகவல் கிடைத்ததும் நோன்பை விட்டு விட்டு தொழுகைக்குச் செல்லுமாறு ஏவியுள்ளார்கள். எமது நாட்டிலும் தொலைபேசி மற்றும் தொழிநுட்ப வசதிகள் ஏற்பட முன்னர் இவ்வாறுதான் செயற்பட்டுள்ளார்கள். நோன்பு நோற்பதற்கு முன்னரே, அதாவது: இரவு 8.30 ற்குப் பிறகு வந்த செய்தியை ‘கௌன்டர் குளோஸ்ட்’ என்று கூறி ஏற்காமலிருப்பது பாவமான காரியமாகும். நேரம் சென்று அறிவித்தால் மக்கள் பெருநாள் ஏற்பாடுகள் செய்வது சிரமமாகிவிடும் என்பது காரணமா? அல்லது மனோ இச்சையா? பிடித்த நோன்பை பிறை கண்ட தகவல் கிடைத்தால் விடவேண்டுமென்பதுவே ஸுன்னாவாகும்.<br />
<br />
<span style="color: blue;"><strong>விமர்சனம்: </strong></span>‘ நோன்பு நீங்கள் நோற்கும் நாளில்தான். நோன்பை விடுவதும் நீங்கள் விடும் நாளில்தான். உழ்ஹிய்யா (ஹஜ்ஜுப் பெருநாள்) நீங்கள் கொடுக்கும் தினத்தில்தான் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி) என தெட்டத் தெளிவாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்க மக்களை விட்டும் தனித்துப் பெருநாள் கொண்டாடுவது ஹதீஸுக்கு முரணானதல்லவா?<br />
<br />
<strong><span style="color: blue;">விளக்கம்: </span> </strong>மேலுள்ள நபிமொழியிலிருந்து சில சகோதரர்கள் தமது மனோ இச்சைக்கு ஏற்றவாறு பல்வேறு வாதங்களை முன்வைக்கின்றனர். ஊருக்கு ஊர் பிறை, நாட்டுக்கொரு பிறை, கணிப்பின் அடிப்படையில் பிறையைத் தீர்மானித்தல் போன்றன அல்குர்ஆன், ஆதாரபூவர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தவாறனவைகளாகும். மேலும், தமக்கு ஏற்றவாறு நாடுகளை ஊர்களாக கருதிக் கொள்வதும் தவறானதாகும். ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் இலங்கை முழுவதற்கும் ஒரே பிறையை அமுல்படுத்த முடியும் என கூறுகின்றனர். இவர்கள் கூறுவது போன்று முழு இலங்கையையும் ஒரு ஊராகக் கருத முடியுமா?<br />
<br />
இன்று பிறையை வெற்றுக்கண்ணால் பார்க்காது கணிப்பின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என சிலர் வாதிடுகின்றனர். வேறு சிலரோ வலயத்திற்கு ஒரு பிறை என வாதிடுகின்றனர். எனவே, மக்கள் இவற்றை சரிகண்டால் இதனை அமுல்படுத்த முடியுமா? எனவே, மக்கள் எப்படி நோன்பை, பெருநாளை ஆரம்பிக்க வேண்டுமென அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் கூறப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே அவற்றை அமுல்படுத்த வேண்டும். மக்கள் நோன்பு நோற்கும் நாள் என்று கூறி நாம் நினைத்தவாறு வியாக்கியானம் கொடுக்காது, இஸ்லாம் காட்டிய வழிமுறையிலேயே மக்கள் ஒன்று சேர வேண்டுமென்பதையே மேலுள்ள நபிமொழி விளக்கி நிற்கின்றது.<br />
</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-92092723696152299802010-08-08T05:58:00.000-07:002010-08-08T05:58:54.592-07:00இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள்தானா?<div style="text-align: right;">முஹம்மட் அர்ஷாத் அல் அதரி</div><div> </div><div style="text-align: right;">arshathalathary@gmail.com</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> <span style="color: blue;"><em> </em></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><em>‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)</em></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் அது ஒரு போதும் அழ்ழாஹ்வால் வணக்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்கின்ற அடிப்படையை மனதில் இருத்தியவர்களாக இரவுத் தொழுகை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;"><span style="text-decoration: underline;">தராவீஹ் என்றால் என்ன?</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘தர்வீஹதுன்’ என்றால் ஓய்வு என்று பொருள்படும். ‘தர்வீஹதுன்’ என்பதன் பன்மையே தராவீஹ் ஆகும். தராவீஹ் தொழுகை என்றால் ‘ஓய்வுத் தொழுகைகள்’ எனப் பொருள்படும். ஆனால், தராவீஹ் என்ற சொற்பிரயோகம் அல்குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளோ பயன்படுத்தப்படவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">எனவே, இதிலிருந்து தராவீஹ் என்ற பெயர் பிற்பட்ட காலத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இரவுத் தொழுகை தொடர்பாக அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளில்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">1.கியாமுல் லைல் (இரவில் நிற்றல்)</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">2.ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">3. வித்ர் (ஒற்றபை;படை)</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">4.தஹஜ்ஜத் (விழித்தெழுந்து தொழும் தொழுகை) என ஒரே தொழுகைக்கு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதனால் இந்த தொழுகைகளை வெவ்வேறு தொழுகைகள் என சில மார்க்க அறிஞர்கள் தவறாக விளங்கியுள்ளனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">ரமழானுக்கு என்று விஷேட தொழுகைகள் உண்டா?</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நபிமொழிகளை ஆய்வு செய்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரழமான் அல்லாத காலங்களில் தொழுது வந்த 11 ரக்அத்களையே ரமழானிலும் தொழுதுள்ளார்கள். மாறாக, ரமழானுக்கு என்று எந்த விஷேட தொழுகைகளையும் கற்றுத் தரவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், ஏனைய மாதங்களை விட ரமழானில் தொழுவதற்கு அதிகமதிகம் ஆரவமூட்டியுள்ளார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">தஹஜ்ஜத்தும் தராவீஹும்</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சில மார்க்க அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகை வேறு, தராவீஹ் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். ஆனால், அவர்களின் வாதம் தவறானது என பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் பாதிவரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவிற்குத் தொழுதோம்’ (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷிர் (ரழி), நூல்: நஸயீ-1606, அஹ்மத்-18402)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 11 ரக்அத்களை, இரவில் வெவ்வேறு நேரங்களில் தொழுதுள்ளார்கள் என்பதை மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">இரவுத் தொழுகையும், வித்ரும்</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">சில மார்க்க அறிஞர்கள் வித்ர் தொழுகை வேறு, இரவுத் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். இந்த வாதமும் தவறானதாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழியில் வித்ர் என்கின்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் விட்டுவிடுவத னாலேயே ‘வித்ர்’ என்பது தனியானதொரு தொழுகை போன்று தோற்றமளிக்கின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘வித்ர்’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றைப்படை’ என்று பெருளாகும். எனவே, குறித்த நபிமொழியை ‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்’ என முழுமையாக மொழிபெயர்க்கும் போது இரண்டும் தனித்தனி தொழுகை என்கின்ற வாதம் தவறானது என்பது தெளிவாகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">இரவுத் தொழுகையின் ரக்அத்கள் எத்தனை? </span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஆனால், அன்னையவர்கள் ‘ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">தறாவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வாதிடக்கூடியவர்கள் எடுத்து வைக்கின்ற தவறான வாதங்களும் தக்க பதில்களும்</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: red;">தவறான வாதம்:</span></span> ‘உமர் (ரழி) அவர்களது காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுது வந்தோம்.’ (அறிவிப்பவர்:ஸாயிப் பின் யஸீத், நூல்: பைஹகீ-833)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">தக்க பதில்: </span></span></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">1.குறித்த செய்தியில் நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் சம்பந்தப்படவில்லை. மாறாக, உமர் (ரழி) அவர்கள் காலத்தில் நடந்ததாகவே குறித்த செய்தி குறிப்பிடுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">2.குறித்த செய்தியில் ‘அம்ரு பின் அப்துழ்ழாஹ்’ எனும் இயற்பெயருடைய ‘அபூஉஸ்மான் அல்பஸரி’ எனும் ‘யாரென்று அறியப்படாதவர்’ இடம்பெறுவதால் இச்செய்தி ஆதாரபூர்மற்றதாகும். மேலும் ‘ஸாயிப் பின் யஸீத்’ அவர்களே நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் 11 ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கக் கூடிய செய்தி ஆதாரபூர்வமாக இடம்பெற்றுள்ளது. ‘மக்களுக்கு பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரழி) அவர்கள் கட்ளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத், நூல்: முஅத்தா-379)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: red;">தவறான வாதம்:</span></span> ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்’ (அறிவிப்பவர்: யஸீத் பின் ரூமான், நூல்: பைஹகீ-4802, முஅத்தா-380)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">தக்க பதில்:</span></span> குறித்த செய்தியை அறிவிக்க கூடிய ‘யஸீத் பின் ரூமான்’ என்பவர் உமர் (ரழி) அவர்களது காலத்தில் பிறந்தவர் கிடையாது. எனவே, இச் செய்தி ஆதாரபூர்வமற்றது.<br />
<span style="color: red;"><br />
<span style="text-decoration: underline;">தவறான வாதம்:</span></span><span style="text-decoration: underline;"> </span>‘அழ்ழாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் ரமழான் காலத்தில் ஜமாஅத்தாக இல்லாது இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூற்கள்: பைஹகீ- அஸ்ஸுனனுல் குப்ரா-4799, தப்ரானி-அல்முஃஜமுல் கபீர்-10ஃ86, தப்ரானி-அல்முஃஜமுல் அவ்ஸத்-2ஃ309, 12ஃ176, முஸன்னப் இப்னு அபீஷைபா-2ஃ164, முஸ்னத் அப்து பின் ஹமீத்-1ஃ218)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">தக்க பதில்:</span></span> குறித்த செய்தி ஆதாரபூர்வமற்றது. மேற்குறித்த செய்தியை பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே, இச்செய்தியில் இடம்பெறும் அபூஷைபா எனப்படும் இப்றாஹிம் பின் உஸ்மான் என்பவர் இச்செய்தியை தனித்து அறிவிக்கின்றார். இவர் பலவீனமாவர் என்று குறிப்பிடுகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், குறித்த செய்தியில் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அடுத்து இடம்பெறக்கூடிய அறிவிப்பாளர் மிக்ஸம் என்பவராவார். மிக்ஸம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் ஹகம் என்பராவார். ஹகம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் அபூஷைபா எனப்படும் உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பவராவார். இவரைப்பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தைப் பற்றி, ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்ய மான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘இமாம் அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவுத் போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர் கிடையாது எனவும் இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது என்று இமாம் புஹாரி கூறியுள்ளார். இவர் நிராகரிக்கப்படும் செய்திகளை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டுள்ளதால் இவரை விட்டுவிட வேண்டுமென நஸாயி, தவ்லாபி போன்றோர் கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். யாரும் இவர் குறித்து பேசுவதில்லை. இவரது செய்திகளை விட்டுவிட்டனர் என அபூஹாத்தம் கூறியுள்ளார். இவர் மதிக்கத்தக்கவரல்ல என ஜவ்ஸஜானி கூறியுள்ளார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவரது செய்திகளை பதிவு செய்யக் கூடாதெனவும், இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல்வேறு செய்திகளை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என அபூஅலீ நைஸாபூரி கூறியுள்ளார். இவர் ஷுஹ்பா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் ஒருவர் என அல்அஹ்வஸ் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்-01, பக்கம்-125) எனவே, இது ஆதாரபூர்மற்ற செய்தியாகும்.<br />
<span style="text-decoration: underline;"><br />
<span style="color: red;">மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் 23 ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றதே?</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நாம் மார்க்க விடயத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான பொன்மொழிகளையும் மாத்திரமே. மாறாக, அழ்ழாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கட்டளையிட்டது கிடையாது. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’(அல்குர்ஆன் 07:03) இதில் ஆச்சரியம் என்னவென்றால், மக்காவில் கப்ரு வணக்கம், மௌலூத், ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் பாராயண நிகழ்வு, கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, தரீக்கா போன்ற வழிகேடுகள் கிடையாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், தப்லீக் ஜமாஅத் பகிரங்கமாக செயற்பட அனுமதி கூட கிடையாது. இவற்றிலெல்லாம் மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளாத இவர்கள் இரவுத் தொழுகை விடயத்தில் மாத்திரம் மக்காவை முன்னுதாரணமாகக் காட்டுவது இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">இரவுத் தொழுகையும் புதுவழியும்</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக பின்வரும் நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;">‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத்தொழுகையின் ரக்அத்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.</div><div style="text-align: justify;"><br />
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">எனவே, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் இரவுத் தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அழ்ழாஹ் அருள் புரிவானாக!</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-62309735903780255652010-08-08T05:55:00.000-07:002010-08-08T05:55:01.095-07:00மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம் – 02<div style="text-align: right;">முஹம்மட் அர்ஷாத் அல் அதரி<br />
arshathalathary@gmail.com</div><blockquote>‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.’ (அல்குர்ஆன் 17:01)</blockquote><div style="text-align: justify;"><em>சென்ற இதழின் தொடர்ச்சி…</em></div><div style="text-align: justify;"><br />
</div><div> </div><div style="text-align: justify;">கடந்த இதழில் ரஜப் மாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற பல்வேறு அநாச்சாரங்களையும், அதிசய யாத்திரையான விண்ணுலகப் பயணம் அல்இஸ்ரா, மிஃராஜ் என்கின்ற இருநிலைகளைக் கொண்டதெனவும் அவற்றில் அல்இஸ்ரா பற்றியும் நோக்கினோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவ்விதழில் மிஃராஜ் பற்றி சற்று விரிவாக நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
மிஃராஜ்: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டமையே மிஃராஜ் எனப்படுகின்றது. மிஃராஜ் தொடர்பாக பின்வரும் செய்தி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக் கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!’ என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார்அது?’ என்று வினவப்பட்டது அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்க, ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து)) சொல்லப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிறகு நான், ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார்அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி)’ அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலி ருந்து சொர்க்கம் புகுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, ‘அல்பைத்துல் மஃமூர்’ எனும் ‘வளமான இறையில்லம்’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘இதுதான் ‘அல் பைத்துல் மஃமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்’ என்று சொன்னார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்;ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்’ என்று சொன்னார்கள்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் மூசா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல ( நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அழ்ழாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3207)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா? </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்:அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;">மிஃராஜும் முஸ்லிம்களும்</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணமான மிஃராஜ் நிகழ்வு நபிகளாரின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகும். விண்ணுலகப் பயணத்தினை உறுதி செய்யும் வகையில் அருள்மறைக் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட இரவு தொடர்பான வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இது தொடர்பில் ஹதீஸ் கலை வல்லுனர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் மிகப் பாரியளவில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வாறாக, கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் விண்ணுலகப் பயணம் சென்ற நாளை நோன்பு நோற்றோ, அல்லது விஷேட இபாதத்துக்கள் மூலமோ கண்ணியப்படுத்தவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும், நபிகளார் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட நாளில் செய்வதற்கென விஷேடமான எந்தவொரு வணக்க வழிபாடுகளையும் கற்றுக் கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக் கொடுத் திருப்பார்களாயின் குறித்த அமலை நிறைவேற்றுவதற் காகவேனும், நபித்தோழர்கள் மிஃராஜ் இரவை நினைவில் வைத்திருப்பார்கள். தற்போது போன்று பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஆஷுரா நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளையினை நினைவில் வைத்திருந்த உத்தம நபித்தோழர்கள் ஆஷுரா நாள் முஹர்ரம் பத்திலேதான் என்பதனை ஒருமித்து அறிவித்தார்கள். எனவே, மிஃராஜ் நடந்த இரவுக்கென்று எந்தவொரு சிறப்பும் இல்லை. மாறாக, மிஃராஜ் நடந்ததை நம்புவதுதான் ஒரு இறைவிசுவாசியின் கடமையாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இறுதியாக, மிஃராஜ் நோன்பு மற்றும் மிஃராஜ் இரவில் விஷேட வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவோர் பின்வரும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.</div><div style="text-align: justify;"><br />
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள நபிமொழி மிஃராஜ் நோன்பு மற்றும் மிஃராஜின் பெயரால் உருவாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. எனவே, புதுவழிகளை விடுத்து நபிவழிகளை அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகள்; மூலம் அறிந்து பின்பற்றுவதற்கு அருளாளன் அழ்ழாஹ் அருள்புரிவானாக!</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4324661939698547550.post-43566832801677885542010-08-08T05:49:00.000-07:002010-08-08T05:49:04.338-07:00மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்- 01<div style="text-align: justify;"><span style="color: blue;">‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)</span></div><div style="text-align: justify;"><br />
</div><div> </div><div style="text-align: justify;"><b>ரஜப் புனிதமிக்க மாதம்</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது ‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அழ்ழாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற புனிதமான அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3197)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இவ்வாறாக அருள்மறைக் குர்ஆனும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிறப்பித்துக் கூறுகின்ற ரஜப் மாதத்திற்கென ஏதேனும் விஷேட வணக்க வழிபாடுகள் நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றதா? என நோக்குவோமாயின்இ திருமறைக் குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபி மொழிகளிலோ ரஜப் மாதத்திற்கென பிரத்தியேக வணக்க வழிபாடுகள் எதுவும் கற்றுத் தரப்படவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><b><span style="color: blue;"><span style="text-decoration: underline;">ரஜப் மாதமும் அரங்கேற்றப்படும் அநாச்சாரங்களும்</span></span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">எமது இஸ்லாமிய சமுதாய மக்களால்; ரஜப் மாதத்தின் பெயரால் பல்வேறு அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் கண்ணியமிகு மார்க்க அறிஞர்களால் ரஜப் மாதத்தின் பெயரால் மிம்பர் மேடைகளிலும் சொற்பொழிவுகளிலும் பல்வேறு ஆதாரபூர்வமற்ற செய்திகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் கூறப்படுகின்றன. அவ்வாறான ஆதாரபூர்வமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சிலவற்றை நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘நிச்சயமாக சுவனத்தில் ஓர் ஆறு உண்டு. அதற்கு ரஜப் என்று சொல்லப்படும். அதன் நீர் பாலை விடக் கடும் வெண்மையானதும்இ தேனைவிட சுவையானது மாகும். எவரொருவர் ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அழ்ழாஹ் அவ்வாற்றிலிருந்து நீர் புகட்டுவான்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இச் செய்தியில் ‘மூஸா மன்ஸுர் பின் யதீத்’ என்கின்ற யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘ரஜப் மாதம் வந்து விட்டால் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள். அழ்ழாஹ்வே ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் வெள்ளிக்கிழமை இரவு வெண்மையானதும் அதன் பகல் பசுமையானதும் எனக் கூறுவார்கள்.’ </span></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இச் செய்தியில் ‘ஸாயிதா பின் அபிர்ருக்காத்’ என்கின்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘ரஜப் மாதம் அழ்ழாஹ்வின் மாதமாகும். ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் எனது சமூகத்தினரின் மாதமாகும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;"> </span>இச் செய்தியில் இடம்பெறும் ‘அல்கமா’ என்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களி டமி ருந்து எதனையும் செவியுறவில்லை. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் ‘ஹிசாயி’ என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘ஏனைய மாதங்களோடு ஒப்பிடுகையில் ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்பை போன்றதாகும்.’ </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள செய்தியில் நபிமொழிகளை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம்களுக்கு மத்தியில் பிரபல்யமான ‘ஹிபத்துழ்ழாஹ் இப்னுல் முபாரக் அஸ்ஸக்தி’ என்பவர் இடம்பெறுவதால் இது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘நிச்சயமாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்குப் பின் ரஜபிலும் ஷஃபானிலும் நோன்பு நோற்பார்கள்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இச் செய்தியில் ‘யூசுப் பின் அதிய்யா’ என்கின்ற ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘ரஜப் மாதம் அழ்ழாஹ்வின் மாதமாகும். யார் ரஜப் மாதத்தின் ஒரு தினத்தில் ஈமானோடும்இ நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு மிகப்பெரும் இறைதிருப்தி கிடைப்பது கடமையாகி விடும்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபூஹாரூன்’ எனும் ‘மத்ரூக்’ ‘கைவிடப்பட்டவர்’ என ஹதீஸ்கலை அறிஞர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘யார் ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் மஃரிப் தொழுகையைத் தொழுது பின்னர் 20 ரக்அத்துகளைத் தொழுதுஇ ஒவ்வொரு ரக்அத்திலும் சூறா பாத்திஹாவையும் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஒரு தடவையும் ஓதி ஒவ்வொரு ரக்அத்திலும் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிகளை நீங்கள் அறிவீர்களா? என வினவிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது பொருளாதாரத்தையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பதோடு கப்ரின் வேதனையை விட்டும் அழ்ழாஹ் அவரைப் பாதுகாக்கின்றான். மேலும் அவர் எவ்வித வேதனையோ கேள்வி கணக்கோ இன்றி மின்னல் வேகத்தில் ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடந்து செல்வார் எனக் கூறினார்கள்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘எவரொருவர் ரஜப் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அழ்ழாஹ் எழுதி விடுகின்றான். ஒருவர் ஏழு தினங்கள் நோன்பு நோற்றால் அவரை விட்டும் நரகத்தின் ஏழு வாயில்களையும் மூடிவிடுகின்றான்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அம்ருப்னு அஸ்ஹர்’ பொய்யரென இமாம் ‘யஹ்யா இப்னு மயீன்’ மற்றுமுள்ள ஹதீஸ் கலை அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளதால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘நிச்சயமாக ரஜப் மாதம் மகத்தான மாதமாகும். யார்; அதில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஆயிரம் வருடங்கள் நோற்பு நோற்ற நன்மையை அழ்ழாஹ் எழுதுகின்றான்.’ </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘இஸ்ஹாக் பின் இப்றாஹிம் அல்குத்தலி’ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பலவீனமானவர் ஆகையால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: red;">‘எவரொருவர் ரஜப் மாதம் நோன்பு நோற்று அதில் நான்கு ரக்அத்துகள் தொழுதால் சுவனத்தில் அவரது தங்குமிடத்தைக் காணும் வரை அல்லது அவருக்கு காண்பிக்கப்படும் வரை மரணிக்கமாட்டார்.’</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இச்செய்தியில் இடம்பெறும் உஸ்மான் பின் அதாஃ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">ரஜப் மாதமும் விஷேட உம்ராக்களும்</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ரஜப் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் விஷேட உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர். உம்ரா பயணம் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே. ஆனால் அதனை ரஜப் மாதத்தில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியது எனக் கருதுவது நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மேலும் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய நபிமொழி ரஜப் மாதத்தை தெரிவு செய்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விஷேட உம்ராக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதனை தெளிவுபடுத்துகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">‘ ஆயிஷா (ரழி) அவர்களிடம் நான் (நபிகளாரின்; உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.’ (அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-1777)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="text-decoration: underline;"><span style="color: blue;">இஸ்ராவும் மிஃராஜும்</span></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையான மிஃராஜ் பயணம் ஓர் அற்புத நிகழ்வாக அமைந்திருக்கின்றது. அதிசய யாத்திரையான மிஃராஜ் பல்வேறு உண்மைகளை உணர்த்துவதோடு பலதரப்பட்ட படிப்பினைகளையும் யதார்த்தங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விண்ணுலக யாத்திரை அல்இஸ்ரா மிஃராஜ் என்கின்ற இருநிலைகளைக் கொண்டதாக காணப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;">1.அல்இஸ்ரா:</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீன் பூமியில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணமே இஸ்ரா என அழைக்கப் படுகின்றது. இஸ்ரா பற்றி அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில் ‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.’ (அல்குர்ஆன் 17:01)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;">2.மிஃராஜ்: </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டமையே மிஃராஜ் எனப்படுகின்றது. மிஃராஜ் பற்றி இன்ஷா அழ்ழாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்.</div><div style="text-align: justify;"><br />
</div>ARSHATHALATHARYhttp://www.blogger.com/profile/12800014056689302581noreply@blogger.com0